திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங் குகிறது. 14-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஒரே நாளில் 5 தேர்கள் இழுக்கப்படுவதால் அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து தேரோட் டம் நடக்கும். கார்த்திகை தீப திருவிழா வின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் 17-ந்தேதி ஏற்றப் படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலைஉச்சி யில் மகாதீபமும் ஏற்றப்படு கிறது. மகாதீபத்தை காண 20 லட்சம் பக்தர்கள் திருவண் ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி றது. கார்த்திகைதீப திருவிழா நெருங்கி விட்டதால் மகா தீபம் ஏற்றும் கொப்பரையை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.