பதிவு செய்த நாள்
13
ஜூலை
2013
10:07
சிவகங்கை: பண்டைய பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்து பெருமை படைத்ததும், சித்தத்தை சிவன்பாலே வைத்த சித்தர் இடைக்காடர் பிறந்து வாழ்ந்த புண்ணிய பூமியான அழகிய பாண்டிய நல்லூர் என்ற இடைக்காட்டூர் என்ற புண்ணிய கிராமத்தில் நவக்கிரகங்களை திசைப்படி மாற்றிய இடைக்காடர் சித்தர் வழிபட்ட அருள்மிகு சவுந்தரநாயகி அம்மன் சமேத அருள்மிகு ஆழி மணிகண்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு நிகழும் மங்களகரமான விஜய வருடம் ஆனி மாதம் 30 ம் தேதி(14-7-13) ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதியும், உத்ர நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் இடைக்காடர் சித்தர் திருக்கோயிலுக்கும், அன்று காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் கன்னியா லக்னத்தில் அருள்மிகு சவுந்தரநாயகி அம்மன் சமேத அருள்மிகு ஆழிமணிகண்டேஸ்வரர் அருள்மிகு விநாயகர், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் ஆகிய சன்னதிகளுக்கும் மற்றும் பரிவார தெய்வ சன்னதிகளுக்கும் திருக்குட நன்னிராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது.
10-7-2013 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, தனபூஜை. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மாலை 5.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ரக்÷ஷாக்ன ஹோமம் நடைபெற்றது.
11.7. 2013 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், பிரசன்னாபிஷேகம், மாலை 5.00 மணிக்கு மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், மாலை 6.30 மணிக்கு கடஸ்தாபனம், முதற்காலயாக பூஜைகள், இரவு 9.00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெற்றது.
13.7.2013 சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், காலை 11.00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைகள், மாலை 6.00 மணிக்கு ஐந்தாம்கால யாக பூஜைகள், மஹாலெட்சுமி பூஜை, தீபஸ்தாபனம், இரவு 8.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெற்றது.
ஆனி மாதம் 30 ம் தேதி(14.7.2013) ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்கு ஆறாம்கால யாக பூஜைகள், காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்கு இடைக்காடர் சித்தர் திருக்கோயில் திருக்குட முழுக்கு, காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்கு கன்னியா லெக்னத்தில் சிவாலய திருக்குட முழுக்கு, மாலை 4.00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு திருவீதி உலா நடைபெறுகிறது.
கும்பாபிஷேக திருவிழாவை, வீ. சுந்தரமூர்த்தி எம். ஏ உதவி ஆணையர்/செயல் அலுவலர்/தக்கார், முனைவர். ந.தனபால் இணை ஆணையர், சிவகங்கை, திருப்பணிக்குழு தலைவர், திரு எம். எஸ். வடிவேல் பிள்ளை.மற்றும் கிராம பொதுமக்கள், இடைக்காட்டூர் ஆகியோர் சிறப்பாக நடத்துகின்றனர்.