Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புகழ் பகுதி-13 திருப்புகழ் பகுதி-2 திருப்புகழ் பகுதி-2
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-14
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மார்
2011
12:03

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நான்காம் பகுதி

சேலம்

949. பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற்  றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத்  தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித்  தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற்  றணைவாயே

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
தொடுகும ராமுத்  தமிழோனே
கிளரொளி நாதர்க கொருமக னாகித்
திருவளர் சேலத்  தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத்
தனிமயி லேறித்  திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளயவி நோதப்  பெருமாளே.

ராஜபுரம் (சேலம் சூரமங்கலம் அருகில்)

950. சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
தண்டு மாகரி பெற்றவன்  வெகுகோடிச்
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி
சண்ட மாருத மற்றுள  கவிராஜப்

பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர
பந்த போதமு ரைத்திடு  புலவோன்யான்
பண்டை மூவெழ வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில
பஞ்ச பாதக ரைப்புகழ்  செயலாமோ

வெங்கை யானைவ னத்திடை துங்க மாமுத லைக்குவெ
ருண்டு மூலமெ னக்குரு  டனிலேறி
விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி
தம்ப ராவஅ டுப்பவன்  மருகோனே

கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு
கொங்கின் வீரக ணப்ரிய  குமராபொற்
கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி
கொங்கு ராஜபு ரத்துறை  பெருமாளே.

விஜய மங்கலம் (திருப்பூர்-ஈரோடு நடுவில்)

951. கலக சம்ப்ர்மத் தாலேவி லோசன
மலர்சி வந்திடப் பூணார மானவை
கழல வண்டெனச் சாரீரம் வாய்விட  அபிராமக்
கனத னங்களிற் கோமாள மாகியெ
பலந கம்படச் சீரோடு பேதக
கரண முஞ்செய் துட் பாலூறு தேனித  ழமு தூறல்

செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர
நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்
செருகு முந்தியிற் போய்வீழு மாலுட  னநுராகந்
தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி
லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்
திடினு நின்கழல் சீர்பாத நானினி  மறவேனே

உலக கண்டமிட் டாகாச மேல்விரி
சலதி கண்டிடச் சேராய மாமவ
ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில்  மகவாயும்
உணர்சி றந்தசக் ராதார நாரணன்
மருக மந்திரக் காபாலி யாகிய
உரக கங்கணப் பூ தேசர் பாலக  வயலூரா

விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
விடுவிடென் றுகைக்கூர்வேலையேவிய  இளையோனே
விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய
வுரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
விஜய மங்கலத் தேவாதி தேவர்கள்  பெருமாளே.

சிங்கை (காங்கேயம்)

952. சஞ்சரியு கந்து நின்றுமுதல் கின்ற 
தண்குவளை யுந்து  குழலாலும்
தண்டரள தங்க மங்கமணி கின்ற
சண்டவித கும்ப  கிரியாலும்

நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
நம்பிவிட நங்கை  யுடனாசை
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி  வரவேணும்

கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற  கழலோனே
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
கண்டுபொரு கின்ற  கதிர்வேலா

செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த  திருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த  பெருமாளே.

953. சந்திதொறு நாண மின்றியகம் வாடி
உந்திபொரு ளாக  அலைவேனோ
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
தங்கள்வச மாகி  அலையாமல்

சுந்தரம தாக எந்தன்வினை யேக
சிந்தைகளி கூர  அருள்வாயே
தொங்குசடை மீது திங்களணி நாதர்
மங்கைரண காளி  தலைசாயத்

தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
என்றுநட மாடு  மவர்பாலா
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
மங்களம தாக  அணைவோனே

கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
அந்தமுனை வேல்கொ  டெறிவோனே
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
சங்கைநகர் மேவு  பெருமாளே.

சிவமலை-பட்டாலியூர்

954. இருகுழை யிடறிக் காது மோதுவ
பரிமள நளினத் தோடு சீறுவ
இணையறு வினையைத் தாவி மீளுவ  வதிசூர
எமபடர் படைகெட் டோட நாடுவ
அமுதுடன் விடமொத் தாளை யீருவ
ரதிபதி கலைதப் பாது சூழுவ  முனிவோரும்

உருகிட விரகிற் பார்வை மேவுவ
பொருளது திருடற் காசை கூறுவ
யுகமுடி விதெனப் பூச லாடுவ  வடிவேல்போல்
உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்
மயல்தரு கமரிற் போய்வி ழாவகை
உனதடி நிழலிற் சேர வாழ்வது  மொருநாளே

முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
மரகத கிரணப் பீலி மாமயில்
முதுரவி கிரணச் சோதி போல்வய  லியில்வாழ்வே
முரண்முடி யிரணச் சூலி மாலினி
சரணெனு மவர்பற் றான சாதகி
முடுகிய கடினத் தாளி வாகினி  மதுபானம்

பருகினர் பரமப் போக மோகினி
அரகர வெனும்வித் தாரி யாமளி
பரிபுர சரணக் காளி கூளிகள்  நடமாடும்
பறையறை சுடலைக் கோயில் நாயகி
இறையொடு மிடமிட் டாடு காரணி
பயிரவி யருள்பட் டாலமி யூர்வரு  பெருமாளே.

955. கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
கற்பூர களப மணிவன  மணிசேரக்
கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன
கச்சோடு பொருது நிமிர்வன  தனமாதர்

கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
கொற்சேரி யுலையில் மெழுகென  வுருகாமே
கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன் முயல்
குற்றவேல் அடிமை செயும்வகை  யருளாதோ

அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
லச்சான வயலி நகரியி  லுறைவேலா
அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
டக்காகி விரக பரிபவ  மறவேபார்

பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
பற்றாய பரம பவுருஷ  குருநாதா
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
பட்டாலி மருவு மமரர்கள்  பெருமாளே.

956. சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
சங்கற்பித் தோதும் வெகுவித  கலைஞானச்
சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
சம்பத்துக் கேள்வி யலமல  மிமவானின்

மங்கைக்குக் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
வந்திக்கப் பேசி யருளிய  சிவநூலின்
மந்த்ரப்ரஸ்த் தார தரிசன ய்நத்ரத்துக் கேள்வி யலமலம்
வம்பிற்சுற் றாது பரகதி  யருள்வாயே

வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப்போக விடவல
வென்றிச்சக் ரேசன் மிகமகிழ்  மருகோனே
வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை  வயலூரா

கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
கொண்டைக்கொப் பாகும் முகிலென  வனமாதைக்
கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச் சொற் பாடுமிளையவ
கொங்கிற்பட் டாலி நகருறை  பெருமாளே.

திருமுருகன்பூண்டி

957. அவசியமுன் வேண்டிப்  பலகாலும்
அறிவினுணர்ந் தாண்டுக்  கொருநாளில்
தவசெபமுந் தீண்டிக்  கனிவாகிச்
சரணமதும் பூண்டற்  கருள்வாயே
சவதமொடுந் தாண்டித்  தகரூர்வாய்
சடுசமயங் காண்டற்  கரியானே
சிவகுமரன் பீண்டிற்  பெயரானே
திருமுருகன் பூண்டிப்  பெருமாளே.

அவிநாசி

958. இறவாமற் பிறவாமல் - எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான - பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே - குகனேசொற் குமரேசா
அறநாலைப் புகல்வோனே - அவிநாசிப் பெருமாளே.

959. பந்தப்பொற் பாரப யோதர
முந்திச்சிற் றாடகை மேகலை
பண்புற்றுத் தாளொடு மேவிய  துகிலோடே
பண்டெச்சிற் சேரியில் வீதியில்
கண்டிச்சிச் சாரொடு மேவியெ
பங்குக்கைக் காசுகொள் வேசியர்  பனிநீர்தோய்

கொந்துச்சிப் பூவணி கோதையர்
சந்தச்செத் தாமரை வாயினர்
கும்பிட்டுப் பாணியர் வீணிய  ரநுராகம்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு
மண்டிச்செச் சேயென வானவர்
கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை  மறவேனே

அந்தத்தொக் காதியு மாதியும்
வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
அண்டத்துப் பாலுற மாமணி  யொளிவீசி
அங்கத்தைப் பாவைசெய் தாமென
சங்கத்துற் றார்தமி ழோதவு
வந்துக்கிட் டார்கழு வேறிட  வொருகோடிச்

சந்தச்செக் காளநி சாசரர்
வெந்துக்கத் தூளிப டாமெழ
சண்டைக்கெய்த் தாரம ராபதி  குடியேறத்
தங்கச்செச் கோலசை சேவக
கொங்கிற்றொக் காரவி நாசியில்
தண்டைச்சிக் காரயில் வேல்விடு  பெருமாளே.

960. மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை  தடுமாறி
வருத்த முந்தர தாய்மனை யாள்மக
வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின  நகையாட

எனைக்க டந்திடு பாசமு மேகொடு
சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய  முறவேதான்
இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
பிடிக்க முன்புன தான்மல ராகிய
இணைப்ப தந்தர வேமயில் மீதினில்  வரவேணும்

கனத்த செந்தமி ழால்நினை யேதின
நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
கருத்தி ருந்துறை வாயென தாருயிர்  துணையாகக்
கடற்ச லந்தனி லேயொளி சூரனை
யுடற்ப குந்திரு கூறென வேயது
கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில்  விடும்வேலா

அனத்த னுங்கம லாலய மீதுறை
திருக்க லந்திடு மாலடி நேடிய
அரற்க ரும்பொருள் தானுரை கூறிய  குமரேசா
அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய  பெருமாளே.

திருப்புக்கொளியூர் (அவிநாசி அருகில்)

961. பக்குவ வாசார லட்சண சாகாதி
பட்சண மாமோன  சிவயோகர்
பத்தியி லாறாது தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதார  நிலையாக

அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான  வுபதேசம்
அக்கறை வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாத  மறவேனே

உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி  மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
யுற்பல ராசீவ  வயலூரா

பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரனப யாகார  அவிநாசிப்
பொய்க்கூலி மோமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு  பெருமாளே.

962. மதப்பட்டவி சாலக போலமு
முகப்பிற்சன வாடையு மோடையு
மருக்கற்புர லேபல லாடமு  மஞ்சையாரி
வயிற்றுக்கிடு சீகர பாணியு
மிதற்செக்கர்வி லோசன வேகமு
மணிச்சத்தக டோபுர ரோசமு  மொன்றுகோல

விதப்பட்டவெ ளாயினையி லேறியு
நிறைக்கற்பக நீழலி லாறியும்
விஷத்துர்க்கன சூளிகை மாளிகை  யிந்த்ரலோகம்
விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு
பிரப்புத்வகு மாரசொ ரூபக
வெளிப்பட்டனை யாள்வய லூரிலி  ருந்தவாழ்வே

இதப்பட்டிட வேகம லாலய
வொருத்திக்கிசை வானபொ னாயிர
மியற்றப்பதி தோறுமு லாவிய  தொண்டர்தாள
இசைக்கொக்கவி ராசத பாவனை
யுளப்பெற்றொடு பாடிட வேடையி
லிளைப்புக்கிட வார்மறை யோனென  வந்துகானிற்

றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
யவிழ்த்திட்டவி நாசியி லேவரு
திசைக்குற்றச காயனு மாகிம  றைந்துபோமுன்
செறிப்பித்தக ராவதின வாய்மக
வழைப்பித்தபு ராணக்ரு பாகர
திருப்புக்கொளி யூருடை யார்புகழ்  தம்பிரானே.

963. வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்
அழைக்கப்பொரு மார னேவ தாமலர்
மருத்துப்பயில் தேரி லேறி மாமதி  தொங்கலாக
மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை
பெருக்கப்படை கூடி மேலெ ழாவணி
வகுத்துக்கொடு சேம மாக மாலையில்  வந்துகாதிக்

கணக்கப்பறை தாய ளாவ நீள்கன
கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள்
களித்துப்பொர வாசம் வீசு வார்குழல்  மங்கைமார்கள்
கலைக்குப்படு பேத மாகி மாயும
துனக்குப்ரிய மோக்ரு பாக ராஇது
கடக்கப்படு நாம மான ஞானம  தென்றுசேர்வேன்

புனத்திற்றினை காவ லான காரிகை
தனப்பொற்குவ டேயு மோக சாதக
குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர்  நன்குமாரா
பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்
சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்
புயத்துற்றணி பாவ சூர னாருயிர்  கொண்டவேலா

சினத்துக்கடி வீசி மோது மாகட
லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி
தெறிக்கக்கணை யேவு வீர மாமனும்  உந்திமீதே
செனித்துச்ச துர் வேத மோது நாமனு
மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி
திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள்  தம்பிரானே.

பேரூர்

964. தீராப் பிணிதீர - சீவாத் துமஞான
ஊராட் சியதான - ஓர்வாக் கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே - பாலாக் கிரிராசே
பேராற் பெரியோனே - பேரூர்ப் பெருமாளே.

965. மைச்ச ரோருக நச்சு வாள்விழி
மானா ராடே நானார் நீயா  ரெனுமாறு
வைத்த போதக சித்த யோகியர்
வாணாள் கோணாள் வீணாள் காணா  ரதுபோல

நிச்ச மாகவு மிச்சை யானவை
நேரே தீரா வூரே பேரே  பிறவேயென்
நிட்க ராதிகண் முற்பு காதினி
நீயே தாயாய் நாயேன் மாயா  தருள்வாயே

மிச்ச ரோருக வச்ர பாணியன்
வேதா வாழ்வே நாதா தீதா  வயலூரா
வெற்பை யூடுரு வப்பட டாவரு
வேலா சீலா பாலா காலா  யுதமாளி

பச்சை மாமயில் மெச்ச வேறிய
பாகா சூரா வாகா போகா  தெனும்வீரா
பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
பாரூ ராசூழ் பேரூ ராள்வார்  பெருமாளே.

கொடும்பாளூர் (விராலிமலை அருகில்)

966. கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
கடனபயம் பட்டுக்  கசடாகும்
கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
கலகலெனுங் கொட்புற்  றுடன்மோதும்

அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
றரவியிடந் தப்பிக்  குறியாத
அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
றருள்வசனங் கிட்டப்  பெறலாமோ

கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
கொடிமருவுஞ் செச்சைப்  புயமார்பா
கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
குரைகடல்செம் பச்சக்  கரவாளச்

சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினுந் தத்தச்  செகமேழும்
திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
திறலகொடும் பைக்குட்  பெருமாளே.

கீரனூர் (பழநி அருகில்)

967. ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்
நாத கீதந டிப்பிலு ருக்கவும்
ஏவ ராயினு மெத்திய ழைக்கவு  மதராஜன்
ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும்
வீதி மீதுத லைக்கடை நிற்கவும்
ஏறு மாறும னத்தினி னைக்கவும்  விலைகூறி

ஆர பார தனத்தைய சைக்கவு
மாலை யோதிகு லைத்துமு டிக்கவும்
ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும்  அதிமோக
ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு
மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும்
ஆன தோதக வித்தைகள் கற்பவ  ருறவாமோ

பார மேருப ருப்பத மத்தென
நேரி தாகஎ டுத்துட னட்டுமை
பாக ராரப டப்பணி சுற்றிடு  கயிறாகப்
பாதி வாலிபி டித்திட மற்றொரு
பாதி தேவர்பி டித்திட லக்ஷúமி
பாரி சாதமு தற்பல சித்திகள்  வருமாறு

கீர வாரிதி யைக்கடை வித்ததி
காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
பாளு வாகிய பச்சுரு வச்சுதன்  மருகோனே
கேடி லாவள கைப்பதி யிற்பல
மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய
கீர னூருறை சத்தித ரித்தருள்  பெருமாளே.

குளந்தைநகர் (தேனி-பெரியகுளம் அருகில்)

968. தரங்க வார்குழற் றநுநுதல்  விழியாலம்
தகைந்த மாமுலைத் துடியிடை  மடமாதர்
பரந்த மாலிருட் படுகுழி  வசமாகிப்
பயந்து காலனுக் குயிர்கொடு  தவியாமல்

வரந்த ராவிடிற் பிறரெவர்  தருவாரே
மகிழ்ந்து தோகையிற் புவிவலம்  வருவோனே
குரும்பை மாமுலைக் குறமகண்  மணவாளா
குளந்தை மாநகர்த் தளியுறை  பெருமாளே.

தனிச்சயம் (மதுரையின் மேற்கில் உள்ளது)

969. இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
கிதத்தபுட் குரற்கள்விட்  டநுராகம்
எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்
தெடுத்திகழ்க் கடித்துரத்  திடைதாவி

அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்
தலக்கணுற் றுயிர்க்களைத்  திடவேதான்
அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
டயர்க்குமிப் பிறப்பினித்  தவிராதோ

கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
கொடித்திருக் கரத்தபொற்  பதிபாடும்
குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரவுத்துவக் கவித்துவக்
குருத்துவத் தெனைப்பணித்  தருள்வோனே

தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
தமிழ்த்ரயத் தகத்தியற்  கறிவோதும்
சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
தனிச்சயத் தினிற்பிளைப்  பெருமாளே.

970. உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட்  குருடாகி
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித்  தமுமேல்கொண்

டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
பழுத்து ளஞ்செயல் வசனம்வ ரம்பற்
றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித்  தனைவோரும்
அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
கவத்தை வந்துயி ரலமரு மன்றைக்  கருள்வாயே

திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட்  டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
டிடக்கை துந்துமி முரசுமு ழங்கச்
செருக்க ளந்தனில் நிருதர்த யங்கச்  சிலபேய்கள்

தரித்து மண்டையி லுதிரம ருந்தத்
திரட்ப ருந்துக்கள் குடர்கள்பி டுங்கத்
தருக்கு சம்புகள் நிணமது சிந்தப்  பொரும்வேலா
தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்
படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப்  பெருமாளே.

மதுரை

971. அலகில வுணரைக் கொன்ற தோளென
மலைதொளை யுருவச் சென்ற வேலென
அழகிய கனகத் தண்டை சூழ்வன  புண்டரீக
அடியென முடியிற் கொண்ட கூதள
மெனவன சரியைக் கொண்ட மார்பென
அறுமுக மெனநெக் கென்பெலாமுரு  கன்புறாதோ

கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்கவாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய  பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி  ருந்தவாறென்

இலகுக டலைகற் கண்டு தேனொடு
மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்
இனிமையி னுகருற் றெம்பி ரானொரு  கொம்பினாலே
எழுதென மொழியப் பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று தாதையை  யன்றுசூழ

வலம்வரு மளவிற் சண்ட மாருத
விசையினும் விசையுற் றெண்டி சாமுக
மகிதல மடையக் கண்டு மாசுண  முண்டுலாவு
மரகத கலபச் செம்புள் வாகன
மிசைவரு முருகச் சிம்பு ளேயென
மதுரையில் வழிபட் டும்பரார் தொழு  தம்பிரானே.

972. ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த  கமரேசா
ஆதயிர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த  குருநாதா

தானவர்கு லத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர்மி குத்த  திறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடுசி றக்க  அருள்வாயே

வானெழுபு விக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு  மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமைக ளிக்க
மாமயில்ந டத்து  முருகோனே

தேனெழுபு னத்தில் மான்விழிகு றத்தி
சேரமரு வுற்ற  திரள்தோளா
தேவர்கள்க ருத்தில் மேவியப யத்தை
வேல்கொடுத ணித்த  பெருமாளே.

973. பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி  யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது  நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசைத ரும்பத  மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழவ ரங்களு  மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர்ப ணிந்திட  மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித  மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு  மணிமார்பா
கனகமி கும்பதி மதுரைவ ளம்பதி
யதனில்வ ளர்ந்தருள்  பெருமாளே.

974. பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் அளவளப்  பதனாலே
படுக்கை வீட்டினு ளவுஷத முதவுவர்
அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்
பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென அவரவர்க்  குறவாயே

அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்
அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு நரகினிற்  சுழல்வேனோ
அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்
விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை
அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து கதிதனைத்  தருவாயே

தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள
குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு
தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த முருகவித்  தகவேளே
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு மருமகப்  பரிவோனே

செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது
பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி
செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை மணமதுற்  றிடுவோனே
திறத்தி னாற்பல சமணரை புதுமையை யினிதொடு
கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு
திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைகரும் அறுமுகப்  பெருமாளே.

975. சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக
மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ
தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென  தொங்கலாரஞ்
சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு
வாசை நேசமும்வி ளைந்துஇடை யுற்றவரி
சேலைகாலில்விழவிட்டுநடை யிடபுடமயி  லின்கலாபச்

சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை
யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி
சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவார்கள்  பங்கினூடே
தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை
பாவ மானபிற விக்கடலு ழப்பனை
தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது  மெந்தநாளோ

வாத வூரனைம தித்தொருகு ருக்களென
ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை
வாசி யாமெனந டத்துவகை யுற்றரச  னன்புகாண
மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை
யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்தமகிழ்
மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள்  கந்தவேளே

வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி
பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற
வேலை யேவியவு ணக்குலவி றக்கநகை  கொண்டசீலா
வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு
ராம ரீணமயி லொக்கர்மது ரைப்பதியின்
மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி  தம்பிரானே.

976. புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி
யெறியக் கொங்கையி ரண்டெனு மதகிரி
பொரமுத் தந்தரு மிங்கித நயவித  மதனாலே
புகலச் சங்கிசை கண்டம தனிலெழ
உருவச் செந்துவர் தந்தத ரமுமருள்
புதுமைத் தம்பல முஞ்சில தரவரு  மனதாலே

பருகித் தின்றிட லஞ்சுக மெனமன
துருகிக் குங்கும சந்தன மதிவியர்
படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல  வியினாலே
பலருக் குங்கடை யென்றெனை யிகழவு
மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு
பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி  பணிவேனோ

திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை
வரவச் சங்கொடு வந்திடு முழையுடல்
சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி  சிரனோடு
திரமிற் றங்கிய கும்பக னொருபது
தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு
சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ்  மருகோனே

மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள்
சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை
மலையத் தன்தரு சங்கரி கருணைசெய்  முருகோனே
வடபெற் பங்கய லன்றணி குசசர
வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்
மதுரைச் சங்கிலி மண்டப இமையவர்  பெருமாளே.

977. முகமெ லாநெய் பூசித் தயங்கு
நுதலின் மீதி லேபொட் டணிந்து
முருகு மாலை யோதிக் கணிந்த  மடமாதர்
முதிரு மார பாரத் தனங்கள்
மிசையி லாவி யாய்நெக் கழிந்து
முடிய மாலி லேபட் டலைந்து  பொருள்தேடிச்

செகமெ லாமு லாவிக் கரந்து
திருட னாகி யேசற் றுழன்று
திமிர னாகி யோடிப் பறந்து  திரியாமல்
தெளியு ஞான மோதிக் கரைந்து
சிவபு ராண நூலிற் பயின்று
செறியு மாறு தாளைப் பரிந்து  தரவேணும்

அகர மாதி யாம க்ஷரங்க
ளவனி கால்வி ணாரப் பொடங்கி
அடைய வேக ரூபத் திலொன்றி  முதலாகி
அமரர் காண வேயத்த மன்றி
லரிவை பாட ஆடிக் கலந்த
அமல நாத னார்முற் பயந்த  முருகோனே

சகல வேத சாமுத் ரியங்கள்
சமய மாறு லோகத் ரயங்கள்
தரும நீதி சேர்தத் துவங்கள்  தவயோகம்
தவறி லாம லாளப் பிறந்த
தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று
தவிர ஆல வாயிற் சிறந்த  பெருமாளே.

978. ஏலப்பனி நீரணி மாதர்கள்
கானத்தினு மேயுற வாடிடு
மீரத்தினு மேவளை சேர்கர  மதனாலும்
ஏமக்கிரி மீதினி லேகரு
நீலக்கய மேறிய னேரென
ஏதுற்றிடு மாதன மீதினு  மயலாகிச்

சோலைக்குயில் போல்மொழி யாலுமெ
தூசுற்றிடு நூலிடை யாலுமெ
தோமிற்கத லீநிக ராகிய  தொடையாலும்
சோமப்ரபை வீசிய மாமுக
சாலத்திலு மாகடு வேல்விழி
சூதத்தினு நானவ மேதின  முழல்வேனோ

ஆலப்பணி மீதினில் மாசறு
மாழிக்கிடை யேதுயில் மாதவ
னானைக்கினி தாயுத வீயருள்  நெடுமாயன்
ஆதித்திரு நேமியன் வாமன
னீலப்புயல் நேர்தரு மேனியன்
ஆரத்துள வார்திரு மார்பினன்  மருகோனே

கோலக்கய மாவுரி போர்வையர்
ஆலக்கடு வார்கள நாயகர்
கோவிற்பொறி யால்வரு மாசுத  குமரேசா
கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய
சீரற்புத மாநக ராகிய
கூடற்பதி மீதினில் மேவிய  பெருமாளே.

979. கலைமேவு ஞானப் பிரகாசக்  கடலாடி ஆசைக் கடலேறி
பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் குமரேசா
சிலைவே சேவற் கொடியோனே திருவாணி கூடற்பெருமானே.

980. நீதத் துவமாகி - நேமத் துணையாகிப்
பூதத் தயவான - போதைத் தருவாயே
நாதத் தொனியோனே - ஞானக் கடலோனே
கோதற் றமுதானே - கூடற் பெருமாளே.

981. மனநினை சுத்தஞ் சூது காரிகள்
அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்
மதபல நித்தம் பாரி நாரிக  ளழகாக
வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்
விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்
வரமிகு வெட்கம் போல வோடிகள்  தெருவூடே

குனகிகள் பக்ஷம் போல பேசிகள்
தனகிக ளிச்சம் பேசி கூசிகள்
குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள்  பொருளாசைக்
கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட
அருளமு தத்தின் சேரு மோர்விழி
குறிதனி லுய்த்துன் பாத மேறிட  அருள்தாராய்

தனதன தத்தந் தான தானன
டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
தகுதிகு தத்தந் தீத தோதக  எனபேரி
தவில்முர சத்தங் தாரை பூரிகை
வளைதுடி பொற்கொம் பார சூரரை
சமர்தனில் முற்றும் பாறி நூறிட  விடும்வேலா

தினைவன நித்தங் காவ லாளியள்
நகைமுறை முத்தின் பாவை மான்மகள்
திகழ்பெற நித்தங் கூடி யாடிய  முருகோனே
திரிபுர நக்கன் பாதி மாதுறை
யழகிய சொக்கன் காதி லோர்பொருள்
செலவரு ளித்தென் கூடல் மேவிய  பெருமாளே.

982. முத்துநவ ரத்னமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதரு  வெனவோதும்
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுர  ரடிபேணி

பத்துமுடி தத்தும்வகை யுற்றகணை விட்டஅரி
பற்குனனை வெற்றிபெற  ரதமூரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம்  அருள்வாயே

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்த்ததென  தெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை  யெனஆடும்

அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள்  புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரி  பெருமாளே.

நாங்குநேரி-புருடமங்கை (ஸ்ரீ புருஷ மங்கை)

983. ஆடல்மத னம்பின் மங்கைய
ராலவிழி யின்பி றங்கொளி
யாரமத லம்பு கொங்கையின்  மயலாகி
ஆதிகுரு வின்ப தங்களை
நீதியுட னன்பு டன்பணி
யாமல்மன நைந்து நொந்துட  லழியாதே

வேடரென நின்ற ஐம்புல
னாலுகர ணங்க ளின்தொழில்
வேறுபட நின்று ணர்ந்தருள்  பெறுமாறென்
வேடைகெட வந்து சிந்தனை
மாயையற வென்று துன்றிய
வேதமுடி வின்ப ரம்பொரு  ளருள்வாயே

தாடகையு ரங்க டிந்தொளிர்
மாமுனிம கஞ்சி றந்தொரு
தாழ்வறந டந்து திண்சிலை  முறியாவொண்
ஜாநகித னங்க லந்தபின்
ஊரில்மகு டங்க டந்தொரு
தாயர்வச னஞ்சி றந்தவன்  மருகோனே

சேடன்முடி யுங்க லங்கிட
வாடைமுழு தும்ப ரந்தெழ
தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட  நடமாடுஞ்
சீர்மயில் மஞ்சு துஞ்சிய
சோலைவளர் செம்பொ னுந்திய
ஸ்ரீபுருட மங்கை தங்கிய  பெருமாளே.

984. கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து
காதலுறு சிந்தை யுந்து  மடமானார்
காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த
காழ்கடிய கும்ப தம்ப  இருகோடார்

பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க
பேதையர்கள் தங்கள் கண்கள்  வலையாலே
பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை
பீடையற வந்து நின்ற  னருள்தாராய்

ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த
ஏகமயி லங்க துங்க  வடிவேலா
ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்ட
ரீடெறஇ ருந்த செந்தில்  நகர்வாழ்வே

தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த
சீரலர்கு ளுந்து யர்ந்த  பொழிலோடே
சேரவெ யிலங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த
ஸ்ரீபுருட மங்கை தங்கு  பெருமாளே.

985. வேனின்மத னைந்து பாணம்விட நொந்து
வீதிதொறு நின்ற  மடவார்பால்
வேளையென வந்து தாளினில் விழுந்து
வேடைகெட நண்பு  பலபேசித்

தேனினும ணந்த வாயமுத முண்டு
சீதளத னங்க  ளினின்மூழ்கித்
தேடியத னங்கள் பாழ்படமு யன்று
சேர்கதிய தின்றி  யுழல்வேனோ

ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ
ராலிலையி லன்று  துயில்மாயன்
ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த
ஆரணமு குந்தன்  மருகோனே

வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த
மானொடுவி ளங்கு  மணிமார்பா
மாமறைமு ழங்கு ஸ்ரீபுருட மங்கை
மாநகர மர்ந்த  பெருமாளே.

இலஞ்சி (குற்றாலம் அருகில்)

986. கரங்க மலமின தரம்ப வளம்விளை
களம்ப கழிவிழி  மொழிபாகு
கரும்ப முதுமுலை குரும்பை குருகுப
கரும்பி டியினடை  யெயின்மாதோ

டரங்க நககன தனங்கு தலையிசை
யலங்க நிறமுற  மயில்மீதே
அமர்ந்து பலவினை களைந்து வருகொடி
யவந்த கனகல  வருவாயே

தரங்க முதியம கரம்பொ ருததிரை
சலந்தி நதிகும  ரெனவான
தலம்ப ரவமறை புலம்ப வருசிறு
சதங்கை யடிதொழு  பவராழி

இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப
னிரண்டு புயமலை  கிழவோனே
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
இலஞ்சி மருவிய  பெருமாளே.

987. கொந்தள வோலை குலுங்கிட வாளிச்
சங்குட னாழி கழன்றிட மேகக்
கொண்டைகள் மாலை சரிந்திட வாசப்  பனிநீர்சேர்
கொங்கைகள் மார்பு குலைந்திட வாளிக்
கண்கயல் மேனி சிவந்திட கோவைக்
கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக்  கடலூடே

சந்திர ஆர மழிந்திட நூலிற்
பங்கிடை யாடை துவண்டிட நேசத்
தந்திட மாலு ததும்பியு மூழ்குற்  றிடுபோதுன்
சந்திர மேனி முகங்களு நீலச்
சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச்
சந்திர வாகு சதங்கையு மோசற்  றருள்வாயே

சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்
கொண்டுநல் தூது நடந்தவ ராகத்
தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச்  சிவகாமி
தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்
சங்கரி மோக சவுந்தரி கோலச்
சுந்தரி காளி பயந்தரு ளானைக்  கிளையோனே

இந்திர வேதர் பயங்கெட சூரைச்
சிந்திட வேல்கொ டெறிந்துவல் தோகைக்
கின்புற மேவி யிருந்திடு வேதப்  பொருளோனே
எண்புன மேவி யிருந்தவள் மோகப்
பெண்திரு வாளை மணந்திய லார்சொற்
கிஞ்சிய ளாவு மிலஞ்சி விசாகப்  பெருமாளே.

988. சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
துரந்தெறி கின்ற  விழிவேலால்
சுழன்று சுழன்று துவண்டு துவண்டு
சுருண்டு மயங்கி  மடவார்தோள்

விரும்பி வரம்பு கடந்து நடந்து
மெலிந்து தளர்ந்து  மடியாதே
விளங்கு கடம்பு விழைந்தணி தண்டை
விதங்கொள் சதங்கை  யடிதாராய்

பொருந்த லமைந்து சிதம்பெற நின்ற
பொலங்கிரி யொன்றை  யெறிவேனோ
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணங்கொள்
புரந்தரன் வஞ்சி  மணவாளா

இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
குரும்பை மணந்த  மணிமார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
இலஞ்சி யமர்ந்த  பெருமாளே.

989. மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை யநங்கன்  மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்து
வாடை யெறிந்த  அனலாலும்

கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி  தளராமுன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவு மின்று  வரவேணும்

கால னடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த  முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
காத லிரங்கு  குமரேசா

சோலை வளைந்து சாலி விளைந்து
சூழ மிலஞ்சி  மகிழ்வோனே
சூரிய னஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற  பெருமாளே.

குற்றாலம்

990. ஏடுக்கொத் தாரலர் வார்குழ
லாடப்பட் டாடைநி லாவிய
ஏதப்பொற் றோள்மிசை மூடிய  கரமாதர்
ஏதத்தைப் பேசுப ணாளிகள்
வீசத்துக் காசைகொ டாடிகள்
ஏறிட்டிட் டேணியை வீழ்விடு  முழுமாயர்

மாடொக்கக் கூடிய காமுகர்
மூழ்குற்றுக் காயமொ டேவரு
வாயுற்றுப் சூலைவி யாதிக  ளிவைமேலாய்
மாசுற்றுப் பாசம்வி டாசம
னூர்புக்குப் பாழ்நர கேவிழு
மாயத்தைச் சீவியு னாதர  வருள்வாயே

தாடுட்டுட் டூடுடு டீடிமி
டூடுட்டுட் டூடுடு டாடமி
தானத்தத் தானத னாவென  வெகுபேரி
தானொத்தப் பூதப சாசுகள்
வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
சாகப்பொற் றோகையி லேறிய  சதிரோனே

கூடற்கச் சாலைசி ராமலை
காவைப்பொற் காழிவெ ளூர்திகழ்
கோடைக்கச் சூர்கரு வூரிலு  முயர்வான
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய  பெருமாளே.

991. வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் றூர மிலாதது  கதியாளர்
வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வொணாதது
வேகத்துத் தீயில் வெகாதது  சுடர்கானம்

வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது
வாசத்திற் பேரொளி யானது  மதமூறு
மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனி  யருள்வாயே

காதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு  கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்க்கொடு
வாதைப்பட் டேமதி தீதக
லாமற்கெட் டேதடு மாறிட  அடுவோனே

கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர்
கூடத்துக் கேகுடி யாய்வரு  முருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய  பெருமாளே.

992. முத்தோலைத னைக்கி ழித்தயி
லைப்போரி கலிச்சி வத்துமு
கத்தாம ரையிற்செ ருக்கிடும்  விழிமானார்
முற்றாதிள கிப்ப ணைத்தணி
கச்சாரம றுத்த நித்தில
முத்தாரம ழுத்து கிரிக்குறி  யதனாலே

வித்தாரக வித்தி றத்தினர்
பட்டோலைநி கர்த்தி ணைத்தெழு
வெற்பானத னத்தில் நித்தலு  முழல்வேனோ
மெய்த்தேவர்து தித்தி டத்தரு
பொற்பார்கம லப்ப தத்தினை
மெய்ப்பாகவ ழுத்தி டக்ருபை  புரிவாயே

பத்தானமு டித்த லைக்குவ
டிற்றாடவ ரக்க ருக்கிறை
பட்டாவிவி டச்செ யித்தவன்  மருகோனே
பற்பாசன்மி கைச்சி ரத்தைய
றுத்தாதவ னைச்சி னத்துறு
பற்போகவு டைத்த தற்பரன்  மகிழ்வோனே

கொத்தார்கத லிப்ப ழக்குலை
வித்தாரவ ருக்கை யிற்சுளை
கொத்தோடுதி ரக்கு திக்கெழு  கயலாரங்
கொட்டாசுழி யிற்கொ ழித்தெறி
சிற்றாறுத னிற்க ளித்திடு
குற்றாலரி டத்தி லுற்றருள்  பெருமாளே.

ஆய்க்குடி (தென்காசி அருகில்)

993. வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
மாப்புடைத் தாளரசர்  பெருவாழ்வும்
மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
வாழ்க்கைவிட் டேறுமடி  யவர்போலக்

கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
கோத்தமெய்க் கோலமுடன்  வெகுரூபக்
கோப்புடைத் தாகிய மாப்பினில் பாரிவரு
கூத்தினிப் பூரையிட  அமையாதோ

தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பாரவுநிள்  கழல்தாவிச்
சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
தாழ்க்கவஜ் ராயுதனு  மிமையோரும்

ஆட்படச் சாமபர மேட்டியைக்  காவலிடு
மாய்க்குடிக் காவலவு  ததிமீதே
ஆர்க்குமத் தானவரை வேற்கரத்  தால்வரையை
ஆட்படச் சாமபர மேட்டியைக் 
ஆர்ப்பெழச் சாடவல  பெருமாளே.

திருப்புத்தூர் (மதுரை அருகில்)

994. கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய
கடைக்கட் பார்வை யினிய வனிதையர்  தனபாரம்
களிற்றுக் கோடு கலச மலிநவ
மணிச்செப் போடை வனவ நறுமலர்
கனத்துப் பாளை முறிய வருநிக  ரிளநீர்போற்

பொருப்பைச் சாடும் வலியை யுடையன
அறச்சற் றான இடையை நலிவன
புதுக்கச் சார வடமொ டடர்வென  எனநாளும்
புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்
ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்
பொகட்டெப் போது சரியை கிரியைசெய்  துயிர்வாழ்வேன்

இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ
எயிற்றுப் போவி யமர ருடலவர்  தலைமாலை
எலுப்புக் கோவை யணியு மவர்மிக
அதிர்த்துக் காளி வெருவ நொடியினி
லெதிர்த்திட் டாடும் வயிர பயிரவர்  நவநீத

திருட்டுப் பாணி யிடப முதுகிடை
சமுக்கிட் டேறி யதிர வருபவர்
செலுத்துப் பூத மலகை யிலகிய  படையாளி
செடைக்குட் பூளை மதிய மிதழிவெ
ளெருக்குச் சூடி குமர வயலியல்
திருப்புத் தூரில் மருவிய யுறைதரு  பெருமாளே.

995. வேலை தோற்க விழித்துக் காதினி
லோலை காட்டி நகைத்துப் போதொரு
வீடு காட்டி யுடுத்துப் போர்வையை  நெகிழ்வாகி
மேனி காட்டி வளைத்துப் போர்முலை
யானை காட்டி மறைத்துத் தோதக
வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர்  வருவார்மேல்

கால மேற்க வுழப்பிக் கூறிய
காசு கேட்டது கைப்பற் றாஇடை
காதி யோட்டி வருத்தப் பாடுடன்  வருவார்போல்
காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்
மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்
காம நோய்ப்படு சித்தத் தீவினை  யொழியேனோ

ஆல கோட்டு மிடற்றுச் சோதிக
பாலி பார்ப்பதி பக்ஷத் தால்நட
மாடி தாத்திரி பட்சித் தாவென  வுமிழ்வாளி
ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக
னோடை பூத்த தளக்கட் சானவி
யாறு தேக்கிய கற்றைச் சேகர  சடதாரி

சீல மாப்பதி மத்தப் பாரிட
சேனை போற்றிடு மப்பர்க் கோதிய
சேத னார்த்தப்ர சித்திக் கேவரு  முருகோனே
சேல றாக்கயல் தத்தச் சூழ்வய
லூர வேற்கர விப்ரர்க் காதர
தீர தீர்த்த திருப்புத் தூருறை  பெருமாளே.

திருவாடானை

996. ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட
லூதாரி பட்டொழிய  வுயிர்போனால்
ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி
ஓயா முழக்கமெழ  அழுதோய

நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
நாறா தெடுத்தடவி யெரியூடே
நாணாமல் வைத்துவிட நீறாமெனிப்பிறவி
நாடா தெனக்குனருள்  புரிவாயே

மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு
மாயோனு மட்டொழுகு  மலர்மீதே
வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
வானோரு மட்டகுல  கிரியாவும்

ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
மாலால முற்றவமு  தயில்வோன்முன்
ஆசார  பத்தியுடன் ஞானாக மத்தையரு
ளாடானை நித்தமுறை  பெருமாளே.

உத்தரகோசமங்கை

997. கற்பக ஞானக் கடவுண்மு ணண்டத்
திற்புத் சேனைக் கதிபதி யின்பக்
கட்கழை பாகப் பமமுது வெண்சர்க்  கரைபால்தேன்
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்
றொப்பையி னேறிட் டருளிய தந்திக்
கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப்  பரியாய

பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித்  தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்
றுப்புக லாகத் தமுதையு முண்டிட்  டிடுவேனோ

தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்
கெட்பையு மூடிக் குருதிகள் மங்குற்  செவையாகித்
திக்கய மாடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுடு வென்கச்
செப்பறை தாளத் தகுதொகு வென்கச்  சிலபேரி

உற்பன மாகத் தடிபடு சம்பத்
தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்
றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத்  தொடுவேலா
உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்
சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
றுத்தர கோசத் தலமுறை கந்தப்  பெருமாளே.

ராமேஸ்வரம்

998. வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு  பொருள்தேடி
வாசபுழு கோடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவரா சைதனி லேசுழல  சிலநாள்போய்த்

தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுகமாறிதடி யோடுதிரி  யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள் மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமென நாறியுட  லழிவோனோ

நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுறை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிரமோடுசிகை தூளிபட தாளமிடு  மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதினை காவில்மண மேவுபுகழ்  மயில்வீரா

ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
மோத கடலோடு விறல்ராவணகுழாமம  ரில்பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்வரு காஎனவெ
யோதமறைராமெசுர மேவுகுமராவமரர்  பெருமாளே.

999. வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
மீதே பணிக்கும்வகை  யறியாதே
மானோர் வலைக்கணதி லேதூளி மெத்தையினி
லூடே யணைத்துதவு  மதனாலே

தேனோரு கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
ளேதோ வெனக்கலவி  பலகோடி
தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
சேறாடல் பெற்றதுய  ரொழியேனோ

மேனோடு பெற்றுவளர் சூராதி பற்கெதிரி
னூடேகி நிற்குமிரு  கழலோனே
மேகார வுக்ரபரி தானேறி வெற்றிபுனை
வீரா குறச்சிறுமி  மணவாளா

ஞானா பரற்கினிய வேதாக மப்பொருளை
நாணா துரைக்குமொரு  பெரியோனே
நாரா யணற்குமரு காவீறு பெற்றிலகு
ராமே சுரத்திலுறை  பெருமாளே.

1000. அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை
அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய
லளவு மசலமது கண்டங் கொருத்தருள  வறியாத
தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ
டகில புவனநதி யண்டங் களுக்குமுத
லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல்  நடுவான

கமல துரியமதி லிங்துங் கதிர்ப்பரவு
கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ
ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத  சிவயோகம்
கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி
குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது
கனவு வரஇளமை தந்துன் பதத்திலெனை  யருள்வாயே

திமிலை பலமுருடு திந்தித் திமித்திமித
டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட
திகுட திகுடதிகு திந்திங் திகுர்த்திகுர்த  திகுதீதோ
செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென
அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு
திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர்  களமீதே

அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள
அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள
அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள  விடும்வேலா
அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுக
அழகு புயமொடணை யின்பங் களித்துமகிழ்
அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ்  பெருமாளே.

ஏழுகரை நாடு

1001. விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட  அன்பு மேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
விழைவுகு ராப்புனை  யங்குமார

முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
முலைநுகர் பார்த்திப  என்றுபாடி
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
முமுதும லாப்பொருள்  தந்திடாயோ

பரகதி காட்டிய விரகசி லோச்சய
பரமப ராக்ரம  சம்பராரி
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
பகவதி பார்ப்பதி  தந்தவாழ்வே

இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
எழுகிரி யார்ப்பெழ  வென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
எழுகரை நாட்டவர்  தம்பிரானே.

ஒடுக்கத்துச் செறிவாய்

1002. வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு
மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்
வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள  வதனாலே
மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்
சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை
மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள்  மதியாதே

கழுத்தைக் கட்டிய ணாப்பிய நட்பொடு
சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்
கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது  கரிசாணி
கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு
பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்
கலைக்குட் புக்கிடு பாழ்த்தபுத்தியை  ஒழியேனோ

அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை
நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம்
அழித்திட் டுக்கற வாட்டிபொற்றன  கிரிதோய்வாய்
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்
அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி  லுறைமாயன்

உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்
விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்
உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன்  மருகோனே
உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
மதித்திட் டுச்செறி நாற்க விப்புணர்
ஒடுக்கத்துச்செறி வாய்த்தலத்துறை  பெருமாளே.

காமத்தூர்

1003. ஆகத் தேதப் பாமற் சேரிக்
கார்கைத் தேறற்  கணையாலே
ஆலப் பாலைப் போலக் கோலத்
தாயக் காயப்  பிறையாலே

போகத் தேசற் றேதற் பாயற்
பூவிற் றீயிற்  கருகாதே
போதக் காதற் போத் தாளைப்
பூரித் தாரப்  புணராயே

தோகைக் கேயுற் றேறித் தோயச்
சூர்கெட் டோடப்  பொரும்வேலா
சோதிக் காலைப் போதக் கூவத்
தூவற் சேவற்  கொடியோனே

பாகொத் தேசொற் பாகத் தாளைப்
பாரித் தார்நற்  குமரேசா
பாரிற் காமத் தூரிற் சீலப்
பாவத் தேவப்  பெருமாளே.

முள்வாய் (சித்தூர் அருகில்)

1004. மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
வெல்வே றுழன்று ழன்று  மொழிகூற
விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க
மென்னா ளறிந்த டைந்து  உயிர்போமுன்

பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து
பொய்யார் மனங்கள் தங்கு  மதுபோலப்
பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு
புன்னா யுளுங்க வின்று  புகுவாயே

பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து
பன்னா கணைந்து சங்க  முறவாயிற்
பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று
பண்ணூது கின்ற கொண்டல்  மருகோனே

முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து
முன்னோர் பொருங்கை யென்று  முனையாட
மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மாதர் வந்தி றைஞ்சு
முள்வாய் விளங்க நின்ற  பெருமாளே.

செய்யாறு-வாகை, வாகை மாநகர்

1005. ஆலை மான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு
மால கால விழிக்கு  முறுகாதல்
ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு
மார பார முலைக்கு  மழகான

ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு
மோரை சாயு மிடைக்கு  மயல்மேவி
ஊறு பரவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி
லூர வோடு விருப்பி  லுழல்வேனோ

வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
மீறு காத லளிக்கு  முகமாய
மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து
மீள வாய்மை தெளித்து  மிதண்மீது

மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து
வாயி லூறல் குடித்து  மயல்தீர
வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற
வாகை மாநகர் பற்று  பெருமாளே.

விசுவை

1006. திருகுசெ றிந்த குழலை வகிர்ந்து
முடிமலர் கொண்டொ  ரழகாகச்
செயவரு துங்க முகமும் விளங்க
முலைகள்கு லுங்க  வருமோக

அரிவையர் தங்கள் வலையில் விழுந்து
அறிவுமெ லிந்து  தளராதே
அமரர்ம கிழ்ந்து தொழுது வணங்கு
னடியிணை யன்பொ  டருள்வாயே

வரையைமு னிந்து விழவெ கடிந்து
வடிவெலெ றிந்த  திறலோனே
மதுரித செஞ்சொல் குறமட மங்கை
நகிலது பொங்க  வரும்வேலா

விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த
விடையரர் தந்த  முருகோனே
விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு
விசுவை விளங்கு  பெருமாளே.

திருப்புகழ் பொதுப் பாடல்கள்

1007. போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா  நமோநம
பூர ணக்கலை சாரா நமோநம  பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்கபு பாலா நமோநம  சங்கமேறும்

மாத மிழ்த்ரய சேயே நமோநம
வேத னத்ரய வேளே நமோநம
வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம  என்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
மாயை யிற்சுழி யூடே விடாதுக  லங்கலாமோ

கீத நிர்த்தவெ தாளா டவீநட
நாத புத்திர பாகீ ரதீகிரு
பாச முத்திர ஜீமூத வாகனர்  தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிப
மாலி கைக்கும தேரசா விசாகக்ரு
பாலு வித்ரும காரா ஷடானன  புண்டரீகா

வேத வித்தக வேதா விநோதகி
ராத லக்ஷ்மிகி ரீடா மகாசல
வீர விக்ரம பாரா வதானவ  கண்டசூர
வீர நிட்டுர வீராதி காரண
தீர நிர்ப்பய தீராபி ராமவி
நாய கப்ரிய வேலாயுத தாசுரர்  தம்பிரானே.

1008. ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
வேத னைப்படு காமாவி காரனை
ஊன முற்றுழல் ஆபாச ஈனனை  அந்தர்யாமி
யோக மற்றுழல் ஆபாச சாசனை
மோக முற்றிய மோடாதி மோடனை
ஊதி யத்தவம் நாடாத கேடனை  அன்றிலாதி

பாத கக்கொலை யேசூழ்க பாடனை
நீதி சற்றுமி லாகீத நாடனை
பாவி யர்க்குளெ லாமாது ரோகனை  மண்ணின்மீதில்
பாடு பட்டலை மாகோப லோபனை
வீடு பட்டழி கோமாள வீணனை
பாச சிக்கினிலே வாழ்வேனை யாளுவ  தெந்தநாளோ

ஆதி சற்குண சீலா நமோநம
ஆட கத்திரி சூலா நமோநம
ஆத ரித்தருள் பாலா நமோநம  உந்தியாமை
ஆன வர்க்கினி யானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம
ஆர ணற்கரி யானே நமோநம  மன்றுளாடும்

தோதி தித்திமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம
சோப மற்றவர் சாமீ நமோநம  தன்மராச
தூத னைத்துகை பாதா நமோநம
நாத சற்குரு நாதா நமோநம
ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர்  தம்பிரானே.

1009. வேத வித்தகா சாமீ நமோநம
வேல்மி குத்தமா சூரா நமோநம
வீம சக்ரயூ காளா நமோநம  விந்துநாத
வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்ககூ தாளா நமோநம
மேக மொத்தமா யூரா நமோநம  விண்டிடாத

போத மொத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே யானாய் நமோநம
பூர ணத்துளே வாழ்வாய் நமோநம  துங்கமேவும்
பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
பூஷ ணத்துமா மார்பா நமோநம  புண்டரீக

மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்
மீதி ருக்குமே ரார்மாபு லோமசை
வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம்  நின்றுநாளும்
வேத வித்தகீ வீமா விராகிணி
வீறு மிக்கமா வீணா கரேமக
மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ  யங்கராகீ

ஆதி சத்திசா மாதேவி பார்வதி
நீலி துத்தியார் நீணாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவி  யென்றுதாழும்
ஆர்யை பெற்றசீ ராளா நமோநம
சூரை யட்டுநீள் பேரா நமோநம
ஆர ணத்தினார் வாழ்வே நமோநம  தம்பிரானே.

1010. ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
தாமெ னாப்பர மார்த்தம  துணராதே
ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட
நேக நாட்டொடு காட்டொடு  தடுமாறிப்

பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு
பூவி னாற்றம றாத்தன  கிரிதோயும்
போக போக்ய கலாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்
போது போக்கியெ னாக்கையை  விடலாமோ

தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ
தீத தீøக்ஷப ரீøக்ஷக  ளறவோதும்
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி
யாக ராத்திகழ் கார்த்திகை  பெறுவாழ்வே

மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷச டாக்ஷர
மேரு வீழ்த்தப ராக்ரம  வடிவேலா
வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட
வேலை கூப்பிட வீக்கிய  பெருமாளே.

1011. ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ
மீதெ னாக்குரு வார்த்தையை  யுணராதே
ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி
யேறு மாப்பிறு மாப்புட  னரசாகித்

தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு
சோர்வி னாற்கொடி தாக்கையை  யிழவாமுன்
சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய
தூரி தாப்பர மார்த்தம  தருள்வாயே

நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கிரி யார்க்கொரு
ஞான வார்த்தையி னாற்குரு  பரனாய
நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல்
நாவ லோர்க்கரு ளாற்பத  மருள்வாழ்வே

வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு
வீர மாக்குலை யாக்குல  வரைசாய
மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ
வேலை கூப்பிட வீக்கிய  பெருமாளே.

1012. தோடு மென்குழை யூடே போரிடு
வாணெ டுங்கயல் போலே யாருயில்
சூறை கொண்டிடு வேல்பொ லேதொடர்  விழிமானார்
சூத கந்தனி லேமா லாயவ
ரோது மன்றறி யாதே யூழ்வினை
சூழும் வெந்துய ராலே தானுயிர்  விழிமானார்

ஆடு வெம்பண காகோ தாசன
மூடு கண்டிட மேல்வீழ் தோகையி
லாரும் வண்கும ரேசா ஆறிரு  புயவேளே
ஆரு நின்றரு ளாலே தாடொழ
ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற
ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற  அருள்வாயே

ஓடு வெங்கதி ரோடே சோமனு
மூழி யண்டமும் லோகா லோகமு
மூரு மந்தர நானா தேவரு  மடிபேண
ஊழி டம்புயன் வேலா வாலய
மூடு தங்கிய மாலா ராதர
வோத வெண்டிரை சூர்மார் பூடுற  விடும்வேலா

வேடு கொண்டுள வேடா வேடைய
வேழ வெம்புலி போலே வேடர்கள்
மேவு திண்புன மீதே மாதொடு  மிகமாலாய்
மேக மென்குழ லாய்நீ கேளினி
வேறு தஞ்சமு நீயே யாமென
வேளை கொண்டபி ரானே வானவர்  பெருமாளே.

1013. நாலி ரண்டித ழாலே கோலிய
ஞால முண்டக மேலே தானிள
ஞாயி றென்றுறு கோலா காலனு  மதின்மேலே
லூல முண்டபி ராணா தாரனும்
யோக மந்திர மூலா தாரனு
நாடி நின்றப்ர பாவா காரனு  நடுவாக

மேலி ருந்தகி ரீடா பீடமு
நூல றிந்தம ணீமா மாடமு
மேத கும்ப்ரபை கோடா கோடியு  மிடமாக
வீசி நின்றுள தூபா தீபவி
சால மண்டப மீதே யேறிய
வீர பண்டித வீரா சாரிய  வினைதீராய்

ஆல கந்தரி மோடா மோடிகு
மாரி பிங்கலை நானா தேசிக
மோகி மங்கலை லோகா லோகியெ  வுயிர்பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி யம்பிகை ஞாதா வானவ
ராட மன்றினி லாடா நாடிய  அபிராமி

கால சங்கரி சீலா சீலித்ரி
சூலி மந்த்ரசு பாஷா பாஷணி
காள கண்டிக பாலீ மாலினி கலியாணி
காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூலாய் வாள்சிவ
காம சுந்தரி வாழ்வே தேவர்கள்  பெருமாளே.

1014. போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி
னாகமு கந்தவ னாற்றெரி  வரிதான
போதுயர் செந்தழலாப்பெரு வான நிறைந்தவிடாப்புக
ழாளன ருஞ்சிவ கீர்த்திய  னெறிகாண

ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட
ஆனப தங்களை நாக்கரு  திடவேயென்
ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி
யேனும றிந்துனை யேத்துவ  தொருநாளே

காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி
வாயித ழின்சுவை யாற்பயில்  குறமாதின்
காரட ருங்குழ லாற்கிரி யானத ளங்களி னாற்கலை
மேவும ருங்கத னாற்செறி  குழையோலை

சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு
மாறிம னந்தள ராத்தனி  திரிவோனே
சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி
வேலையு ரம்பெற வோட்டிய  பெருமாளே.

1015. வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி
லோசன அமபுக ளாற்செயல்  தடுமாறி
மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு
வேளைபு குந்தப ராக்ரம  மதுபாடி

நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி
னாலுல கங்களு மேத்திய  இருதாளில்
நாறுக டம்பணி யாப்பரிவோடுபு ரந்தக ராக்ரம
நாடஅ ருந்தவம் வாய்ப்பது  மொருநாளே

ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ
ராயிர வெம்பகு வாய்ப்பணி  கயிறாக
ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு
ளாயனு மன்றெயில் தீப்பட  அதிபார

வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய
வாழ்வென வஞ்சக ராக்ஷதர்  குலமாள
வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன்
வானுல குங்குடி யேற்றிய  பெருமாளே.

1016. இலகி யிருகுழை கிழிகயல் வீழியினு
மிசையி னசைதரு மொழியினு மருவம
ரிருள்செய் குழலினு மிடையினு நடையினு  மநுராக
இனிமை தருமொரு இதழினு நகையினு
மிளைய ம்ருகமத தனகுவ டழகினு
மியலுமயல்கொடு துணிவதுபணிவது  தணியாதே

குலவி விரகெனு மளறிடை முழுகிய
கொடிய நடலைய னடமிட வருபிணி
குறுகி யிடஎம னிறுதியி லுயிரது  கொடுபோநாள்
குனகி யழுபவர்க அயர்பவர் முயல்பவர்
குதறு முதுபிண மெடுமென வொருபறை
குணலையிட அடுசுடலையில் நடவுத  லினிதோதான்

மலையில் நிகரில தொருமலை தனையுடல்
மறுகி யலமர அறிவுர முடுகிய
வலிய பெலமிக வுடையவ னடையவு  மதிகாய
மவுலி யொருபது மிருபது கரமுடன்
மடிய வொருசரம் விடுபவன் மதகரி
மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில்  மதியாதே

அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய
அதுல னிருபத மதுதனி லெழுபுவி
யடைய அளவிட நெடுகிய அரிதிரு  மருகோனே
அவுண ருடலம தலமர அலைகட
லறவு மறுகிட வடகுவ டனகிரி
யடையஇடிபொடி படஅயில் விடவல  பெருமாளே.

1017. கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
கனியு முதுபல கனிவகை நலமிவை  யினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
அமுது துதிகையில் மனமது களிபெற
கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற  நெடிதான

குடகு வயிறினி லடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருகசண் முகவென
குவிய இருகர மலர்விழி புனலொடு  பணியாமல்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
குழியில் முழுகியு மழுகியு முழல்வகை  யொழியாதோ

நெடிய கடிலினில் முடுகியெ வரமுறு
மறலி வெருவுற ரவிமதி பயமுற
நிலமு நெறுநெறுநெறுவெனவருமொரு  கொடிதான
நிசிசர் கொடு முடி சடசட சடவென
பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற  முளதான

நடன மிடுபரி துரகத மயிலது
முடுகி கடுமையி லுலகதை வலம்வரு
நளின பதவர நதிகுமு குமுவென  முனிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
நணியெ சரவண மதில்வள ரழகிய  பெருமாளே.

1018. கமல குமிளித முலைமிசை துகிலிடு
விகட கெருவிக ளசடிகள் கபடிகள்
கலக மிடுவிழி வலைகொடு தழுவிக  ளளைஞோர்கள்
கனலி லிடுமெழு கெனநகை யருளிக
ளநெக விதமொடு தனியென நடவிகள்
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்  தமைநாடி

அமுத மொழிகொடு தவநிலை யருளிய
பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை
அடைவு நடைபடி பயிலவு முயலவு  மறியாத
அசட னறிவிலி யிழிகுல னிவனென
இனமு மனிதரு ளனைவரு முரைசெய
அடிய னிதுபட அரிதினி யொருபொரு  ளருள்வாயே

திமிதி திமிதிமி டமடம டமவென
சிகர கரதல டமருக மடிபட
தெனன தெனதென தெனதென நடைபட  முநிவோர்கள்
சிவமி லுருகியு மரகர வெனவதி
பரத பரிபுர மலரடி தொழஅநு
தினமு நடமிடு பவரிட முறைபவள்  தருசேயே

குமர சரவண பவதிற லுதவிய
தரும நிகரொடு புலமையு மழகிய
குழக குருபர னெனவொரு மயில்மிசை  வருவோனே
குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை
மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை
குலவு குறமக ளழகொடு தழுவிய  பெருமாளே.

1019. தசையு முதிரமு நிணமொடு செருமிய
கரும கிருமிக ளொழுகிய பழகிய
சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு  குடில்பேணும்
சகல கிருமிகள் சருவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
சவலையறிவினர் நெறியினை விடஇனி  யடியேனுக்

கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு
வசன முறஇரு வினையற மலமற
இரவு பகலற எனதற நினதற  அநுபூதி
இனிமை தருமொரு தனிமையை மறைகளி
னிறுதி யறுதியி டவரிய பெறுதியை
இருமை யொருமையில் பெருமையை வெளிபட  மொழிவாயே

அசல குலபதி தருமொரு திருமகள்
அமலை விமலைக ளெழுவரும் வழிபட
அருளி அருணையி லுறைதரு மிறையவ  ளபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை
அதல முதலெழு தலமிவை முறைமுறை
அடைய அருளிய பழையவ ளருளிய  சிறியோனே

வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி
மவுன மருளிய மகிமையு மிமையவர்
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும்  வடிவேலும்
மயிலு மியலறி புலமையு முபநிட
மதுர கவிதையும் விதரண கருணையும்
வடிவு மிளமையும் வளமையு மழகிய  பெருமாளே.

1020. நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி
நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி
நிபிட முடிகிழி யவுநில மதிரவும்  விளையாடும்
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்
நினது கருணையு முறைதரு பெருமையும்
நிறமு மிளமையும் வளமையு மிருசர  ணமும்நீப

முடியு மபிநவ வனசரர் கொடியிடை
தளர வளர்வன ம்ருகமத பரிமள
முகுள புளகித தனகிரி தழுவிய  திரடோளும்
மொகுமொ கெனமது கரமுரல் குரவணி
முருக னறுமுக னெனவரு வனபெயர்
முழுது மியல்கொடு பழுதற மொழிவது  மொருநாளே

கொடிய படுகொலை நிசிசர ருரமொடு
குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு
குருதி நதிவித சதியொடு குதிகொள  விதியோடக்
குமுறு கடல்குடல் கிழிபட வடுமர
மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்
குருகு பெயரிய வரைதொளை படவிடு  சுடர்வேலா

இடியு முனைமலி குலிசமு மிலகிடு
கவள தவளவி கடதட கனகட
இபமு மிரணிய தரணியு முடையதொர்  தனியானைக்
கிறைவ குருபர சரவண வெகுமுக
ககன புனிதையும் வனிதைய ரறுவரும்
எமது மகவென வுமைதரு மிமையவர்  பெருமாளே.

1021. பகிர நினைவொரு தினையள விலுமிலி
கருணை யிலியுன தருணையொ டுதணியல்
பழநி மலைகுரு மலைபணி மலைபல  மலைபாடிப்
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்
பழகி யழகிலி குலமிலி நலமிலி
பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி  லிகுலாலன்

திகிரி வருமொரு செலவினி லெழுபது
செலவு வருமன பவுரிகொ டலமரு
திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல்  நினையாத
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி
திருடன் மதியிலி கதியிலி விதியிலி
செயலி லுணர்விலி சிவபத மடைவது  மொருநாளே

மகர சலநிதி முறையிட நிசிசரன்
மகுட மொருபது மிருபது திரள்புய
வரையு மறவொருகணைதெரிபுயல்குரு  ந்ருபதூதன்
மடுவில் மதகரி முதலென வுதவிய
வரத னிருதிறல் மருதொடு பொருதவன்
மதலை குதலையின் மறைமொழி யிகழிர  ணியனாகம்

உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி
திகிரி தரமர கதகிரி யெரியுமிழ்
உரக சுடிகையில் நடநவி லரிதிரு  மருகோனே
உருகு மடியவ ரிருவினை யிருள்பொரு
முதய தினகர இமகரன் வலம்வரும்
உலக முழுதொரு நொடியினில் வலம்வரு  பெருமாளே.

1022. முருகு செறிகுழ லவில்தர முகமதி
முடிய வெயர்வர முதுதிரை யமுதன
மொழிகள் பதறிட வளைகல கலவென  அணைபோக
முலையின் மிசையிடு வடமுடி யறஇடை
முறியு மெனஇரு பரிபுர மலறிட
முகுள அலரிள நிலவெழ இலவிதழ்  பருகாநின்

றுருகி யுளமுட லுட லொடு செருகிட
வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய்
துதவு மடமக ளிர்களொடு மமளியி  லுநுராக
உததி யதனிடை விழுகினு மெழுகினும்
உழலு கினுமுன தடியிணை எனதுயி
ருதவி யெனவுனை நினைவது மொழிவது  மறவேனே

எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி
திடமு மிலையென வுலவிட அலகையின்
இனமும் நிணமுண எழுகுறள் களுமிய  லிசைபாட
இகலி முதுகள மினமிசை யொடுதனி
யிரண பயிரவி பதயுக மிகுநட
மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு  விருகாலும்

வரிசை யதனுடன் வளைதர வொருபது
மகுட மிருபது புயமுடன் மடிபட
வலியி னொருகணை விடுகர முதலரி  நெடுமாயன்
மருக குருபர சரவண மதில்வரு
மகிப சுரபதி பதிபெற அவுணர்கள்
மடிய இயல்கொளு மயில்மிசை வரவல  பெருமாளே.

1023. இலகு வேலெனு மிருவினை விழிகளு
மெழுதொ ணாதெனு மிருதன கிரிகளு
மிசையி னால்வசை பொசிதரு மொழிகளு  மெதிர்வேகொண்
டெதிரி லாவதி பலமுடை யிளைஞரெ
னினிய மாவினை யிருளெனும் வலைகொடு
இடைவி டாதெறுநடுவனுமெனவளை  மடவார்தம்

கலவி மால்கொடு கலைகளு மறிவொடு
கருதொ ணாதென முனிவுற மருள்கொடு
கரையி லாவிதி யெனுமொரு கடலிடை  கவிழாதே
கருணை வானவர் தொழுதெழ மயிலுறை
குமர கானவர் சிறுமியொ டுருகிய
கமல தாளிணை கனவிலு நினைவுற  அருள்தாராய்

பலகை யோடொரு பதுசிர மறஎறி
பகழி யானர வணைமிசை துயில்தரு
பரமன் மால்படி யளவிடு மரிதிரு  மருகோனே
பழுதி லாமன முடையவர் மலர்கொடு
பரவ மால்விடை மிசையுறை பவரொடு
பரமஞானமுமிதுவெனவுரைசெய்த  பெரியோனே

அலகை காளிகள் நடமிட அலைகட
லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை
அசுரர் மார்பக மளறது படவிடு  மயில்வேலா
அரிய பாவல ருரைசெய அருள்புரி
முருக ஆறிரு புயஇய லிசையுடன்
அழகு மாண்மையு மிலகிய சரவண  பெருமாளே.

1024. முருகு லாவிய குழலினு நிழலினு
மருவ மாகிய இடையினு நடையினு
முளரி போலுநல் விழியினு மொழியினு  மடமாதர்
முனிவி லாநகை வலையினு நிலையினு
மிறுக வாரிடு மலையெனு முலையினு
முடிவி லாததொர் கொடுவிட மடுவித  மயலாகி

நரகி லேவிழு மவலனை யசடனை
வழிப டாதவொர் திருடனை மருடனை
நலமி லாவக கபடனை விகடனை  வினையேனை
நடுவி லாதன படிறுகொ ளிடறுசொல்
வதனில் மூழ்கிய மறவனை யிறவனை
நளின மார்பத மதுபெற ஒருவழி  யருள்வாயே

வரிய ராவினின் முடிமிசை நடமிடு
பரத மாயவ னெழுபுவி யளவிடு
வரதன் மாதவ னிரணிய னுடலிரு  பிளவாக
வகிரு மாலரி திகிரிய னலையெறி
தமர வாரிதி முறையிட நிசிசரன்
மகுட மானவை யொருபதும் விழவொரு  கணையேவுங்

கரிய மேனியன் மருதொடு பொருதவ
னினிய பாவல னுரையினி லொழுகிய
கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு  மபிராமன
கருணை நாரண னரபதி சுரபதி
மருக கானக மதனிடை யுறைதரு
கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய  பெருமாளே.

1025. அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத
கலசமு மதனுய ரம்பொன் மாமுடி
யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு  மொருகோடி
அடைபடு குடயுக ளங்க ளாமென
ம்ருகமத களபம ணிந்த சீதள
அபிநவ கனதன மங்கை மாருடன்  விளையாடி

இரவொடு பகலொழி வின்றி மால்தரு
மலைகட லளறுப டிந்து வாயமு
தினிதென அருளஅ ருந்தி யார்வமொ  டிதமாகி
இருவரு மருவிய ணைந்துபாழ்படு
மருவினை யறவும றந்து னீள்தரு
மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது  மொருநாளே

சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி
யுடைபுனை யிருகடிக ளண்ட ரானவர்
துதிசெய எதிர்பொர வந்த தானவ  ரடிமாள
தொலைவறு மலகையி னங்க ளானவை
நடமிட நிணமலை துன்ற வேயதில்
துவரிது புளியிது தொய்ந்த தீதிது  இதுவீணால்

பருகுத லரியது கந்த தீதிது
உளதென குறளிகள் தின்று மேதகு
பசிகெட வொருதனி வென்ற சேவக  மயில்வீரா
பகிரதி சிறுவலி லங்க லூடுறு
குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு
பருவரை யுருவஎ றிந்த வேல்வல  பெருமாளே.

1026. உரைதரு பரசம யங்க ளோதுவ
துருவென அருவென வொன்றி லாததொ
ரொளியென வெளியென வும்பராமென  இம்பராநின்
றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென
வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ
டுணர்வுற வுணர்வொடி ருந்த நாளும  ழிந்திடாதே

பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன
பரிசன தெரிசன கந்த வோசைகள்
பலநல விதமுள துன்ப மாகிம  யங்கிடாதே
பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
பலபல விதமுள துன்ப சாகர
படுகுழி யிடைவிழு பஞ்சபாதக  னென்றுதீர்வேன்

அரகர சிவசுத கந்த னேநின
தபயம பயமென நின்று வானவ
ரலறிட வொழிகினி யஞ்சி டாதென  அஞ்சல்கூறி
அடல்தரு நிருதர நந்த வாகினி
யமபுர மடையஅ டர்ந்து போர்புரி
அசுரன தகலமி டந்து போகவ  கிரிந்தவேகம்

விரிகடல் துகளெழ வென்ற வேலவ
மரகத கலபசி கண்டி வாகன
விரகுள சரவண முந்தை நான்மறை  யந்துமோதும்
விரைதரு மலரிலி ருந்த வேதனும்
விடவர வமளிது யின்ற மாயனும்
விமலைகொள் சடையர னும்ப ராவிய  தம்பிரானே.

1027. இமகிரி மத்திற் புயங்க வெம்பணி
கயிறது சுற்றித் தரங்க வொண்கட
லிமையவர்பற்றிக்கடைந்தஅன்றெழு  நஞ்சுபோலே
இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு
குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை
ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும்  விஞ்சிநீடு

சமரமி குத்துப் பரந்த செங்கயல்
விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய
தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி  கொங்கைமீதே
தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர்
குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ
சததளம் வைத்துச் சிவந்தநின்கழல்  தந்திடாயோ

அமரர் திக்கப் புரந்த ரன்தொழ
எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி
யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர்  முந்துபோரில்
அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திற
லிருபது கொற்றப் புயங்கள் சிந்திட
அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது  மொன்றுமாளக்

கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர்
மருமக மட்டுக் கொன்றை யந்தொடை
கறையற வொப்பற் றதும்பை யம்புலி  கங்கைசூடும்
கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள்
குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள்
கடினத னத்திற் கலந்தி லங்கிய  தம்பிரானே.

1028. முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல்
முகிலைய விழ்த்துச் செருந்து சண்பக
முடியநி றைத்துத் ததும்பி வந்தடி  முன்பினாக
முலையைய சைத்துத் திருந்த முன்தரி
கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக
முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு  முன்றிலூடே

மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின்
மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை
வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை  வண்டுபாட
மலயநி லத்துப் பிறந்த தென்றலு
நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய
மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம  லங்கலாமோ

பகலவன் மட்கப் புகுந்து கந்தர
ககனமு கட்டைப் பிளந்து மந்தர
பருவரை யொக்கச் சுழன்று பின்புப  றந்துபோகப்
பணமணி பட்சத் துரங்க முந்தனி
முடுகிந டத்திக் கிழிந்து விந்தெழு
பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப  யந்துவாடக்

குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய
மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு
குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை  வென்றவேளே
குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி
கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில்
குணவமு துய்க்கத் தௌந்து கொண்டருள்  தம்பிரானே.

1029. படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு
பக்கத் திற்பல கத்திட் டுத்துயர்  கொண்டுபாவப்
பணைமர விறகுடை யழலிடை யுடலது
பற்றக் கொட்டுகள் தட்டிச்சுட்டலை  யொன்றியேகக்

கடிசம னுயிர்தனை யிருவிழி யனலது
கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு  டன்றுபோமுன்
கதிதரு முருகனு மெனநினை நினைபவர்
கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது  தந்திடாயோ

வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட
மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும்  வென்றிவாய
வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட
மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம  லைந்தவீரா

அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை
அத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ்  கொண்டவாழ்வே
அடியுக முடியினும் வடிவுட னெழுமவு
னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள்  தம்பிரானே.

1030. விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி
வித்தைக் குப்பக ரொப்புச் சற்றிலை  யென்றுபேசும்
விரகுடை வனிதையரணைமிசையுருகியவெகுமுககலவியி
லிச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு  ழன்றுவாடும்

நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது
கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு  கொண்டுபோயே
நரகதில் விடுமெனுமளவினிலிககியநறைகமழ்திருவடி
முத்திக் குட்படு நித்யத் தத்துவம்  வந்திடாதோ

இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய
மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு  நஞ்சுவாளி
எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள்
பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு  மிந்தரலோகா

வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட
மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி  யஞ்சசூரன்
மணிமுடி சிதறிட அலகைகள்பலவுடன் வயிரவர் நடமிட
முட்டிப்பொட்டெழ வெட்டிக்குத்திய  தம்பிரானே.

1031. குகையில்நவ நாதருஞ் சிறந்த
முகைவனச சாதனுந் தயங்கு
குணமுமசு ரேசுருந் தரங்க  முரல்வேதக்
குரகதபு ராரியும் ப்ரசண்ட
மரகதமு ராரியுஞ் செயங்கொள்
குலிசகைவ லாரியுங் கொடுங்க  ணறநூலும்

அகலிய ராணமும் ப்ரபஞ்ச
சகலகலை நூல்களும் பரந்த
அருமறைய நேகமுங் குவிந்தும்  அறியாத
அறிவுமறி யாமையுங் கடந்த
அறிவுதிரு மேனியென் றுணர்ந்துன்
அருணசர ணாரவிந்த மென்று  அடைவேனோ

பகைகொள்துரி யோதனன் பிறந்து
படைபொருத பாரதந் தெரிந்து
பரியதொரு கோடுகொண் டுசண்ட  வரைமீதே
பழுதறிவி யாசனன் றியம்ப
எழுதியவி நாயகன் சிவந்த
பவளமத யானைபின்பு வந்த  முருகோனே

மிகுதமர சாகரங் கலங்க
எழுசிகர பூதரங் குலுங்க
விபரிதநி சாசரன் தியங்க  அமராடி
விபுதர்குல வேழமங்கை துங்க
பரிமளப டீரகும்ப விம்ப
ம்ருகமதப யோதரம் புணர்ந்த  பெருமாளே.

1032. மழையளக பாரமுங் குலைந்து
வரிபரவு நீலமுஞ் சிவந்து
மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப  அணைமீதே
மகுடதன பார முங்கு லுங்க
மணிகலைக ளேற வுந்தி ரைந்து
வசமழிய வேபு ணர்ந்த ணைந்து  மகிழ்வாகிக்

குழையஇத ழூற லுண்ட ழுந்தி
குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச
குமுதபதி போக பொங்கு கங்கை  குதிபாயக்
குழியிலிழி யாவி தங்க ளொங்கு
மதனகலை யாக மங்கள் விஞ்சி
குமரியர்க ளோடு ழன்று நைந்து  விடலாமோ

எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச
இரணகள மாக அன்று சென்று
எழுசிகர மாநி லங்கு லுங்கு  விசையூடே
எழுகடலு மேரு வுங்க லங்க
விழிபடர்வு தோகை கொண்ட துங்க
இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த  வடிவேலா

பொழுதளவு நீடு குன்று சென்று
குறவர்மகள் காலி னும்ப ணிந்து
புளிஞரறி யாம லுந்தி ரிந்து  புனமீதே
புதியமட லேற வுந்து ணிந்த
அரியபரி தாப முந்த ணிந்து
புளகிதப யோத ரம்பு ணர்ந்த  பெருமாளே.

1033. கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய
சொற்பாகைக் காட்டிப் புழுகொடு
கஸ்தூரிச் சேற்றைத் தடவிய  இளநீரைக்
கட்சேலைக் காட்டிக் குழலழ
கைத்தோளைக் காட்டித் தரகொடு
கைக்காசைக் கேட்டுத் தெருவினில்  மயில்போலே

நிற்பாருக் காட்பட் டுயரிய                   
வித்தாரப் பூக்கட் டிலின்மிசை
நெட்டூரக் கூட்டத் தநவர  தமுமாயும்
நெட்டாசைப் பாட்டைத் துரிசற
விட்டேறிப் போய்ப்பத் தியருடன்
நெக்கோதிப் போற்றிக் கழலிணை  பணிவேனோ

வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை
மைச்சாவிக் காக்கைக் கடவுளை
விட்டார்முக் கோட்டைக் கொருகிரி  யிருகாலும்
விற்போலக் கோட்டிப் பிறகொரு
சற்றேபற் காட்டித் தழலெழு 
வித்தார்தத் வார்த்தக் குருபர  னெனவோதும்

பொற்பாபற் றாக்கைப் புதுமலர்
பெட்டேயப் பாற்பட் டுயரிய
பொற்றோளிற் சேர்த்துக்கருணைசெ  யெனமாலாய்ப்
புட்கானத் தோச்சிக் கிரிமிசை
பச்சேனற் காத்துத் திரிதரு
பொற்பூவைப் பேச்சுக் குருகிய  பெருமாளே.

1034. சிற்றாயக் கூட்டத் தெரிவையர்
வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி
சற்றேறப் பார்த்துச் சிலபணி  விடையேவிச்
சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு
பித்தேறிக் கூப்பிட் டவர்பரி
செட்டாமற் றூர்த்தத் தலைபடு  சிறுகாலை

உற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு
பற்றாயப் பூட்டுக் கயிறுகொ
டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு  தடுமாறி
உக்காரித் தேக்கற் றுயிர்நழு
விக்காயத் தீப்பட் டெரியுட
லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது  மொருநாளே

வற்றமுற் றாப்பச் சிளமுலை
யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு
மைக்காமக் கோட்டக் குலமயில்  தருபாலா
மத்தோசைப் போக்கிற் றயிருறி
நெய்ப்பாலுக் காய்ச்சிக் கிருபதம்
வைத்தடிக் காட்டிப் பருகரி  மருகோனே

கற்றவிற் காட்டிக் கரைதுறை 
நற்றயிற் காட்டிப் புகழ்கலை
கற்றர்சொற் கேட்கத் தனிவழி  வருவோனே
கைக்சூலக் தூள்பட் கணைமத
னைத் தூள்பட் டார்ப்பக் கனல்பொழி
கர்த்தாவுக் கேற்கப் பொருளருள்  பெருமாளே.

1035. இருட்குழலைக் குலைத்துமுடித்
தெழிற்கலையைத் திருத்தியுடுத்
திணைக்கயலைப் புரட்டிவிழித்  ததிபார
இழைக்களபப் பொருப்பணிகச்
செடுத்துமறைத் தழைத்துவளைத்
திருத்தியகப் படுத்திநகைத்  துறவாடிப்

பொருட்குமிகத் துதித்திளகிப்
புலப்படுசித் திரக்கரணப்
புணர்ச்சிவிளைத் துருக்குபரத்  தையர்மோகப்
புழுத்தொளையிற் றிளைத்ததனைப் 
பொறுத்தருளிச் சடக்கெனஅப்
புறத்திலழைத் திருத்தியளித்  திடுவாயே

உருத்திரரைப் பழித்துலகுக்
குகக்கடையப் பெனக்ககனத்
துடுத்தகரப் படுத்துகிரித்  தலமேழும்
உடுத்தபொலப் பொருப்புவெடித்
தொலிப்பமருத் திளைப்பநெருப்
பொளிக்கஇருப் பிடத்தைவிடச்  சுரரோடித்

திரைக்கடலுட் படச்சுழலச்
செகத்திரையமிப் படிக்கலையச்
சிரித்தெதிர்கொக் கரித்துமலைத்  திடுபாவி
செருக்கழியத் தெழித்துதிரத்
திரைக்கடலிற் சுழித்தலையிற்
றிளைத்த அயிற் கரக்குமரப்  பெருமாளே.

1036. வினைத்திரளுக் கிருப்பெனவித்
தகப்படவிற் சலப்பிலமிட்
டிசைக்குமிடற் குடிற்கிடைபுக்  கிடுமாய
விளைப்பகுதிப் பயப்பளவுற்
றமைத்ததெனக்கருத்தமைவிற்
சகப்பொருள்மெய்க் குறப்பருகக்  கருதாதே

எனக்கெதிரொப் பிசைப்பவரெத்
தலத்துளரெச் சமர்த்தரெனப்
புறத்துரையிட் டிகழ்ச்சியினுற்  றிளையாதுன்
எழிற்கமலத் திணைக்கழலைத்
தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த்
திடக்கருணைத் திறத்தெனைவைத்  தருள்வாயே

சினத்தைமிகுத் தனைத்துலகத்
திசைக்கருதிக் கடற்பரவித்
திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற்  றிடுசூரன்
சிரத்துடன்மற் புயத்தகலத்
தினிற்குருதிக் கடற்பெருகச்
சிறப்புமிகத் திறத்தொடுகைத்  திடும்வேலா

கனத்தமருப் பினக்கரிநற்
கலைத்திரள்கற் புடைக்கிளியுட்
கருத்துருகத் தினைக்குளிசைத்  திசைபாடிக்
கனிக்குதலைச் சிறுக்குயிலைக்
கதித்தமறக் குலப்பதியிற்
களிப்பொடுகைப் பிடித்தமணப்  பெருமாளே.

1037. முத்து மணிபணிக ளாரத் தாலு
மொய்த்த மலைமுலைகொ டேவித் தார
முற்று மிளைஞருயிர் மோகித் தேகப்  பொருமாதர்
முற்று மதிமுகமும் வானிற் காரு
மொத்த குழல்விழியும் வேய்நற் றோளு
முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற்  கிடைமூழ்கிப்

புத்தி கரவடமு லாவிச் சால
மெத்த மிகஅறிவி லாரைத் தேறி
பொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப்  புவியூடே
பொய்க்கு ளொழுகியய ராமற் போது
மொய்த்த கமலஇரு தாளைப் பூண
பொற்பு மியல்புதுமை யாகப் பாடப்  புகல்வாயே

பத்து முடியுமத னோடத் தோளிர்
பத்து மிறையவொரு வாளிக் கேசெய்
பச்சை முகில்சதுர வேதத் தோடுற்  றயனாரும்
பற்ற வரியநட மாடத் தாளில்
பத்தி மிகவினிய ஞானப் பாடல்
பற்று மரபுநிலை யாகப் பாடித்  திரிவோனே

மெத்த அலைகடலும் வாய்விட் டோட
வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர்
மெய்க்கு ளுறஇலகுவேலைப்போகைக்  கெறிவோனே
வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம்
வித்து விளைபுனமும் வேய்முத் தீனும்
வெற்பு முறையுமயில் வேளைக் காரப்  பெருமாளே.

1038. விட்ட புழுகுபனி நீர்கத் தூரி
மொய்த்த பரிமளப டீரச் சேறு
மிக்க முலையைவிலை கூறிக் காசுக்  களவேதான்
மெத்த விரியுமலர் சேர்கற் பூர
மெத்தை மிசைகலவி யாசைப் பாடு
விறகு மகளிர்சுரு ளோலைக் கோலக்  குழையோடே

முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன்
விட்ட பகழிதனை யோடிச் சாடி
மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக்  கயல்மீனை
முக்கி யமனையட மீறிச் சீறு
மைக்கண் விழிவலைய லேபட் டோடி
முட்ட வினையன்மரு ளாகிப் போகக்  கடவேனோ

செட்டி யெனுமொர்திரு நாமக் கார
வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார
திக்கை யுலகைவல மாகப் போகிக்  கணமீளுஞ்
சித்ர குலகலப வாசிக் கார
தத்து மகரசல கோபக் கார
செச்சை புனையுமண வாளக் கோலத்  திருமார்பா

துட்ட நிருதர்பதி சூறைக் கார
செப்பு மமரர்பதி காவற் கார
துப்பு முகபடக போலத் தானக்  களிறூரும்
சொர்க்க கனதளவி நோதக் கார
முத்தி விதரணவு தாரக் கார
சுத்த மறவர்மகள் வேளைக் காரப்  பெருமாளே.

1039. ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
மேவதுப ழிக்கும்  விழியாலே
ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி
லேமருவி மெத்த  மருளாகி

நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
நாரியர்கள் சுற்ற  மிவைபேணோ
ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும்
நாடிநர கத்தில்  விழலாமோ

ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
யாடுமொரு பச்சை  மயில்வீரா
ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
ஆருமுய நிற்கு  முருகோனே

வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
மேவியகு றத்தி  மணவாளா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த  பெருமாளே.

1040. சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
மானபிணி சுற்றி  யுடலூடே
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
தீதுவிளை விக்க  வருபோதில்

தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம தற்கு  ளழியாமுன்
தாரணித னக்கு ளாரணமு ரைத்த
தாள்தரநி னைத்து  வரவேணும்

மாதர்மய லுற்று வாடவடி வுற்று
மாமயிலில் நித்தம்  வருவோனே
மாலுமய னொப்பி லாதபடி பற்றி
மாலுழலு மற்ற  மறையோர்முன்

வேதமொழி வித்தை யோதியறி வித்த
நாதவிறல் மிக்க  இகல்வேலா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த  பெருமாளே.

1041. தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற
தோர்தனம சைத்து  இளைஞோர்தம்
தோள்வலிம னத்து வாள்வலியு ழக்கு
தோகையர் மயக்கி   லுழலாதே

பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி
யோடுநினை பத்தர்  பெருவாழ்வே
பாவவினை யற்று னாமநினை புத்தி
பாரிலருள் கைக்கு  வரவேணும்

ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி
ஆண்மையுட  னிற்கு  முருகோனே
ஆதியர னுக்கு வேதமொழி முற்றி
யார்வம்விளை வித்த  அறிவோனே

வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு
வேளையென நிற்கும்  விறல்வீரா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த  பெருமாளே.

1042. தோதகமி குத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு  மதநீர்தோய்
சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று
சோகைபல குட்ட  மவைதீரா

வாதமொடு பித்த மூலமுடன் மற்று
மாயபிணி சற்று  மணுகாதே
வாடுமெனை முத்தி நீடியப தத்தில்
வாழமிக வைத்து  அருள்வாயே

காதல்மிக வுற்று மாதினைவ ளைத்த
கானககு றத்தி  மணவாளா
காசினிய னைத்து மோடியள விட்ட
கால்நெடிய பச்சை  மயில்வீரா

வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்
வேதனைத விர்க்கு  முருகோனே
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த  பெருமாளே.

1043. காதி மோதி வாதாடு நூல்கற்  றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப்  பெறுவோரும்
மாது பாகர் வாழ்வே யெனாநெக்  குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக்  கலைவாரே
நாத ரூப மாநாத ராகத்  துறைவோனே
நாக லோக மீரேழு பாருக்  குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற்  கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப்  பெருமாளே.

1044. கூறு மார வேளார வாரக்  கடலாலே
கோப மீது மாறாத கானக்  குயிலாலே
மாறு போலு மாதாவின் வார்மைப்  பகையாலே
மாது போத மாலாகி வாடத்  தகுமோ தான்
ஏறு தோகை மீதேறி யாலித்  திடும்வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவற்  கொடியோனே
சீறு சூரர் நீறாக மோதிப்  பொரும்வேலா
தேவ தேவ தேவாதி தேவப்  பெருமாளே.

1045. பேர வாவ றாவாய்மை பேசற்  கறியாமே
பேதை மாத ராரோடு கூடிப்  பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற்  றடிநாயேன்
ஆவி சாவி யாகாமல் நீசற்  றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க்  கெளிவாயா
தோகை யாகு மாரா கிராதக்  கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப்  பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப்  பெருமாளே.

1046. காதி லோலை கிழிக்குங் காமபாண விழிக்குங்
கான யாழின் மொழிக்கும்  பொதுமாதர்
காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்கும்
காதில் நீடு குழைக்கும்  புதிதாய

கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்
கோவை வாயமு துக்குந்  தணியாமல்
கூருவே னொரு வர்க்குந் தேடொ ணாததொ ரர்த்தங்
கூடு மாறொரு சற்றுங்  கருதாயோ

பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர்து திக்கும்
போத தேசிக சக்ரந்  தவறாதே
போக பூமி புரக்குந் த்யாக மோககு றப்பெண்
போத ஆதர வைக்கும்  புயவீரா

சோதி வேலை யெடுத்தன் றோத வேலையில் நிற்குஞ்
சூத தாருவும் வெற்பும்  பொருகோவே
சூரர் சேனை யனைத்துந் தூளி யாகந டிக்குந்
தோகை வாசி நடத்தும்  பெருமாளே.

1047. காரு லாவு குழற்குங் கூரி தான விழிக்குங்
காதல் பேணு நுதற்குங்  கதிர்போலும்
காவி சேர்பவ ளத்தின் கோவை வாயித ழுக்கும்
காசு பூணு முலைக்கும்   கதிசேரா

நேரி தான இடைக்கும் சீத வார நகைக்கும்
நேரி லாத தொடைக்கும்  சதிபாடும்
நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன்
னேய மோடு துதிக்கும்  படிபாராய்

பார மேரு வளைக்கும் பாணி யார்சடை யிற்செம்
பாதி சோம னெருக்கும்  புனைவார்தம்
பால காஎன நித்தம் பாடு நாவலர் துக்கம்
பாவ நாச மறுத்தின்  பதமீவாய்

சோரி வாரி யிடச்சென் றேறி யோடி யழற்கண்
சூல காளி நடுங்கும்  படிவேலாற்
சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்
தோகை வாசி நடத்தும்  பெருமாளே.

1048. தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
தோய்மைக்க ணால்மிக்க  நுதலாலே
தோள்வெற்பி னால்விற்கைவேளுக்கு மேன்மக்கள்
சோர்கைக்கு மால்விற்கு  மடவார்தம்

ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க
ஓசைக்கு நேசித்து  உழலாதே
ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி
யோதற்கு நீசற்று  முணர்வாயே

வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்
மீதுற்ற பேதைக்கொர்  மணவாளா
வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க
வேதத்தி லேநிற்கு  மயனாருந்

தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த
சேமத்தி னாமத்தை  மொழிவோனே
தீதற்ற நீதிக்கு ளேள்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த  பெருமாளே.

1049. தோலத்தி யாலப்பி னாலெப்பி லாதுற்ற
தோளுக்கை காலுற்ற  குடிலூடே
சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
வேதித்த சூலத்த  னணுகாமுன்

கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
டேபட்டு வீழ்வித்த  கொலைவேலா
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
கூர்கைக்கு நீகொற்ற  அருள்தாராய்

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த
ராவிக்கள் மாள்வித்து  மடியாதே
ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு
மாம்வித்தை யாமத்தை  யருள்வோனே

சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
தோதக்கண் மானுக்கு  மணவாளா
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த  பெருமாளே.

1050. ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
யூருங் கருவழி  யொருகோடி
ஓதும் பலகடைல கீதஞ் சகலமு
மோரும் படியுன  தருள்பாடி

நானுன் திருவடி பேணும் படியிரு
போதுங் கருணையில்  மறவாதுன்
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும் படியருள்  புரிவாயே

கானுற் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
காலங் களுநடை  யுடையோனும்
காருங் கடல்வரை நீருந் தருகயி
லாயன் கழல்தொழு  மிமையோரும்

வானிந் திரனெடு மாலும் பிரமனும்
வாழும் படிவிடும்  வடிவேலா
மாயம் பலபுரி சூரன் பொடிபட
வாள்கொண் டமர்செய்த  பெருமாளே.

