Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் புராணம் பகுதி-15 விநாயகர் புராணம் பகுதி-17 விநாயகர் புராணம் பகுதி-17
முதல் பக்கம் » விநாயகர் புராணம்
விநாயகர் புராணம் பகுதி-16
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 மார்
2011
03:03

அக்னிக்கும் வாயுதேவனுக்கு இருந்த அதே மனநிலையே இருந்தது. இருப்பினும், அவனும் தனது கடமையைச் செவ்வனே செய்தான். எங்கும் நெருப்பு பற்றி வெப்பம் தாளாமல் அலறினர். உலகங்கள் அனைத்தும் உருகிப்போயின. ஆனால், மகோற்கடன் அக்னியை நோக்கிப் புன்னகை செய்ய அது குளிர்ந்து போனது. கோபத்தை அக்னிக்கு ஒப்பிடுவார்கள். கோபப்படுபவர்களிடம் பதிலுக்கு கோபிக்காமல், பணிவுடன் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டால், அவர்களால் மீண்டும் கோபிக்க இயலாமல் அடங்கி விடுவார்கள். அப்படித்தான் அக்னி அயர்ந்து விட்டான். இப்போது, மகோற்கடனாகிய விநாயகர் இந்திரன் அருகே நெருங்கினார். விஸ்வரூபம் எடுத்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவருக்கு பத்தாயிரம் தலைகளும், லட்சக்கணக்கான உடலுறுப்புகளும் உருவாயின. அந்த பேருடலுக்குள் உலகமே அடங்கி நின்றதையும், தனது தேவலோகமும் அதில் ஒன்றாக இருப்பதையும் கண்ட இந்திரன் நடுங்கினான். மயக்கநிலைக்குச் சென்று விட்டான். அவன் விஸ்வரூப விநாயகரின் பாதங்களில் விழுந்தான். எம்பெருமானே! மன்னிக்க வேண்டும். நான் சின்னஞ்சிறுவன். உமக்குள் உலக உயிர்கள் அடைக்கலம் என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன். ஆணவத்தால் அறிவிழந்து பேசிய என் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும், என்று சரணடைந்ததும், விநாயகரும் மனம் குளிர்ந்தார். அவருக்கு வஜ்ராயுதம், அங்குசம், கற்பகத்தரு உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக அளித்த இந்திரன், அவரது விஸ்வரூபத்தை சுருக்கி, சாந்தியடையும்படி வேண்டினான். விஸ்வரூப விநாயகரும் மீண்டும் சிறுவனாக மாறினார். இதன்பிறகு, தேவாந்தக, நராந்தகரால் தேவர் உலகத்துக்கு ஏற்பட்டுள்ள இன்னல் பற்றி மகோற்கடனிடம் இந்திரன் எடுத்துரைத்தான். மகோற்கடன் அவனை ஆசிர்வதித்து, சிவபெருமான் கருணை மிக்கவர். வரம் கேட்பவர் யாரென்று பார்ப்பதில்லை. தன்னை வணங்குவோர் அனைவருக்கும் அவர் நன்மையே செய்கிறார். அதிலும் தேவாந்தக, நராந்தகர் சூரியனை கண் மூடாமல் பார்த்து தவம் செய்து வரம் பெற்றவர்கள். அவர்களுக்கு தன் சக்தியைத் தவிர பிறரால், அழியாவரத்தை அவர் அருளியிருக்கிறார். அவ்வரத்தைப் பயன்படுத்தி பெற்ற தீர்க்காயுளை அவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தியிருந்தால், அவர்கள் மேலும் ஆயுள் பெற்றிருப்பார்கள். ஆண்டவனிடமே பெற்ற அதிகாரமாயினும், அதைத் தவறாகப் பயன்படுத்துபவன் அழிந்து போவான். இந்திரா! நீ கவலைப்படாதே.

நான் விரைவில் காசி செல்லப் போகிறேன். அப்போது, தேவாந்தக, நராந்தகர் அழிவு நிகழும், என்றார். அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே, சொல்லி வைத்தாற்போல் காசிமன்னன் அங்கு வந்து சேர்ந்தான். அவர் காஷ்யபரை வணங்கி ஆசிபெற்று, மாமுனிவரே! எனது மகனுக்கு திருமணம் நடத்த நிச்சயித்துள்ளேன். தாங்களே தலைமைப் புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டான். காசிராஜா! நான் இப்போது அங்கு வரும் நிலையில் இல்லை. சாதுர்மாஸ்ய விரதம் துவங்கி விட்டது. இந்த நேரத்தில் முனிவர்கள் தீர்த்த யாத்திரை செல்வர். நானும் கிளம்பிவிட்டேன். என் மகன் மகோற்கடன் வேதமனைத்தும் உணர்ந்த ஞானி. அவனை உன்னோடு அனுப்புகிறேன். அவன் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பான், என்றார். வயதில் சிறியவன் என்றாலும், காஷ்யபரின் பிள்ளையல்லவா! தந்தையைப் போலவே மகனும் அறிவில் சிறந்தவனாக இருப்பான் என்பதை நம்பிய காசிராஜன், அவரைத் தனது தேரில் ஏற்றிக்கொண்டு, காசி நோக்கி விரைந்தான். செல்லும் வழியில், ஓரிடத்தில் அசுரன் ஒருவன், சூரியனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான். உலகத்திலேயே சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றைப் பெற வேண்டும் என்பதே அவனது நோக்கம். அவன் தேவாந்தக, நராந்தகருக்கு சித்தப்பா முறை வேண்டும். பெயர் தூமாட்சன். தேரில் சென்ற மகோற்கடன், அவனைப் பார்த்தார். ஆயுதத்தைப் பெற்று, உலகத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்க எண்ணிய அவனது கெட்ட நோக்கத்தைப் புரிந்துகொண்டார் மகோற்கடன். அந்நேரத்தில் அவனது தவம் நிறைவேறி, சூரிய பகவான் வானில் இருந்து அவன் கேட்ட ஆயுதத்தை கீழே போட்டார். அது அவனது கைகளில் அடைக்கலமாக பாய்ந்து வந்தது. அப்போது, தேரில் இருந்து பாய்ந்து வானில் பறந்தார் மகோற்கடன். ஆயுதத்தை வழியிலேயே பிடித்து மடக்கி, அது அந்த அசுரனின் கைகளுக்கு பதிலாக மார்பில் பாயும் வகையில் அவனை நோக்கி எறிந்தார். அவனை அந்த அம்பு தாக்கி அழித்தது. காசிராஜன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் தேவாந்தக, நராந்தகருக்கு தெரிந்தால் தன் தலை போய்விடும் என பயந்தான். ஏனெனில், அவன் அவர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசன், காசிராஜன் நடுங்கிய வேளையில் மகோற்கடன் அவனிடம் ஆறுதலாக, காசிராஜா கலங்காதே. காசியை நோக்கி தேரைச் செலுத்து, நான் பார்த்துக் கொள்கிறேன், என மகோற்கடன் சொல்லிவிட்டார்.

மகோற்கடன் சிறுவனாயிற்றே! அவன் விபரமறியாமல் பேசுகிறான் என்று எண்ணிய காசிராஜன், மகோற்கடரே! நீர் உடனே ஊருக்குப் போய்விடும். நான் தேவாந்தக, நராந்தகரிடம் மன்னிப்பு பெற்று உயிர் தப்பிக்கொள்கிறேன், என்றான்.  மகோற்கடன் ஆவேசமானார். காசிராஜா! என்ன இது! உன்னை நம்பியே என்னை என் தந்தை அனுப்பினார். இப்போது என்னை தனிமையில் திரும்பச் சொல்கிறாய். ஒரு வேளை அந்த தேவாந்தக, நராந்தகர் என்னை செல்லும் வழியில் தாக்கினால் என்ன செய்வாய்? என் தந்தையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை மறவாதே, என்று சத்தமாகச் சொன்னார். காசிராஜனுக்கு தர்மசங்கடமாகி விட்டது. ஒருபுறம் தேவாந்தக, நராந்தகர்... மறுபுறம் காஷ்யபர் ! என்ன செய்வது என்று திண்டாடிய காசிராஜனைத் தேற்றிய மகோற்கடன், காசி நோக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டார். தேர் மீண்டும் கிளம்பியது. இதற்குள் தேவாந்தக, நராந்தகருக்கு தங்கள் சித்தப்பா, ஒரு சிறுவனால் கொல்லப்பட்டார் என்பதை அறிந்து ஆச்சரியமும், கோபமும் அடைந்து அவனை பிடிக்கவும், காசிராஜன் தங்களுக்கு துரோகம் செய்து விட்டதால் அவனைக் கொன்று விடவும் வீரர்களுக்கு உத்தரவிட்டனர். முதலில் வந்த சில அசுரர்களை மகோற்கடன் வாயால் ஊதியே சுவர்களில் மோதச்செய்து கொன்று விட்டார். இதனால் மேலும் பலரை சிங்கம், யானை போன்ற பல உருவங்களாக எடுக்கச் செய்து அனுப்பி வைத்தனர். எல்லா அசுரர்களும் கொல்லப்பட்டனர்.இதற்குள் தேர் காசியை அடைந்து விட்டது. மகோற்கடனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மகோற்கடன் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியிருந்தார். அப்போது, மகோற்கடனால் கொல்லப்பட்ட அசுரன் தூமாட்சனின் மனைவி சிரம்பை என்பவள், மகோற்கடனின் அறை நோக்கி மாறுவேடத்தில் சென்றாள்.

 
மேலும் விநாயகர் புராணம் »
temple news
அடியே குடும்பினி! உன் நகைகளை எங்கே மறைத்து வைத்தாய்? நான் அதைக் கேட்பேன் என்று <உன் தாய் வீட்டுக்கு ... மேலும்
 
temple news
எமகிங்கரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ராஜாதி ராஜா! இந்த மனிதன், பூலோகத்தில் செய்யாத ... மேலும்
 
temple news
அந்த தபஸ்வியின் பெயர் சிவனன். பிருகு மகரிஷிக்கும் புலோமைக்கும் பிறந்த செல்வ புத்திரர். அவர், காட்டில் ... மேலும்
 
temple news
பிருகுவின் தவவலிமைக்கு அந்த பூதம் மதிப்பளித்து, முனிவரே! நான் ஒரு அந்தணன். முற்பிறவியில், இந்த ... மேலும்
 
temple news
அசுரேந்திரனின் மனதில் சற்றே நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன், குருவே! மரகதரைப் பற்றி கொஞ்சம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar