நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் இயக்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2013 10:09
திருநெல்வேலி : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவ திருப்பதி திருத்தலங்கள் தரிசின சிறப்பு பஸ்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நவ திருப்பதி திருத்தலங்களுக்கு சிறப்பு தரிசன பஸ்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வரும் 21, 28ம் தேதிகள், அக்.5, 12ம் தேதிகளில் காலை 7 மணிக்கு புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படவுள்ளது. ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டைத் திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி மற்றும் வனத்திருப்பதி திருத்தலங்களுக்கு பஸ்கள் செல்லும். நவ திருப்பதி செல்ல விரும்புவோர் தினந்தோறும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டில் முன்பதிவு செய்யலாம். பயணக் கட்டணம் ரூ.300 மட்டும். இதுகுறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 94420-68477 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.