பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே, நெடியம் கிராமத்தில் உள்ள மலையில் அமைந் துள்ள செங்கல்வராயன் முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பரணி காவடி விழா நடந்தது. நெடியம் கிராமம் அருகே அமைந்துள்ள கஜகிரி மலையில், செங்கல்வராயன் முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், பரணி கிருத்திகையை முன்னிட்டு, காலை மூலவர் முருகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று, வேங்கம்பேட்டை, கோனேற்றம் பேட்டை, நெடியம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று, பரணி காவடிசெலுத்தினர். பின், கோவில் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா வெங்கட்ராம செட்டி மற்றும் சண்முகம் ஐயர் ஆகியோர் செய்திருந்தனர்.