பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தீ மிதித்து,நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் விழா, 23ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. அதிகாலை, 3:00 மணியளவில், பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பு நடந்தது. குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்தபின், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, அலகு குத்தி தேர் இழுத்தல், அம்மன் வீதி உலா நடக்கிறது; நாளை, அம்மன் குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், வாண வேடிக்கையும் நடக்கிறது.