பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
டேராடூன்: உத்தரகண்டில் ஏற்பட்ட பேரிடரில், கடும் பாதிப்பை சந்தித்துள்ள, கேதார்நாத் கோவிலில், பூஜைகள் எப்போது மேற்கொள்வது என்பது குறித்து, அடுத்த மாதம், 2ம் தேதி முடிவு செய்யப்படுகிறது. கடந்த மாதம், 16, 17ம் தேதிகளில் பெய்த பேய் மழை மற்றும் பெருவெள்ளத்தில், கேதார்நாத் கோவில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த மாதம், 17ம் தேதியிலிருந்து, அக்கோவிலின் மூலவரான சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெறவில்லை. கோவிலின் உட்புறத்தில் குவிந்து கிடந்த கற்கள் மற்றும் மண் குவியல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன; வெளிப்புறம் சீராக, இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கோவிலில் பூஜைகள் மேற்கொள்வது எப்போது என்பதை முடிவு செய்வதற்காக, மாநில காங்கிரஸ் முதல்வர், விஜய் பகுகுணா தலைமையில், பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் கமிட்டி உறுப்பினர்கள், மாநில அரசு அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் பங்கேற்கும் கூட்டம், டேராடூனில், 2ம் தேதி நடைபெற உள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், கோவிலில் பூஜைகள் தொடரும்.