Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நளதமயந்தி பகுதி-19 நளதமயந்தி பகுதி-21 நளதமயந்தி பகுதி-21
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-20
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 மார்
2011
05:03

பெண்களைஎந்தச் சூழலிலும் தங்கத்தின் மீதான ஆசை விடாது போலும்! கணவனுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையிலும், அந்த தங்கநிற பறவை மீது தமயந்தியின் கண்பட்டது.ராமபிரான் காட்டுக்குச் சென்ற போது, அந்தச் சிரமமான வாழ்க்கை நிலையிலும், தன் கண்ணில் பட்ட தங்க நிற மானைப் பிடித்துத் தரச்சொன்னாளே! சீதாதேவி...அது போல, தமயந்தியும் தன் கணவனிடம் குழைந்தாள்.அன்பரே! அந்தப் பொன்னிற பறவையைப் பார்த்தீர்களா! எவ்வளவு அழகாக இருக்கிறது! அதை எனக்குப் பிடித்துத் தாருங்களேன், என்றாள் கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும்.மங்கையரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் மாமலையும் ஆடவர்க்கு ஓர் கடுகாம் என்பார்களே! இவனுக்குப் பொறுக்குமா? தன் காதல் மனைவி, தனக்காக நாட்டையும், சுகபோகங் களையும், ஏன்...பெற்ற பிள்ளைகளைக் கூட மறந்து தன்னோடு காட்டில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என நடக்கிறாளே! அவளது துன்பத்தை மறக்க இந்த பறவை உதவுமென்றால், அதை பிடித்தாக வேண்டுமல்லவா! அவ்வளவு தானே! சற்றுப் பொறு தமயந்தி! நீ இங்கேயே இரு! அதை நான் நொடியில் பிடித்து வருகிறேன், எனச் சொல்லி விட்டு கிளம்பிவிட்டான் நளன்.கெட்ட நேரத்தின் உச்சக்கட்டமாய் வந்த அந்தப் பறவையை, சனீஸ்வரன் என அறியாமல் அதை நோக்கி பூனை போல் நடந்தான் நளன். அது கையில் சிக்குவது போல பாவனை காட்டியது. அவனது கை இறக்கைகளின் மேல் படவும், சுதாரித்துக் கொண்டு பறந்து போய் வேறு கள்ளிச் செடியில் அமர்ந்தது. நளன் அங்கே ஓடினான். அது மீண்டும் பழைய செடிக்கேவந்து அமர்ந்தது. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் சற்றுநேரம் தொடர்ந்தது.

என்னிடமா பாவ்லா காட்டுகிறாய்? உன்னைப் பிடிக்கும் கலை எனக்குத் தெரியும், என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன், தன் இடுப்பில் கட்டியிருந்த பட்டு வேட்டியை அவிழ்த்தான். தமயந்தியை அழைத்தான். பூங்கொடியே! உன் ஆடையை நாம் இருவரும் உடுத்திக் கொள்வோம். என்னுடைய ஆடையை இந்தக் கள்ளிச்செடியில் அமர்ந்துள்ள பறவையின் மீது போட்டு பிடித்து விடுவோமா! என்றான். அவளும் ஆர்வமாக சரியெனத் தலையாட்டினாள். தன் பட்டாடையை பறவையின் மேல் போட்டான். அவ்வளவு தான்! பறவை பட்டாடையுடன் உயரே பறக்க ஆரம்பித்து விட்டது. கவுபீனம் (கோவணம்) மட்டுமே அணிந்திருந்த நளன், ஐயோ! பறவை எங்கோ பறந்து போகிறதே! என்றவன், ஹோ...ஹோ... என கூச்சலிட்டு நின்றான். அந்தப் பறவை நடுவானில் நின்றபடியே, ஏ மன்னா! பொருளின் மீது கொண்ட பற்று காரணமாகத்தானே ஏற்கனவே நாட்டை இழந்தாய். இப்போதும், அந்த ஆசை விடவில்லையோ! தேவர்களைப் பகைத்து இந்த இளம் நங்கையை மணம் செய்து கொண்டவனே! புட்கரனுடன் சூதாடும் மனநிலையை உனக்கு உருவாக்கி,  உன்னை நாடு இழக்கச் செய்த சனீஸ்வரன் நானே! யார் ஒருவரை நான் பற்றுகிறேனோ, அவர்களின் மன உறுதியைச் சோதிப்பதே என் பணி. மனைவி, பொருட்களின் மீது ஆசைப்பட்டாலும், அவர்களுக்கு உரிய புத்திமதியைக் கனிவுடனும், கண்டிப்புடனும் சொல்வது கணவனின் கடமை. இல்லாவிட்டால், அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்ற சிறிய இலக்கணம் கூட தெரியாமல் இருக்கிறாயே! வருகிறேன், என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டது. விதியை எண்ணி வருந்தினான் அவன்.

ஒரு குடும்பத்தை அழிக்க மூன்று போதைகள் உலகில் உள்ளன. சூது, மது, மாது என்பவையே அவை. அதற்கு அடிமையானவர்கள் உடுத்திய துணியைக் கூட இழப்பது உறுதி. போதையில் தெருவில் ஆடையின்றி உருளும் எத்தனையோ ஜென்மங்களை இன்றும் பார்க்கத்தானே செய்கிறோம்! பணத்தாசையால் இன்றும் கூட விளையாட்டுகள் கூட சூதாக மாறி, இடுப்புத்துணியைக் கூட இழப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! இவர்களுக்காகத் தான் நளதமயந்தியின் வரலாற்றை வியாசர் மகாபாரதத்தின் கிளைக்கதையாக எழுதி வைத்தார். இதைப் போன்ற கதைகளை பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனதில் இளமையிலேயே நல்லெண்ணங்கள் பதியும். இதையெல்லாம் விட்டு, குழந்தைகளுக்கு போலிச்சான்று வாங்கக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனம் விஷமாகித்தானே போகும்! அவர்களெல்லாம், இன்று சனீஸ்வரனின் பிடிக்குள் சிக்கிக் கொண்டார்களே! கட்டிய துணியை இழந்த நளன், மனைவியின் ஆடையில் பாதியை வாங்கி உடுத்திக் கொண்டான். உடல் இரண்டாயினும் உயிர் ஒன்றாகட்டும் என்பார்களே! அப்படித்தான் நளதமயந்தி தம்பதியர் இருக்கிறார்கள். இப்போது ஆடையாலும் ஒன்றானார்கள். தமயந்திக்கு வயிற்றெரிச்சல் தாங்கவில்லை. சனீஸ்வரரையே சபிக்க ஆரம்பித்து விட்டாள். தர்மம் தவறி நடப்பவர்கள், பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வளர்பவர்கள், நெஞ்சில் ஈரமில்லாதவர்கள், மானத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாதவர்கள், தெய்வத்தை பழிப்பவர்கள், உழைப்பை நம்பாமல் பிச்சை கேட்பவர்கள்...இவர்களெல்லாம் நரகத்திற்குப் போய்ச் சேர்வர் என்கிறது சாஸ்திரம். ஏ சனீஸ்வரா! நீயும் இப்போது இந்த ரகத்தில் சேர்ந்துவிட்டாய். நீயும் நரகத்துக்குப் போவது உறுதி, என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-1 டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-2 டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-4 டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar