மதுரை காளவாசலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் பேச்சியம்மன் திருக்கோயில் உள்ளது. இதனாலே இப்பகுதி பேச்சியம்மன் படித்துறை என அழைக்கப்படுகிறது. இங்கே கொலுவிருக்கும் அம்மனை வழிபட தீவினைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி, பேச்சில் குறைபாடு உள்ளவர்கள், இங்கு வந்து பேச்சியம்மனை மனதார பிரார்த்தித்துச் சென்றால், விரைவில் பேசும் வல்லமை கிடைக்கும்.