Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முழுமுதற் கடவுளின் வழியிலே... மண்டையூர் முருகன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஈரோடு பெரியாயி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
04:08

ஈரோட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் காவேரி என்ற சிறு ஊர் உள்ளது. பொள்ளாச்சி ஆனைமலையில் மயானம் காக்கும் மாசாணியம்மன் போல ஈரோடு அருகே பள்ளி பாளையத்தில், காவேரிக் கரையில் உள்ள மயானத்தை காவல் காத்து வருகிறார், பெரியாயி. பெரியாயி என்றால் பெரியம்மா என்று பொருள். இவரை பேச்சி, கடைச்சி, பெரிய ஆண்டிச்சி என்ற பெயராலும் அழைக்கிறார்கள். பெரிய அரசமரத்தடியில் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் கூரை வேயப்பட்ட இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. ஐந்து தலை அரவத்தின் மீது 23 அடி நீளத்தில் மல்லாந்து படுத்த நிலையில் அம்மன் காட்சி தருகிறார். அருகே மண்ணால் செய்யப்பட்ட அம்மனின் 11 அடி நீள உருவமும் காணப்படுகிறது. அம்மன் சன்னதிக்கு எதிரே ஒரு கிணறும் உள்ளது. அருகில் ஐந்து தலை நாக உருவில் அங்காள பரமேஸ்வரி காட்சி தருகிறார். அதுதவிர சிவனைப் போன்ற தோற்றமுடைய ஒரு சிலை உள்ளது. இதை பெரியாண்டவர் என அழைக்கின்றனர். நந்தி, சிவன், முருகன், பெருமாள் ஆகிய தெய்வங்களும் இந்த வளாகத்தில் உள்ளன. இவ்வாலயத்தில் பக்தர்களின் காணிக்கையாக நூற்றுக்கணக்கில் வேல்கள் நடப்பட்டுள்ளன. முள்மரங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றது. மகாசிவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிசூரியனின் முதல் கோயில்

கும்பகோணம் அருகே உள்ள கீழச் சூரியமூலையில் அருள்பாலிக்கும் சூரிய கோடீஸ்வரரை தரிசித்து சூரிய பகவான் பிரதோஷ பலனை அடைந்தார். பொதுவாக சூரியனின் திருமேனி ஆலயத்தின் கிழக்குப் பிராகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூரில் உள்ள திருமூலநாத சுவாமி ஆலயத்தில் ராஜ கோபுரத்தின் உட்புறம், இடதுபுறம் தனியான ஒரு மாடத்தில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். சூரியனுக்கான முதல் கோயில், உதயகால். இளம் கதிர்களை வீசும் சூரியனுக்காக இது கட்டப்பட்டது. உதயாச்சலம் என்ற இடத்தில் இக்கோயில் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இரண்டாவது கோயில், உச்சிவேளை சூரியனுக்காக சந்திரபாகா நதிக்கரையில் கட்டப்பட்டது. இன்றைய ஜீனாப் நதியே, அன்றைய சந்திரபாகா. மூன்றாவது கோயில், மாலை நேரத்து சூரியனுக்குக் கட்டப்பட்டது. இது குஜராத் மாநிலத்தில் மொதோரா என்னும் இடத்தில் உள்ளது.றது. இந்த அம்மன் புத்திரபாக்கியம், திருமண பாக்கியம் அருள்வதில் வல்லவள் என பக்தர்கள் நம்புகின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar