ஈரோட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் காவேரி என்ற சிறு ஊர் உள்ளது. பொள்ளாச்சி ஆனைமலையில் மயானம் காக்கும் மாசாணியம்மன் போல ஈரோடு அருகே பள்ளி பாளையத்தில், காவேரிக் கரையில் உள்ள மயானத்தை காவல் காத்து வருகிறார், பெரியாயி. பெரியாயி என்றால் பெரியம்மா என்று பொருள். இவரை பேச்சி, கடைச்சி, பெரிய ஆண்டிச்சி என்ற பெயராலும் அழைக்கிறார்கள். பெரிய அரசமரத்தடியில் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் கூரை வேயப்பட்ட இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. ஐந்து தலை அரவத்தின் மீது 23 அடி நீளத்தில் மல்லாந்து படுத்த நிலையில் அம்மன் காட்சி தருகிறார். அருகே மண்ணால் செய்யப்பட்ட அம்மனின் 11 அடி நீள உருவமும் காணப்படுகிறது. அம்மன் சன்னதிக்கு எதிரே ஒரு கிணறும் உள்ளது. அருகில் ஐந்து தலை நாக உருவில் அங்காள பரமேஸ்வரி காட்சி தருகிறார். அதுதவிர சிவனைப் போன்ற தோற்றமுடைய ஒரு சிலை உள்ளது. இதை பெரியாண்டவர் என அழைக்கின்றனர். நந்தி, சிவன், முருகன், பெருமாள் ஆகிய தெய்வங்களும் இந்த வளாகத்தில் உள்ளன. இவ்வாலயத்தில் பக்தர்களின் காணிக்கையாக நூற்றுக்கணக்கில் வேல்கள் நடப்பட்டுள்ளன. முள்மரங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றது. மகாசிவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிசூரியனின் முதல் கோயில்
கும்பகோணம் அருகே உள்ள கீழச் சூரியமூலையில் அருள்பாலிக்கும் சூரிய கோடீஸ்வரரை தரிசித்து சூரிய பகவான் பிரதோஷ பலனை அடைந்தார். பொதுவாக சூரியனின் திருமேனி ஆலயத்தின் கிழக்குப் பிராகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூரில் உள்ள திருமூலநாத சுவாமி ஆலயத்தில் ராஜ கோபுரத்தின் உட்புறம், இடதுபுறம் தனியான ஒரு மாடத்தில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். சூரியனுக்கான முதல் கோயில், உதயகால். இளம் கதிர்களை வீசும் சூரியனுக்காக இது கட்டப்பட்டது. உதயாச்சலம் என்ற இடத்தில் இக்கோயில் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இரண்டாவது கோயில், உச்சிவேளை சூரியனுக்காக சந்திரபாகா நதிக்கரையில் கட்டப்பட்டது. இன்றைய ஜீனாப் நதியே, அன்றைய சந்திரபாகா. மூன்றாவது கோயில், மாலை நேரத்து சூரியனுக்குக் கட்டப்பட்டது. இது குஜராத் மாநிலத்தில் மொதோரா என்னும் இடத்தில் உள்ளது.றது. இந்த அம்மன் புத்திரபாக்கியம், திருமண பாக்கியம் அருள்வதில் வல்லவள் என பக்தர்கள் நம்புகின்றனர்.