திருமலையில் ரெட் அலெர்ட்: புத்த கயா குண்டுவெடிப்பு எதிரொலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2013 11:07
திருப்பதி: பீகார் மாநிலம், புத்த கயாவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பின் எதிரொலியாக, திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும், உடனே திருமலையில், "ரெட் அலெர்ட் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அந்த வகையில், புத்த கயா தொடர் குண்டு வெடிப்புக்கு பின், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், திருமலையில் உள்ள பேருந்து நிலையம், "கியூ காம்பிளக்ஸ்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.