புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் கீழாநிலை புதுக்கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்குள்ள அரிய நாயகி அம்மன் கோயில் பிரசித்தமானது. இப்பகுதியில் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் பேசி முடித்து விட்டால் அரிய நாயகி அம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுவர். கோயிலில் கவுளி (பல்லி சத்தம்) கேட்டால் அம்மன் உத்தரவு கொடுத்ததாக எண்ணி திருமணத் தேதியை நிச்சயிப்பர்.