Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவில் தங்கத்தை கைப்பற்ற ... குலச்சிறை நா‌யனார் குருபூஜை! குலச்சிறை நா‌யனார் குருபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.9 லட்சம் செலவில் தயாரான வெள்ளி விநாயகர்: கடலில் கரைக்க பக்தர்கள் தயார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 செப்
2013
10:09

சென்னை: ரூ. 9 லட்சம் ரூபாய் செலவில், நித்யானந்தா, சிவசேனா கட்சி மற்றும் பொதுமக்கள் நன்கொடையில் 19 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட வெள்ளி விநாயகர் சிலை, சென்னை புளியந்தோப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பில், பிரகாஷ்ராவ் காலனியில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இந்த ஆண்டு, அந்த காலனியில் 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தியை வித்தியாசமாக கொண்டாட தீர்மானித்த, பகுதிவாசிகள் மற்றும் சிவசேனா கட்சியினர், 9 லட்சம் ரூபாய் செலவில், 19 கிலோ எடையில், 3 அடி உயரம் கொண்ட வெள்ளி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இதுகுறித்த சிவசேனா மாநில அமைப்பாளர் கலைவாணன் கூறியதாவது: இந்த காலனியை சேர்ந்தோர், நித்யானந்தாவின் முதன்மையான சீடர்கள் என, பலரும் கொடுத்த நன்கொடையில், இந்த விநாயகரை உருவாக்கியுள்ளோம். இந்த விநாயகர் சிலை மூன்று மாதங்களுக்கு முன் நித்யானந்தரின் ஆசிரமம் மூலம் உருவாக்கப்பட்டது. வரும், 14ம் தேதி, வரை விநாயகர் சிலை பொதுமக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படும். அன்று மாலை, காசிமேட்டில், கடலில் படகு மூலம் 10 கி.மீ., தூரம் சென்று சிலை, கடலில் போடப்படும். அதற்காக, போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இந்த விநாயகருக்கு வினை தீர்க்கும் விநாயகர் என, பெயர் வைத்துள்ளோம். எங்கள் பகுதி மக்களின் நலனுக்காக, யாகம் செய்து, ரூ.9 லட்சம் செலவழித்து வெள்ளியில் தயாரித்த விநாயகரை கடலில் விடுகிறோம். அது யாருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு கடவுள் கொடுத்த வரம் என்று தான் நாங்கள் கருதுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து வெள்ளி விநாயகரை பார்க்க ஏராளமான பக்தர்கள், அங்கு சென்று வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar