பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
11:07
சென்னை: இசட் தமிழ் தொலைக்காட்சியில், ஞானத்தைத் தேடி எனும், புதிய ஆன்மிக நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. இந்த தொலைக்காட்சியில், தினமும் காலை 7:00 முதல், 8:00 மணி வரை, ஒளிமயமான எதிர்காலம் எனும் ஆன்மிக நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது, ஞானத்தைத் தேடி எனும் புதிய பகுதி, நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி சாரதா பீடத்தின், 36வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகளின் அருளுரை, தினமும் காலை 7:45 முதல், 8:00 மணிக்குள் ஒளிபரப்பாகும். ஆன்மிகத்தின் ஆழமான கருத்துகளை, எளிய நடையில், சிருங்கேரி ஜகத்குரு எடுத்துரைக்கின்றனர்.