செவ்வாய் கிழமையன்று செவ்வாய் கிரகத்திற்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் சிவப்பு வஸ்திரம், சிவப்பு அரளி சாத்தி அர்ச்சனை செய்து துவரம் பருப்பு சாதம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். துவரையை சிவப்புத் துணியில் முடிந்து இயன்ற அளவு பணம், வெற்றிலை, பாக்கு சேர்த்து தானமாகக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் செவ்வாயின் அருள் பெறலாம்.