புதுச்சேரி: காமாட்சி அம்மன் கோவிலில், அம்மனுக்கு மாங்கல்ய தாரண மகோற்சவம் நேற்று நடந்தது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவிலில், சில மாதங்களுக்கு முன்பு 8 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட அம்மன் தாலி காணா மல் போனது. கோவில் நிர்வாகம் சார்பில், புதிதாக தாலி செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில், அம்மன் தாலி திருடப்பட்டுவிட்டதாக, சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனால், 21 கிராமில் புதிதாக அம்மன் தாலி செய்யப்பட்டது. புதிய தாலியை அம்மனுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி (மாங்கல்ய தாரண மகோற்சவம்) நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 5.00 மணிக்கு வித்யா நவா வர்ணா பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு புதிய தாலி அணிவிக்கும் வைபவம் நடந்தது. பின்பு வல்வா கணபதி ஹோமம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.