பதிவு செய்த நாள்
13
ஜூலை
2013
10:07
பழநி: பழநி கோவிலில், இரண்டாம், "ரோப் கார் அமைக்க, உலகளாவிய, டெண்டர் விட, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ரோப்கார் அருகில், இரண்டாம் ரோப்கார், பல கோடி ரூபாய் செலவில் நிறுவ ஏற்பாடு நடக்கிறது. இதற்காக, தமிழக அரசு, 11 பேர் கொண்ட கமிட்டி அமைத்துள்ளது. இக் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பழநியில் நடந்தது. கமிட்டி உறுப்பினர்கள், ஆஸ்திரியா, இத்தாலியை சேர்ந்த வல்லுனர்கள், டில்லி உட்பட, வடமாநிலங்களை சேர்ந்த ரோப்வே தனியார் கம்பெனிகளின் வல்லுனர்கள் பங்கேற்றனர். இது குறித்து, இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறியதாவது: இரண்டாம் ரோப்கார் எவ்விதம் அமைக்க வேண்டும்; செலவு, பக்தர்களின் பாதுகாப்பு, தொழிற்நுட்பம் குறித்து, விவாதிக்கப்பட்டது. இரண்டாம் ரோப்காருக்கு, குளோபல் டெண்டர் கோரப்பட உள்ளது. கடந்த மாதம் விபத்துக்குள்ளான ரோப்காரில், ஜூலை 25ம் தேதி, புதிய, "ஷாப்ட் பொருத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்படும். வல்லுனர் குழு சான்றிதழ் அளித்த பின், இயக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.