பதிவு செய்த நாள்
13
ஜூலை
2013
11:07
மேட்டுப்பாளையம்: உண்மையான பக்தியுடன் வழிப்பட்டு வந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம், என, சாய்ராம் வாசுதேவன் பேசினார். மேட்டுப்பாளையம் அன்னபூரணி பேட்டை சத்ய சாய் சேவா சமிதியில், "சத்ய சாய்சப்தாஹ தேவாமிர்தம் சொற்பொழிவு நடந்து வருகிறது. நிகழ்ச்சியில், சென்னை வாசுதேவன் "சரணாகதி தத்துவம் என்ற தலைப்பில் பேசுகையில்,""சத்ய சாய் பாபாவிடம், ஸ்ரீ, புஷ்டி, காந்தி, துஷ்டி, கிர், சக்தி, ஹிலாதினி, ஊர்ஜசக்தி, மாயா சக்தி என ஒன்பது அம்ச குணங்கள் இருந்தன. அதனால், அவர் கடவுளுக்கு சமமாக உள்ளார். வெளி வேஷம் போட்டுக் கொண்டு சுவாமியை வணங்கக் கூடாது. உண்மையான பக்தியுடன் இருக்க வேண்டும். ""கடவுள் என்னுள் உள்ளார் என நினைக்க வேண்டும். ""சுவாமியின் பாதத்தை தொட்டு சரணாகதி அடைந்து வழிப்பட்டால், வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம், என்றார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.