பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
சக்தி பீடங்களில் ஸ்ரீ வித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவியாய், முடியா பிறவியை முடித்து அருளும் அன்னைக்கு ஆடிப்பூர 9 ஆம் ஆண்டு உற்சவம் நடைபெறுகிறது. அகத்தியர், ஆதிசங்கரர், சங்கீத மும்மூர்த்திகள், ஞான சம்மந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் அம்பாளை அகமகிழ்ந்து போற்றி பாடியுள்ளனர். அன்னபூரணிக்கே அன்னையாய் விளங்குவதால் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு அன்னாபிஷேகமும், அன்னையின் திருவடி தரிசனத்தையும் அன்று காணலாம். இத்திருவடி சிறப்பை மாணிக்கவாசகர் விளமர் புறத்து அருள்மணி அடிபணிந்தவர் நிலையான பெரும் செல்வம் எய்தி நீடுலகில் நிலையாய் வாழ்வார்கள் என்றும், ஞானசம்மந்தர் அத்தக அடிகொடி அருள் கண்ணோடு உமையவள் என பாடியுள்ளனர். பெருமைவாய்ந்த இத்திருவடி தரிசனம் காண்பவர் சாப, பாவ விமோசனம் பெற்று முக்தி பெறுவர். இத்திருநாளில் அக்னி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை பாலூற்றி அவள் திருவடி தரிசனம் கண்டால் குறிப்பாக தடைபடும் திருமணம், குழந்தை இல்லாமை, பூரண நலம், செல்வ செழிப்பு பெறலாம். மாவிளக்கு மாவு, பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தால் சர்வ மங்களமும் பெற்று துயரம், துக்கங்கள் கலைந்து பிணிகள், பீடைகள் நீங்கி பேரானந்த வாழ்வு பெறலாம்.
கீழ்கண்டவாறு உற்சவ ஆராதனை நடைபெற இருக்கிறது.
1.8.13 வியாழன் விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி
2.8.13 வெள்ளி மாலை 6.45 மணிக்கு மதுரபாஷினிக்கு அபிஷேகம் இரவு 8 மணிக்கு உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு
3.8.13 சனி மாலை 6.45 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேம் இரவு 8 மணிக்கு உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு
4.8.13 ஞாயிறுமாலை 6.45 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேம் இரவு 8 மணிக்கு உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு
5.8.13 திங்கள்மாலை 6.45 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேம் இரவு 8 மணிக்கு உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு
6.8.13 செவ்வாய் மாலை 6.45 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேம் இரவு 8 மணிக்கு உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு
7.8.13 புதன்மாலை 6.45 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேம்இரவு 8 மணிக்கு உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு
8.8.13 வியாழன்மாலை 6.45 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேம் இரவு 8 மணிக்கு உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு
9.8.13 வெள்ளிகாலை 10 மணிக்கு பூர மகா அபிஷேகம் அமுதம் அளித்தல் இரவு 7மணிக்கு அம்பாளுக்கு மாவிளக்கு அளித்தல், புஷ்பாயஞ்சலி
10.8.13 சனிமாலை 6.45 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, விடையாற்றி.