1051. தீயும் பவனமு நீருந் தரணியும்
வானுஞ் செறிதரு  பசுபாசத்
தேகந் தனைநிலை யேயொன் றிருவினை
தீருந் திறல்வினை  யறியாதே

ஓயும் படியறு நூறும் பதினுறழ்
நூறும் பதினிரு  பதுநூறும்
ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல
யோகம் புரிவது  கிடையாதோ

வேயுங் கணியும்வி ளாவும் படுபுன
மேவுஞ் சிறுமிதன்  மணவாளா
மீனம் படுகட லேழுந் தழல்பட
வேதங் கதறிய  வொருநாலு

வாயுங் குலகிரி பாலுந் தளைபட
மாகந் தரமதில்  மறைசூரன்
மார்புந் துணையுறு தோளுந் துணிபட
வாள்கொண் டமர்செய்த  பெருமாளே.

1052. வாதந் தலைவலி சூலம் பெருவயி
றாகும் பிணியவை  யணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
வாழுங் கருவழி  மருவாதே

ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியி  லுழலாதே
ஓதும் பலஅடி யாருங் கதிபெற
யானுன் கழலிணை  பெறுவேனோ

கீதம் புகழிசை நாதங் கனிவொடு
வேதங் கிளர்தர  மொழிவார்தம்
கேடின் பெருவலி மாளும் படியவ
ரோடுங் கெழுமுத  னுடையோனே

வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
மேவும் பதமுடை  விறல்வீரா
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட
வேல்கொண் டமர்செய்த  பெருமாளே.

1053. ஊனே தானா யோயா நோயா
லூசா டூசற்  குடல்பேணா
ஓதா மோதா வாதா காதே
லோகா சாரத்  துளம்வேறாய்

நானே நீயாய் நீயே நானாய்
நானே வேதப்  பொருளாலும்
நாடா வீடா யீடே றாதே
நாயேன் மாயக்  கடவேனோ

வானே காலே தீயே நீரே
பரோ பாருக்  குரியோனே
மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக்  கொடியோனே

தேனே தேனீள் காணா றாய்வீழ்
தேசார் சாரற்  கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.

1054. சாவா மூவா வேளே போல்வாய்
தாளா வேனுக்  கருள்கூரும்
தாதா வேஞா தாவே கோவே
சார்பா னார்கட்  குயிர் போல்வாய்

ஏவால் மாலே போல்வாய் காரே
போல்வா யீதற்  கெனையாள்கொண்
டேயா பாடா வாழ்வோர் பாலே
யான்வீ ணேகத்  திடலாமோ

பாவா நாவாய் வாணீ சார்வார்
பாரா வாராத்  துரகேசப்
பாய்மீ தேசாய் வார்கா ணாதே
பாதா ளாழத்  துறுபாதச்

சேவா மாவூர் கோமான் வாழ்வே
சீவா னேசெச்  சையமார்பா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.

1055. நாரா லேதோல் நீரா லேயாம்
நானா வாசற்  குடிலூடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
நாய்பேய் சூழ்கைக்  கிடமாமுன்

தாரா ரார்தோ ளீரா றானே
சார்வா னோர்நற்  பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
தாள்பா டாண்மைத்  திறல்தாராய்

பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
பாவார் வேதத்  தயனாரும்
பாழூ டேவா னூடே பாரூ
டேயூர் பாதத்  தினைநாடாச்

சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
சேவூர் வார்பொற்  சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.

1056. மாதா வோடே மாமா னானோர்
மாதோ டேமைத்  துனமாரும்
மாறா னார்போ னீள்தீ யூடே
மாயா மோகக்  குடில்போடாப்

போதா நீரு டேபோய் மூழ்கா
வீழ்கா வேதைக்  குயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்
போதார் பாதத்  தருள்தாராய்

வேதா வோடே மாலா னார்மேல்
வானோர் மேனிப்  பயமீள
வேதா னோர்மே லாகா தேயோர்
வேலால் வேதித்  திடும்வீரா

தீதார் தீயார் தீயூ டேமூள்
சேரா சேதித்  திடுவோர்தம்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.

1057. வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத்  துடனாசை
மாசூ டாடா தூடே பாராய்
மாறா ஞானச்  சுடர்தானின்

றாரா யாதே யாராய் பேறாம்
ஆனா வேதப்  பொருள்காணென்
றாள்வாய் நீதா னாதா பார்மீ
தார்வே றாள்கைக்  குரியார்தாம்

தோரா வானோர் சேனா தாரா
சூரா சாரற்  புனமாது
தோள்தோய் தோளீ ராறா மாசூர்
தூளாய் வீழச்  சிறுதாரைச்

சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித்  திடும்வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.

1058. அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய
அரிய மோன மேகோயி  லெனமேவி
அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான
அறிவி னாத ராமோத  மலர்தூவிச்

சகல வேத னாதீத சகல வாச காதீத
சகல மாக்ரி யாதீத  சிவரூப
சகல சாத காதீத சகல வாச னாதீத
தனுவை நாடி மாபூசை  புரிவேனோ

விகட தார சூதான நிகள பாத போ தூள
விரக ராக போதார  சுரர்கால
விபுத மாலி காநீல முகப டாக மாயூர
விமல வ்யாப காசீல  கவிநோத

ககன கூட பாடீர தவள சோபி தாளான
கவன பூத ராரூட  சதகோடி
களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர
கருணை மேலு வேதேவர்  பெருமாளே.

1059. அடைப டாது நாடோறும் இடைவி டாது போம்வாயு
அடைய மீளில் வீடாகு  மெனநாடி
அருள்பெ றாவ னாசார கருமயோகி யாகாமல்
அவனி மீதி லோயாது  தடுமாறும்

உடலம் வேறு யான்வேறு காரணம் வேறு வேறாக
உதறி வாச காதீத  அடியூடே
உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன்
உபய பாத ராசீக  மருள்வாயே

வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது
மகர வாரி யோரேழு  மமுதாக
மகுட வாள ராநோவ மதிய நோவ வாரீச
வனிதை மேவு தோளாயி  ரமுநோவக்

கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி
புதல்வ கான வேல்வேடர்  கொடிகோவே
கனக லோக பூபால சகல லோக ஆதார
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

1060. அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
அமுத பான மேமூல  அனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
அரிச தான சோபான  மதனாலே

எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக  வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத  மருள்வாயே

விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
விபுத மேக மேபோல  வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
வெகுவி தாமு காகாய  பதமோடிக்

கமல யோனி வீடான ககன கோள மீதோடு
கலப நீல மாயூர  இளையோனே
கருணை மேக மே தூய கருணை வாரி யேயீறில்
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

1061. அயிலின் வாளி வேல்வொளி அளவு கூரி தாயீச
ரமுத ளாவு மாவேச  மதுபோல
அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி
னளவு மோடி நீடோதி  நிழலாறித்

துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத
துறவ ரான பேர்யாரு  மடலேறத்
துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு
துவளு வேனை யீடேறு  நெறிபாராய்

பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான
பவதி யாம ளாவாமை  அபிராமி
பரிபு ரார பாதார சரணி சாம ளாகார
பரம யோகி னீமோகி  மகமாயி

கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி
கனத னாச லாபார  அமுதூறல்
கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

1062. இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
இனிய போக வாராழி  யதில்மூழ்கி
இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு
மினிய மாதர் தோள்கூடி  விளையாடும்

சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான
சமுக மோத ராபூத  முதலான
சகள மோச டாதார முகுள மோநி ராதார
தரணி யோநி ராகார  வடிவேயோ

பரத நீல மாயூர வரத நாக கேயூர
பரம யோகி மாதேசி  மிகுஞான
பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத
பதும சேக ராவேலை  மறவாத

கரத லாவி சாகாச கலக லாத ராபோத
கமுக மூஷி காருட  மததாரைக்
கடவுள் தாதை சூழ்போதி லுலக மேழு சூழ்போது
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

1063. குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
குலைய ஏம னாலேவி  விடுகாலன்
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
கொடுமை நோய்கொ டேகோலி  யெதிராமுன்

பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
பயமு றாமல் வேலேவு  மிளையோனே
பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
பரிவி னோடு தாள்பாட  அருள்தாராய்

மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவி லானை தான்மூல  மெனவோடி
வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசன மோம றாகேசன்  மருகோனே

கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
கடிய பேயி னோடாடி  கருதார்வெங்
கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

1064. சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
துரிய மீது சாராது  எவராலும்
தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத
சுகம கோத தீயாகி  யொழியாது

பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
பவனம் வீசில் வீழாது  சலியாது
பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது
பரம ஞான வீடேது  புகல்வாயே

நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள
நிபிட தாரு காபூமி  குடியேற
நிகர பார நீகார சிகர மீது வேலேவு
நிருப வேத ஆசாரி  யனுமாலும்

கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி
ககன சாரி பூசாரி  வெகுசாரி
கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

1065. தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
சுருதி கூறு வாராலு  மெதிர்கூறத்
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
துரிய மாகி வேறாகி  யறிவாகி

நெடிய கால்கை யோடோடு முடலின் மேவி நீநானு
மெனவு நேர்மை நூல்கூறி  நிறைமாயம்
நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி
நினைவொ டேகு மோர்நீதி  மொழியாதோ

அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
யமர்செய் வீர ஈராறு  புயவேளே
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்
அரியும் வாழ வானுளு  மதிரேகா

கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்
கருதி டார்கள் தீமுள  முதல்நாடும்
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

1066. நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம
நிழலில் மாட மாமாளி  கையின்மேலாம்
நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு
நியதி யாக வாயார  வயிறார

இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி
யிளகி யேறு பாடீர  தனபாரம்
எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு
கினுமு னீப சீர்பாத  மறவேனே

குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்
குழைய மாலி காநாக  மொடுதாவிக்
குடில கோம ளாகார சடில மோலி மீதேறு
குமர வேட மாதோடு  பிரியாது

கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்
கடக வாரி தூளாக  அமராடும்
கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

1067. மனக பாட பாடீர தனத ராத ராரூப
மதன ராக ராசீப  சரகோப
வருண பாத காலோக தருண சோபி தாகார
மகளி ரோடு சீராடி  யிதமாடிக்

குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
குறைய னேனை நாயேனை  வினையேனைக்
கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத
குருட னேனை நீயாள்வ  தொருநாளே

அநக வாம னாகார முனிவ ராக மால்தேட
அரிய தாதை தானேவ  மதுரேசன்
அரிய சார தாபீட் மதனி லேறி யீடேற
அகில நாலு மாராயு  மிளையோனே

கனக பாவ னாகார பவள கோம ளாகார
கலப சாம ளாகார  மயிலேறும்
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

1068. அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட  அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையிலேறு வாராட
அருகு பூத வேதாள  மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட  மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி  வரவேணும்

கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை  பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி  அலைமோதும்

உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன்  மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர்  பெருமாளே.

1069. குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
குடிசை கோழை மாசூறு  குழிநீர்மேற்
குமிழி போல நேராகி அழியு மாயை யாதார
குறடு பாறு நாய்கூளி  பலகாகம்

பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்
படியின் மூழ்கி யேபோது  தளிர்வீசிப்
பரவு நாட காசார கிரியை யாளர் காணாத
பரம ஞான வீடேது  புகல்வாயே

எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான
இமய மாது மாசூலி  தருபாலா
எழுமை யீறு காணாதர் முனிவ ரோடு வானாட
ரிசைக ளோடு பாராட  மகிழ்வோனே

அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக
மதிர நாக மோரேழு  பொடியாக
அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட
அசுரர் மாள வேலேவு  பெருமாளே.

1070. சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி
தணிகை பொருடி ராப்பகல்  தடுமாறும்
சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு
சரண கமல மேத்திய  வழிபாடுற்

றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ
ரறிவின் வடிவ மாய்ப்புள  கிதமாகி
அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில
ரதிப திவிடு பூக்கணை  படுமோதான்

விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ
மிடையு மலகில் தேர்ப்படை  யொடுசூழும்
விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்
விசைய னொருவ னாற்பட  வொருதூது

திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி
சிறுவ தறுகண் வேட்டுவர்  கொடிகோவே
திமிர வுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு
சிகரமி தகர வீக்கிய  பெருமாளே.

1071. மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்
மறுகி புறமு மார்த்திட  வுடலூடே
மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ
ருடனு மியமன் மாட்டிட  அணுகாமுன்

உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு
முளது மிலது மாச்சென  வுறைவோரும்
உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு
உனது கழல்கள் போற்றிட  அருள்தாராய்

புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக
ழுடைய திருத ராட்டிர  புதல்வோர்தம்
புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்
புவியின் விதன மாற்றினர்  மருகோனே

மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு
வெனவு மருவி வேற்கொடு  பொருசூரன்
விரைசெய் நெடிய தோட்கன அடலுமுருவ வேற்படை
விசைய முறவும் வீக்கிய  பெருமாளே.

1072. குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு
குறைவி லாப்பல  என்பினாலும்
கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய
குடிலி லேற்றுயி  ரென்றுகூறும்

வடிவி லாப்புல மதனை நாட்டிடு
மறலி யாட்பொர  வந்திடாமுன்
மதிய மூத்துன தடிக ளேத்திட
மறுவி லாப்பொருள்  தந்திடாதோ

கடிய காட்டக முறையும் வேட்டுவர்
கருதொ ணாக்கணி  வெங்கையாகிக்
கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்
களவி னாற்புணர்  கந்தவேளே

முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ
முடிய வேற்கொடு  வென்றவீரா
முடிவி லாத்திரு வடிவை நோக்கிய
முதிய மூர்த்திகள்  தம்பிரானே.

1073. பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பக
விரவு போய்ப்புகல்  கின்றவேதப்
பொருள் தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
வெளிய தாய்ப்புதை  வின்றியீறில்

கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
கமுத மாய்ப்புல  னைந்துமாயக்
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தையி  ருந்தவாறென்

உததி கூப்பிட நிருத ரார்ப்பெழு
உலகு போற்றிட  வெங்கலாப
ஒருப ராக்ரம துரக மோட்டிய
வுரவ கோக்கரி  நண்பவானோர்

முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
முலைகள் தேக்கிட  வுண்டவாழ்வே
முளரி பாற்கடல் சயில் மேற்பயில்
முதிய மூர்த்திகள்  தம்பிரானே.

1074. கவடு கோத்தெழு முவரி மாத்திறல்
காய்வேல் பாடே னாடேன் வீடா  னாதுகூடக்
கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன
கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ  தினும்வீழேன்

தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்
தாழா தீயேன் வாழா தேசா  வதுசாலத்
தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச
தாவா மாறே நீதா னாதா  புரிவாயே

சுவடு பார்த்துட வருக ராத்தலை
தூளா மாறே தானா நாரா  யணனேநற்
றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது
ழாய்மார் பாகோ பாலா காவா  யெனவேகைக்

குவடு கூப்பிட வுவண மேற்கன
கோடூ தாவா னேபோ தாள்வான்  மருகோனே
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர்  பெருமாளே.

1075. பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
பாராய் வானாய் நீர்தீ காலா  யுடுசாலம்
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப்பதி
னாலா றேழா மேனா ளாயே  ழுலகாகிச்

சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
ராய்வே தாவாய் மாலாய் மேலே  சிவமான
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
சூடா நாடா ஈடே றாதே  சுழல்வேனோ

திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
சேணா டாள்வா னாளோர் மூவா  றினில்வீழத்
திலக பார்த்தனு முலகு காத்தருள்
சீரா மாறே தேரூர் கோமான்  மருகோனே

குருதி வேற்கர நிருத ராக்ஷத
கோபா நீபா கூதா ளாமா  மயில்வீரா
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர்  பெருமாளே.

1076. முதலி யாக்கையு மிளமை நீத்தற
மூவா தாரா காவா தாரா  எனஞாலம்
முறையி டாப்படு பறைக ளார்த்தெழ
மூடா வீடூ டேகேள் கோகோ  எனநோவ

மதலை கூப்பிட மனைவி கூப்பிட
மாதா மோதா வீழா வாழ்வே  யெனமாய
மறலி யூர்ப்புகு மரண யாத்திரை
வாரா வானாள் போநாம் நீமீ  ளெனவேணும்

புதல றாப்புன எயினர் கூக்குரல்
போகா நாடார் பாரா வாரா  ரசுரோடப்
பொருது தாக்கிய வயப ராக்ரம
பூபா லாநீ பாபா லாதா  தையுமோதும்

குதலை வாய்க்குரு பரச டாக்ஷர
கோடா ரூபா ரூபா பாரீ  சதவேள்விக்
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர்  பெருமாளே.

1077. வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்
வாளோ வேலோ சேலோ மானோ  எனுமாதர்
மனது போற்கரு கினகு வாற்சூழல்
வானோ கானோ மாயா மாயோன்  வடிவேயோ

பருகு பாற்கடல் முருகு தேக்கிய
பாலோ தேனா பாகோ வானோ  ரமுதேயோ
பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி
பாடா நாயே னீடே றாதே  யொழிவேனோ

அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ
ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ  வெனஏகி
அவுணர் கூப்பிட வுததி தீப்பட
ஆகா சூரா போகா தேமீ  ளெனவோடிக்

குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய
கூர்வே லாலே யார்வா ளாலே  அமராடிக்
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர்  பெருமாளே.

1078. மறலி போற்சில நயன வேற்கொடு
மாயா தோயா வேயார் தோளார்  மறையோதும்
வகையு மார்க்கமு மறமு மாய்த்திட
வாறா ராயா தேபோ மாறா  திடதீர
 
விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்
வேறாய் நீரே றாதோர் மேடாய்  வினையூடே
விழுவி னாற்களை யெழும தாற்பெரு
வீரா பாராய் வீணே மேவா  தெனையாளாய்

மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம
மால்கா ணாதே மாதோ டேவாழ்  பவர்சேயே
மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்
வாயார் நாவால் மாறா தேயா  தினர்வாழ்வே

குறவர் காற்புன அரிவை தோட்கன
கோடார் மார்பா கூர்வே லாலே  அசுரேசர்
குலைய மாக்கட லதனி லோட்டிய
கோவே தேவே வேளே வானோர்  பெருமாளே.

1079. குருதி யொழுகி யழுகு மவல
குடிலை யினிது  புகலாலே
குலவு மினிய கலவி மகளிர்
கொடிய கடிய  விழியாலே

கருது மெனது விரக முழுது
கலக மறலி  அழியாமுன்
கனக மயிலி னழகு பொழிய
கருணை மருவி  வரவேணும்

பரிதி சுழல மருவு கிரியை
பகிர எறிசெய்  பணிவேலா
பணில வுததி யதனி லசுரர்
பதியை முடுக  வரும்வீரா

இரதி பதியை யெரிசெய் தருளு
மிறைவர் குமர  முருகோனே
இலகு கமல முகமு மழகு
மெழுத வரிய  பெருமாளே.

1080. துயர மறுநின் வறுமை தொலையு
மொழியு மமிர்த  சுரபானம்
சுரபி குளிகை யெளிது பெறுக
துவளு மெமது  பசிதீரத்

தயிரு மமுது மமையு மிடுக
சவடி கடக  நெளிகாறை
தருக தகடொ டுறுக எனுமி
விரகு தவிர்வ  தொருநாளே

உயரு நிகரில் சிகரி மிடறு
முடலு மவுணர்  நெடுமார்பும்
உருவ மகர முகர திமிர
வுததி யுதர  மதுபீற

அயரு மமரர் சரண நிகள
முறிய எறியு  மயில்வீரா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய  பெருமாளே.

1081. பணிகள் பணமு மணிகொள் துகில்கள்
பழைய அடிமை  யொடுமாதும்
பகரி லொருவர் வருக அரிய
பயண மதனி  லுயிர்போகக்

குணமு மனமு டைய கிளைஞர்
குறுகி விறகி  லுடல்போடாக்
கொடுமை யிடுமு னடிமை யடிகள்
குளிர மொழிவ  தருள்வாயே

இணையி லருணை பழநி கிழவ
இளைய இறைவ  முருகோனே
எயினர் வயினின் முயலு மயிலை
யிருகை தொழுது  புணர்மார்பா

அணியொ டமரர் பணிய அசுரர்
அடைய மடிய  விடும்வேலா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய  பெருமாளே.

1082. மைந்த ரினிய தந்தை மனைவி
மண்டி யலறி  மதிமாய
வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
வன்கை யதனி  லுறுபாசம்

தந்து வளைய புந்தி யறிவு
தங்கை குலைய  உயிர்போமுன்
தம்ப முனது செம்பொ னடிகள்
தந்து கருணை  புரிவாயே

மந்தி குதிகொ ளந்தண் வரையில்
மங்கை மருவு  மணவாளா
மண்டு மசுரர் தண்ட முடைய
அண்டர் பரவ  மலைவோனே

இந்து நுதலு மந்த முகமு
மென்று மினிய  மடவார்தம்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய  பெருமாளே.

1083. ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி
உயர்கால் கரத்தி  னுருவாகி
ஒருதாய் வயிற்றினிடையே யுதித்து
உழல்மாய மிக்கு  வருகாயம்

பழசா யிரைப்பொ டிளையா விருத்த
பரிதாப முற்று  மடியாமுன்
பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்
பகர்வாழ் வெனக்கு  மருள்வாயே

எழுவா னகத்தி லிருநாலு திக்கி
லிமையோர் தமக்கு  மரசாகி
எதிரேறு மத்த மதவார ணத்தி
லினிதேறு கொற்ற  முடன்வாழும்

செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து
செழுதீ விளைத்து  மதிள்கோலித்
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
சிறைமீள விட்ட  பெருமாளே.

1084. கருவாய் வயிற்றி லுருவா யுதித்து
முருகாய் மனக்க  வலையோடே
கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த
தலைபோய் வெளுத்து  மரியாதே

இருபோது மற்றை யொருபோது மிட்ட
கனல்மூழ்கி மிக்க  புனல்மூழ்கி
இறவாத சுத்த மறையோர் துதிக்கு
மியல்போத கத்தை  மொழிவாயே

அருமாத பத்த அமரா பதிக்கு
வழிமூடி விட்ட  தனைமீள
அயிரா வதத்து விழியா யிரத்த
னுடனேபி டித்து  முடியாதே

திருவான கற்ப தருநா டழித்து
விபுதேசர் சுற்ற  மவைகோலித்
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
சிறைமீள விட்ட  பெருமாளே.

1085. புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்
புனத்தி லன்றுசென்  றுறவாடிப்
புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்
புதுக்கு ரும்பைமென்  புயமீதே

செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்
திளைக்கு நின்திறம்  புகலாதிந்
த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடும்
தியக்க மென்றொழிந்  திடுவேனோ

குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்
குவட்டி லங்கையுந்  துகளாகக்
கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்
கொதித்து மண்டுவெம்  பகையோடத்

துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்
துரத்த னும்பிறந்  திறவாத
சுகத்தி லன்பரும் செகத்ர யங்களும்
துதிக்கு மும்பர்தம்  பெருமாளே.

1086. பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்
ப்ரபுத்த னங்கள்பண்  பெணுநாணும்
பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்
றமைத்த பெண்தனந்  தனையாரத்

திருக்கை கொண்டணைந் திடச்சொல் கின்றநின்
திறத்தை யன்புடன்  தெளியாதே
சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்
திருக்கு மென்றொழிந்  திடுவேனோ

தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்
தரித்த குன்றநின்  றடியோடும்
தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்
தறித்த கண்டனெண்  டிசையோருஞ்

சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்
துணைச்செய் கின்றநின்  பதமேவும்
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களும்
துதிக்கு மும்பர்தம்  பெருமாளே.

1087. இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு  முறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும்  வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையென  மகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட  அருள்வாயே
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன்  மருகோனே
குரங்கு லாவும் குன்றுறை குறமகள்  மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு  புலவோனே
சிவந்த காலுந் தண்டையு மழகிய  பெருமாளே.

1088. கலந்த மாதுங் கண்களி யுறவரு  புதல்வோரும்
கலங்கி டாரென் றின்பமு றுலகிடை  கலிமேவி
உலந்த காயங் கொண்டுள முறுதுய  ருடன்மேவா
உகந்த பாதந் தந்துனை யுரைசெய  அருள்வாயே
மலர்ந்த பூவின் மங்கையை மருவரி  மருகோனே
மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய  மணவாளா
சிலம்பி னோடும் கிண்கிணி திசைதொறும்  ஒலிவீசச்
சிவந்த காலுந் தண்டையு மழகிய  பெருமாளே.

1089. இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும்  எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத னாடையு  மழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு  முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய  குருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரற  முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர்  நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில்  வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய  பெருமாளே.

1090. திரிபுர மதனை யொருநொடி யதனி
லெரிசெய் தருளிய  சிவன்வாழ்வே
சினமுடை யசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி  விடுவோனே

பருவரை யதனை யுருவிட எறியு
மறுமுக முடைய  வடிவேலா
பசலையொ டணையு மிளமுலை மகளை
மதன்விடு பகழி  தொடலாமோ

கரிதிரு முகமு மிடமுடை வயிறு
முடையவர் பிறகு  வருவோனே
கனதன முடைய குறவர்த மகளை
கருணையொ டணையு  மணிமார்பா

அரவணை துயிலு மரிதிரு மருக
அவனியு முழுது  முடையோனே
அடியவர் வினையு மமரர்கள் துயரு
மறஅரு ளுதவு  பெருமாளே.

1091. புழுககில் களப மொளிவிடு தரள
மணிபல செறிய  வடமேருப்
பொருமிக கலக முலையினை யரிவை
புனையிடு பொதுவின்  மடமாதர்

அழகிய குவளை விழியினு மமுத
மொழியினு மவச  வநுராக
அமளியின் மிசையி லவர்வச முருகி
அழியுநி னடிமை  தனையாள்வாய்

குழலிசை யதுகொ டறவெருள் சுரபி
குறுநிரை யருளி  யலைமோதும்
குரைசெறி யுததி வரைதனில் விறுசு
குமுகுமு குமென   வுலகோடு

முழுமதி சுழல வரைநெறு நெறென
முடுகிய முகிலின்  மருகோனே
மொகுமொகுமொகென ஞிமிறிசை பரவு
முளரியின் முதல்வர்  பெருமாளே.

1092. முழுமதி யனைய முகமிரு குழையில்
முனிவிழி முனைகள்  கொண்டுமூவா
முதலறி வதனை வளைபவர் கலவி
முழுகிய வினையை  மொண்டுநாயேன்

வழிவழி யடிமை யெனுமறி வகல
மனமுறு துயர்கள்  வெந்துவாட
மதிதரு மதிக கதிபெறு மடிகள்
மகிழ்வொடு புகழ  மன்புதாராய்

எழுதிட அரிய எழில்மற மகளின்
இருதன கிரிகள்  தங்குமார்பா
எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி
இமையவர் சிறையை  யன்றுமீள்வாய்

அழகிய குமர எழுதல மகிழ
அறுவர்கள் முலையை  யுண்டவாழ்வே
அமருல கிறைவ உமைதரு புதல்வ
அரியர பிரமர்  தம்பிரானே.

1093. கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
கூன்போந்  தசடாகுங்
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
கோண்பூண்  டமையாதே

பொடிவன பரசம யத்துத் தப்பிப்
போந்தேன்  தலைமேலே
பொருளாது பெறஅடி நட்புச் சற்றுப்
பூண்டாண்  டருள்வாயே

துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்
சூழ்ந்தாங்  குடனாடத்
தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்
தோந்தாந்  தரிதாளம் 

படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
பாழ்ங்கான்  தனிலாடும்
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
பாங்காம்  பெருமாளே.

1094. சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்
சூழ்ந்தோங்  கிடுபாரிற்
றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்
சோர்ந்தோய்ந்  திடநாறுங்

கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்
கான்போந்  துறவோரும்
கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்
காய்ந்தாண்  டருளாயோ

தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்
தாந்தோய்ந்  திருபாலும்
தமருக வொலிசவு தத்திற் றத்தத்
தாழ்ந் தூர்ந்  திடநாகம்

படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்
பாய்ந்தாய்ந்  துயர்கானம்
பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்
பாங்காம்  பெருமாளே.

1095. குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்
குறமகள் வைத்த நண்பை  நினைவோனே
வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த
மதசல முற்ற தந்தி  யிளைவோனே

இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து
இசையறி வித்து வந்து  எனையாள்வாய்
தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து
சமர்கள வெற்றி கொண்ட  பெருமாளே.

1096. மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து
மறுமைத னிற்சு ழன்று  வடிவான
சடமிக லற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து
தளர்வுறு தற்கு முந்தி  யெனையாள்வாய்

படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற
பசுமுகி லுக்கு கந்த  மருகோனே
குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப காந்த
குமரகு றத்தி நம்பு  பெருமாளே.

1097. கருமய லேறிப் பெருகிய காமக்
கடலினில் மூழ்கித்  துயராலே
கயல்விழி யாரைப் பொருளென நாடிக்
கழியும நாளிற்  கடைநாளே

எருமையி லேறித் தருமனும் வாவுற்
றிறுகிய பாசக்  கயிறாலே
எனைவளை யாமற் றுணைநினை வேனுக்
கியலிசை பாடத்  தரவேணும்

திருமயில் சேர்பொற் புயனென வாழத்
தெரியல னோடப்  பொரும்வீரா
செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்
செழுமறை சேர்பொற்  புயநாதா

பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்
புவியது சூழத்  திரிவோனே
புனமக ளாரைக் கனதன மார்பிற்
புணரும்வி நோதப்   பெருமாளே.

1098. குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
குலவிய கோலத்  தியினூடே
குருதியி லேசுக் கிலமது கூடிக்
குவலயம் வானப்  பொருகாலாய்

உடலெழு மாயப் பிறவியி லாவித்
துறுபிணி நோயுற்  றுழலாதே
உரையடி யேனுக் கொளிமிகு நீபத்
துனதிரு தாளைத்  தரவேணும்

கடலிடை சூரப் படைபொடி யாகக்
கருதல ரோடப்  பொரும்வேலா
கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்
கலைபல தேர்முத்  தமிழ்நாடா

சடையினர் நாடப் படர்மலை யோடித்
தனிவிளை யாடித்  திரிவோனே
தனிமட மானைப் பரிவுட னாரத்
தழுவும் நோதப்  பெருமாளே.

1099. கருதியே மெத்த விடமெலாம் வைத்த
கலகவா ளொத்த  விழிமானார்
கடினபோ கத்த புளகவா ருற்ற
களபமார் செப்பு  முலைமீதே 

உருகியான் மெத்த அவசமே வுற்ற
உரைகளே செப்பி  யழியாதுன்
உபயபா தத்தி னருளையே செப்பு
முதயஞா னத்தை  அருள்வாயே

பருவரா லுற்று மடுவின்மீ துற்ற
பகடுவாய் விட்ட  மொழியாலே
பரிவினோ டுற்ற திகிரியே விட்ட
பழயமா யற்கு  மருகோனே

முருகுலா வுற்ற குழலிவே டிச்சி
முலையின்மே வுற்ற  க்ருபைவேளே
முருகனே பத்த ரருகனே வெற்பு
முரியவேல் தொட்ட  பெருமாளே.

1100. கொலையிலே மெத்த விரகிலே கற்ற
குவளையேர் மைக்கண்  விழிமானார்
குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த
குழலிலே பற்கள்  தனிலேமா

முலையிலே யற்ப இடையிலே பத்ம
முகநிலா வட்ட  மதின்மீதே
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை
மொழியிலே சித்தம்  விடலாமோ

கலையனே உக்ர முருகனே துட்டர்
கலகனே மெத்த  இளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு
கடவுளே பச்சை  மயிலோனே

உலகனே முத்தி முதல்வனே சித்தி
உடையனே விஷ்ணு  மருகோனே
ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர
வுருவனே மிக்க  பெருமாளே.

1101. அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு
மசலமிரண் டாலு  மிடைபோமென்
றடியிலவிழுந் தாடு பரிபுரசெஞ் சீர
தபயமிடுங் கீத  மமையாதே

நகமிசைசென் றாடி வனசரர்சந் தான
நவையறநின் றேனல்  விளைவாள்தன்
லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர
நமசரணென் றோத  அருள்வாயே

பகலிரவுண் டான இருவரும்வண் டாடு
பரிமளபங் கேரு  கனுமாலும்
படிகநெடும் பார கடதடகெம் பீர
பணைமுகசெம் பால  மணிமாலை

முகபடசிந் தூர கரியில்வருந் தேவு
முடியஅரன் தேவி  யுடனாட
முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி
முடிவினுமஞ் சாத  பெருமாளே.

1102. கலகமதன் காதுங் கனமலரம் பாலும்
களிமதுவண் டூதும்  பயிலாலும்
கடலலையங் காலுங் கனஇரையொன் றாலுங்
கலைமதியங் காயும்  வெயிலாலும்

இலகியசங் காளும் இனியவளன் பீனும்
எனதருமின் தானின்  றிளையாதே
இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங்
கிருதனமுந் தோள்கொண்ண்   டணைவாயே

உலகைவளைந் தோடுங் கதிரவன்விண் பால்நின்
றுனதபயங் காவென்  றுனைநாட
உரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும்
உருவியுடன் போதும்  ஒளிவேலா

அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும்
அடைவுடனின் றாடும்  பெரியோர்முன்
அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென்
றழகுடனன் றோதும்  பெருமாளே.

1103. குருதிசலந் தோலும் குடலுடனென் பாலும்
குலவியெழுங் கோலந்  தனில்மாயக்
கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங்
குணவுயிர்கொண் டேகும்  படிகாலன்

கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங்
கதறமறந் தேனென்  றகலாமுன்
கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன்
கருணைமகிழ்ந் தோதுங்  கலைதாராய்

நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன்
நினைவுமகிந் தோடும்  படிவேலால்
நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின்
நிலைதொழநின் றேமுன்  பொருவீரா

பருதியுடன் சோமன் படியையிடந் தானும்
பரவவிடந் தானுண்  டெழுபாரும்
பயமறநின் றாடும் பரமருளங் கூரும்
பழமறையன் றோதும்  பெருமாளே.

1104. இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை
யெடுமெடென வீட்டி  லனைவோரும்
இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டி
லெரியஎரி மூட்டி  யிடுமாறு

கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்
கயிறிறுக மாட்டி  யழையாமுன்
கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு
கழலிணைகள் காட்டி  யருள்வாயே

பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு
பழையகுற வாட்டி  மணவாளா
பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு
பகருநுதல் நாட்ட  குமரேசா

அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை
அடைவடைவு கேட்ட  முருகோனே
அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி
அமரர்சிறை மீட்ட  பெருமாளே.

1105. உறவின்முறை யோர்க்கு முருதுயரம் வாய்த்து
உளமுருகு தீர்த்தி  வுடலூடே
உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டில்
உயர்கனலை மூட்டி  விடஆவி

மறிலிமற மார்த்த கயிறுதனை வீக்கி
வலிவினொடு தாக்கி  வளையாமுன்
மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள்
மகிழ்வியல்கொ டேத்த  மதிதாராய்

பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு
வரையில்மற வோர்க்கு  மகவாகப்
பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த
பிடியினடி போற்று  மணவாளா

அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த
அடர்சடையி னார்க்கு  மறிவீவாய்
அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து
அமரர்சிறை மீட்ட  பெருமாளே.

1106. அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென
அமுதமொழி பதறியெழ  அணியாரம்
அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக
அமுதநிலை யதுபரவ  அதிமோகம்

உளமுருக வருகலலி தருமகளிர் கொடுமையெனு
முறுகபட மதனில்மதி  யழியாதே
உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு
னுபயநறு மலரடியை  அருள்வாயே

வளையுமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு
மருதினொடு பொருதருளு  மபிராமன்
வரியரவின் மிசை துயிலும் வரதஜய மகள்கொழுநன்
மருகஅமர் முடுகிவரு  நிருதேசர்

தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற
தகனமெழ முடுகவிடு  வடிவேலா
தாளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ
சகலகலை முழுதும்வல  பெருமாளே.

1107. அனகனென அதிகனென அமலனென அசலனென
அபயனென அதுலனென   அநபாயன்
அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி
யவர்பெயரு மிடைசெருகி  யிசைபாடி

வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை
மகிபயுன தினையளவு  ளவுமீயா
மனிதர்கடைதொறுமுழலு மிடியொழிய மொழியொழிய
மனமொழிய வொருபொருளை  அருள்வாயே

இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென
இருசதுர திசையிலுர  கமும்வீழ
இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில
மெனவிமலை யமுனையென  நிழல்வீசிக்

ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி
கதுவியெழில் பொதியமிசை  படர்கோலக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத  பெருமாளே.

1108. குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு
கொழுவுமுதி ரமும்வெளிற  ளறுமாகக்
கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி
குமுகுமென இடைவழியில்  வரநாறும்

உடலின்மண மலிபுழுகு தடவியணி கலமிலக
வுலகமமரு ளுறவரும  ரிவையாரன்
பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன
தொழிவிலக லறிவையருள்  புரிவாயே

வடகனக சயிலமுக லியசயில மெனநெடிய
வடிவுகொளு நெடியவிறல்  மருவாரை
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென
மகரசல நிதிமுழுகி  விளையாடிக்

கடலுலகை யளவுசெய வளருமுகி லென அகில
சுகனமுக டுறநிமிரு  முழுநீலக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத  பெருமாளே.

1109. குதறுமுனை யறிவுகொடு கதறமிகு
குமுதமிடு பரசமய  மொருகோடி
குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது
கொடியஇரு வினையெனும்  ளறுபோக

உதறிவித றியகரண மரணமற விரணமற
வுருகியுரை பருகியது  தினஞான
உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத
யுளகமினி யுணரஅருள்  புரிவாயே

சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை
சிறுபொறிக ளெனவுரக  பிலமேழும்
செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக
திசையுமுட னுருகவரு  கடைநாளிற்

கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை
யெனமுடிவில் ககனமுக  டதிலோடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத  பெருமாளே.

1110. வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
வயிரமர கதமகர  மளவாக
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
வளையிளைஞ ருயிர்கவர  வருமாய

இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
எழுபிறவி நெறியொழிய  வழிகாணா
இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன
திருநயன கருணைசிறி  தருள்வாயே

பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல் துவரை
பயறுபெரு வயிறுநிறை  யிவிடாமுப்
பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை
பரியதனி யெயிறுகொடு  குருநாடர்

கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய
கடலுலகு நொடியில்வரு  மதிவேகக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுடட னமர்பொருத  பெருமாளே.

1111. விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற
விதறிவளை கலகலென  அநுராகம்
விளையம்ருக மதமுகுள முலைபுளக மெழநுதலில்
வியர்வுவர அணிசிதற  மதுமாலை

அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி
யிதழ்பருகி யுருகியரி  வையரோடே
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி
யவசமுறு கினுமடிகள்  மறவேனே

உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர
வுரகர்பில முடியவொரு  பதமோடி
உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர
வுயரவகி லபுவனம  திரவீசிக்

கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்
கருதரிய விதமொடழ  குடனாடும்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத  பெருமாளே.

1112. எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்து  வளர்மாயை
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்து  மிகநீளும்

இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தி  னருநீழல்
இசையிலவிழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை  யருள்வாயே

வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற
மதியிரவி தேவர்வஜ்ர  படையாளி
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
மறைய எதிர் வீரவுக்ரர்  புதல்வோனே

அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
அசலமிசை வாகையிட்டு  வரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட  பெருமாளே.

1113. நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்
ஙயனமத னால்மருட்டி  வருவாரை
நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று
லமளிதமுட னேபசப்பி  யுறவாடி

வடிவதிக வீடுபுக்க மலரணையின் மீதிருத்தி
மதனனுடை யாகமத்தி  னடைவாக
மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும்
வனிதையர்க ளாசைபற்றி  யுழல்வேனோ

இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க
இருகையுறவே பிடித்து  உரலோடே
இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண
னியல்மருக னேகுறத்தி  மணவாளா

அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு
அரியதமிழ் வாதுவெற்றி  கொளும்வேலா
அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட  பெருமாளே.

1114. மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து
மதசுகப்ர தாபசித்ர  முலையாலே
மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை
மனமகிழ வேயளித்து  மறவாதே

உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை
ஒருபொழுதொ ணாதுசற்று  மெனவேதான்
உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை
யொழியவொரு போதகத்தை  யருள்வாயே

தடமகுட நாகரத்ன படநெளிய ஆடுபத்ம
சரணயுக மாயனுக்கு  மருகோனே
சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர
சயிலம்வல மாய்நடத்து  மயில்வீரா

அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருந்தும்
அறுமுகவ ஞானதத்வ  நெறிவாழ்வே
அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட  பெருமாளே.

1115. அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்
சன்பிலன் துன்பவன்  புகழ்வாரா
அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென றுஞ்சுமந்
தங்குமிங் குந்திரிந்  திரைதேடுஞ்

சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்
சஞ்சலன் கிஞ்சுகந்  தருவாயார்
தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்
தண்டையம் பங்கயம்  புகழ்வேனோ

கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்
கங்களுந் திங்களுங்  கழுநீரும்
கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்
கந்தமுந் துன்றுசெஞ்  சடையாளர்

பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்
பந்தவெங் குண்டர்தங்  குலகாலா
பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்
பண்புநண் பும்பெறும்  பெருமாளே.

1116. தந்தமுமந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்
தண்டவொன் றன்றொடுங்  கிடுமாவி
தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்
தன்றுமென் றுந்தனந்  தனைநாடி

நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்
சின்கணன் பொன்றில்மங்  கையர்நேசம்
நின்றளந் துங்சளங் கொண்டிடும் புன்கணந்
தின்பமொன் றின்றியிங்  குழல்வேனோ

சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்
தொண்டனென் றன்றுகொண்  டிடுமாதி
தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன்
பங்கடிந் தென்பொடுந்  தொலையாநீர்

அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்
தன்றுமின் றும்புனைந்  திடும்வேணி
அன்பர்நெஞ் சின்புறுஞ் சொஞ்சொலன் கந்தனென்
றண்டரண் டந்தொழும்  பெருமாளே.

1117. உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்
டுண்டுமே கலைகழன் றயலாக
உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்
பொன்றிலா ரொடுதுவண்  டணைமீதே

செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமும்
சிந்தவாள் விழிசிவந்  தமராடத்
திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ்
சிந்தையே னெனவிதங்  கரைசேர்வேன்

கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்
கொண்டல்ப்லோ மசையள்சங்க்  ரமபாரக்
கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்
கொண்டலா னையைமணஞ்  செயும்வீரா

அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்
றஞ்சவா னவருறுஞ்  சிறைமீள
அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்
தங்கைவே லுறவிடும்  பெருமாளே.

1118. வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்
பந்திமா மலர்சொரிந்  துடைசோர
வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந்
தந்தமா மதனலம்  விதமாக

விண்டுமே னிகள் துவண் டன்றில்போ லுளமிரண்
டொன்றுமா யுறவழிந்  தநுபோகம்
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்
துன்றன்மே லுருகஎன்  றருள்வாயே

பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்
பைம்பொன்மா நகரிலிந்  திரன்வாழ்வு
பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்
தன்பினோ ரகமமர்ந்  திடுவோனே

அண்டர்தா மதிபயங் கொண்டுபா டிடநெடுந்
தண்டுவாள் கொடுநடந்  திடுசூரன்
அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண்
டங்கைவே லுறவிடும்  பெருமாளே.

1119. காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்
காரநா கஞ்செழுங்  கனிவாய்கண்
காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங்
காமபா ணஞ்சுரும்  பினம்வாழும்

ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்
தோநமோ கந்தஎன்  றுரையாதே
ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்
றோயுமா றொன்றையுங்  கருதாதோ

தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்
தாரம்வா சந்திசந்  தனநீடு
சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்
தானமா தெங்கள்பைம்  புனமேவும்

தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்
சேகரா தண்டையங்  கழல்பேணித்
தேவிபா கம்பெருந் தாதிநா தன்தொழுந்
தேசிகா வும்பர்தம்  பெருமாளே.

1120. கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்
கோவைபா டக்கொடிக்  கொடிவாதிற்
கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கொடிக்
கூறுகா ளக்கவிப்  புலவோன்யான்

சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்
த்யாகமே ருப்பொருப்  பெனவோதுஞ்
சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்
கேளெனா நிற்பதைத்  தவிர்வேனோ

ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்
தாரவா ரக்கடற்  கிடைசாயும்
ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்
டாதரூ பத்தினிற்  சுடராய

காலகா லப்ரபுச் சாலுமா லுற்றமைக்
காகவே ளைப்புகக்  கழுநீராற்
காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்
காமவேள் மைத்துனப்  பெருமாளே.

1121. ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்
தீதெனா நற்றவத்  தணைவோர்தம்
நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்
டோயுநா யொப்பவர்க்  கிளையாதே

நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்
டூரசூர் கெட்டுகப்  பொரும்வேலா
நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்
றோதநீ திப்பொருட்  டரவேணும்

கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்
தானும்வே தக்குலத்  தயனாருங்
கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்
போதுறா நிற்பஅக்  கொடிதான

காலதான புற்றுதைத் தானுமோர் கற்புடைக்
கோதைகா மக்கடற்  கிடைமூழ்கக்
காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்
காமவேள் மைத்துனப்  பெருமாளே.

1122. கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங்
களினாறா துயில்வதுஞ்  சரிபேசுங்
கரசரோ ருகநாகம் படவிடாய் தணிவதுங்
கமலநா பியின்முயங்  கியவாழ்வும்

அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின்
பநல்மகோ ததிநலம்  பெறுமாறும்
அரவுபோ னமுதமுந் தவிர மவுனபஞ்
சரமனோ லயசுகந்  தருவாயே

பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம்
படர்பகீ ரதிவிதம் பெற  ஆடல்
பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம்
பனிநிலா வுமிழுமம்  புலிதாளி

குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங்
குடிலவே ணியிலணிந்  தவராகங்
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
குமரனே யமரர்தம்  பெருமாளே.

1123. வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா விளைவளைந்
தமர்செய்வாள் விழியர்நெஞ்  சினில்மாயம
வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்
தணுகுமா நிதிகவர்ந்  திடுமாதர்

துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந்
தமளிதோய் பவர்வசஞ்  சுழலாதே
தொலைவிலா இயலதெரிந் தவலமா னதுகடந்
துனதுநாள் தொழமனந்  தருவாயே

படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்
கயனுநான் மறையுமும்  பரும்வாழப்
பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்
டலகையோ டெரிபயின்  றெருதேறிக்

கொடியவா ளரவிளம் பிறையினோ  டலைசலங்
குவளைசேர் சடையர்தந்  திருமேனி
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
குமரனே யமரர்தம்  பெருமாளே.

1124. கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
கட்டுவிடு மோர்கால  மளவாவே
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
கற்புநெறி தான்மாய  வுயர்காலன்

இட்டவொரு தூதாளு முட்டவினை யால்முடி
யிட்டவிதி யேயாவி  யிழவாமுன்
எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத
இட்டமினி தோடார  நினைவாயே

துட்டரென  ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்
தொக்கில்நெடு மாமார்பு  தொளையாகத்
தொட்டவடி வேல்வீரா நட்டமிடு வார்பால
சுத்ததமி ழார்ஞான  முருகோனே

மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
மத்தமயில் மீதேறி  வருநாளை
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத  பெருமாளே.

1125. பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
பத்தியுடன் மேல்மூடி  யினிதான
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
பற்றியணை வோர்கூவி  யலைநீரிற்

புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
பொற்றியிட வேயாவி  பிரியாமுன்
பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது
புத்திநெடி தாம்வாழ்வு  புரிவாயே

இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவ
ரெப்பொருளு மாசீசர்  பெருவாழ்வே
எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள
எட்டியெதி ரேயேறு  மிகல்வேலா

மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ
மத்தமயில் மீதேறி  வருவோனே
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத  பெருமாளே.

1126. நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
நீளமக லஞ்சோதி  வடிவான
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல
நேர்மருவி யுண்காத  லுடன்மேவிச்

சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத
சோதிமரு வும்பூமி  யவையூடே
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட
சோதிஅயி லுந்தாரு  மருள்வாயே

வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்
வாய்விடவொ டெண்பாலு  முடுபோல
வாரமணியு திரந்தோட வேகவினி றைந்தாட
மாமயில்வி டுஞ்சேவல்  கொடியோனே

ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு
மாடலரு ணஞ்சோதி  யருள்பாலா
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத
லாசைமரு வுஞ்சோதி  பெருமாளே.

1127. சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
துக்கமிலா ஞான  சுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
சுத்தநிரா தார  வெளிகாண

மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
முட்டவுமீ தேறி  மதிமீதாய்
முப்பதுமா றாது முப்பதும்வே றான
முத்திரையா மோன  மடைவேனோ

எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ
னப்பிரமா வோட  வரைசாய
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
எத்தனையோ கோடி  யசுரேசர்

பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
பத்திருதோள் வீர  தினைகாவல்
பத்தினிதோள் தோயு முத்தமமா றாது
பத்திசெய்வா னாடர்  பெருமாளே.

1128. மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு
மக்களுமா றாத  துயர்கூர
மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ
வைத்தவர்தா மேக  மதிமாய

நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு
நெட்டளவாம் வாதை  யணுகாமுன்
நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி
நித்தலும்வாழ் மாறு  தருவாயே

நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத
னற்றவர்தா நாட  விடையேறி
நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு
நற்றுணைவா ஞால  மிகவாழப்

பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக
பத்தியதா மாறு  முகநாளும்
பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத
பத்திசெய்வா னாடர்  பெருமாளே.

1129. தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு
சத்துவிட் டப்படிபொ  லடியேனுஞ்
சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி
சத்துவத் தைப்பிரிய  விடும்வேளை

சுத்தமுத் தப்தவி பெற்றநற் பத்தரொடு
தொக்குசற் றுக்கடையன்  மிடிதீரத்
துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி
சுற்றவிட் டுக்கடுகி  வரவேணும்

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய
வெற்றிசத் திக்கரக  முருகோனே
வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல
விட்டபச் சைச்சரண  மயில்வீரா

கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்
கச்சியப் பர்க்கருள் செய்  குருநாதா
கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்
கற்பினுக் குற்றுபுணர்  பெருமாளே.

1130. மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்
மற்றுமுற் றக்குரவ  ரனைவோரும்
வைத்தசெப் பிற்பணமும் ரத்னமுத் திற்பணியு
மட்டுமற் றுப்பெருகு  மடியாரும்

புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது
பொய்க்குமெய்க் குச்செயலு  முருகாதே
புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு
புத்திமெத் தத்தருவ  தொருநாளே

செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு
செக்கமுற் றச்சலமு  மதிசூடி
சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு
சித்தமுத் திச்சிவமு  மருள்வோனே

கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை
கொத்தினொக் கக்கொலைசெய்  வடிவேலா
கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது
குத்திவெட் டிப்பொருத  பெருமாளே.

1131. உற்பா தப்பூ தக்கா யத்தே
யொத்தோ டித்தத்  தியல்காலை
உட்பூ ரித்தே சற்றே சற்றே
யுக்கா ரித்தற்  புதனேரும்

அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ
லப்பா வித்துத்  திரிவேனுக்
கப்பா சத்தா லெட்டர் அப்பா
லைப்போ தத்தைப்  புரிவாயே

பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா
கப்போய் முட்டிக்  கிரிசாடிப்
புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்
பொட்டா கக்குத்  தியவேலா

முற்பா டப்பா டற்றா ருக்கோர்
முட்கா டற்கப்  பொருளீவாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

1132. எற்றா வற்றா மட்டா கத்தீ
யிற்காய் செக்கடட  பிறைவாளே
யிற்றார் கைப்பா சத்தே கட்டா
டிக்கோ பித்துக்   கொடுபோமுன்

உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா
ரொட்டோம் விட்டுக்  கழியீரென்
றுற்றோ துற்றே பற்றா நிற்பா
ரக்கா லத்துக்  குறவார்தான்

பற்றார் மற்றா டைக்கே குத்தா
பற்றா னப்பிற்  களைவோனே
பச்சே னற்கா னத்தே நிற்பாள்
பொற்பா தத்திற்  பணிவோனே

முற்றா வற்றா மெய்ப்போ தத்தே
யுற்றார் சித்தத்  துறைவோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

1133. செட்டா கத்தே னைப்போ லச்சி
ரைத்தே டித்திட்  பமதாகத்
திக்க மற்பா டுற்றா ரிற்சீ
ருற்றா ருக்குச்  சிலபாடல்

பெட்டா கக்கூ றிப்போ தத்தா
ரைப்போல் வப்புற்  றுழலாதே
பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்
சற்றே தப்பெற்  றிடுவேனோ

எட்டா நெட்டா கத்தோ கைக்கே
புக்கோ லத்திட்  டிமையோர்வா
னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா
னெட்டா வெட்டிப்  பொரும்வேலா

முட்டா மற்றா ளைச்சே விப்பார்
முற்பா வத்தைக்  களைவோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

1134. பட்டா டைக்கே பச்சோ லைக்கா
துக்கே பத்தித்  தனமாகும்
பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே
பட்டா சைப்பட்  டுறவாடி

ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே
சுற்றே முற்றத்  தடுமாறும்
ஒட்டா ரப்பா விக்கே மிக்கா
முற்றாள் கிட்டத்  தகுமோதான்

கட்டா விப்போ துட்டா விப்பூ
கக்கா விற்புக்  களிபாடுங்
கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்
கத்தா சத்தித்  தகவோடே

முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்
முற்றா மற்கொட்  குமரேசா
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

1135. பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
வைத்தே பத்திப்  படவேயும்
பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
சற்கா ரத்துக்  கிரைதேடி

எத்தே சத்தோ டித்தே சத்தோ
டோத்தேய் சப்தத்  திலுமோடி
எய்த்தே நத்தா பற்றா மற்றா
திற்றே முக்கக்  கடவேனோ

சத்தே முற்றா யத்தா னைச்சூர்
கற்கா டிக்கற்  பணிதேசா
சட்சோ திப்பூ திப்பா லத்தா
அக்கோ டற்செச்  சையமார்பா

முத்தா பத்தா ரெட்டா வைப்பா
வித்தா முத்தர்க்  கிறையோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

1136. பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
மொய்ப்போ கத்தைப்  பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
கித்தே கைக்குப்  பொருள்தேடித்

தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
திக்கோ டிப்பச்  சிமமான
திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ
வுக்கோ டிக்கெட்  டிடலாமோ

தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
ரைச்சா ரத்தற்  பரமானாய்
தப்பா முப்பா லைத்தே டித்தே
சத்தோர் நிற்கத்  தகையோடே

முற்கா னப்பே தைக்கா கப்போய்
முற்பால் வெற்பிற்  கணியானாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

1137. பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ
தப்பே சிப்பொற்  கனிவாயின்
பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ
ணைப்பூண் வெற்பிற்  றுகில்சாயக்

கற்பா லெக்கா வுட்கோ லிக்கா
சுக்கே கைக்குத்  திடுமாதர்
கட்கே பட்டே நெட்டா சைப்பா
டுற்றே கட்டப்  படுவேனோ

சொற்கோ லத்தே நற்கா லைச்சே
விப்பார் சித்தத்  துறைவோனே
தொக்கே கொக்கா கிக்சூ ழச்சூர்
விக்கா முக்கத்  தொடும்வேலா

முற்கா லத்தே வெற்பேய் வுற்றார்
முத்தாள் முத்தச்  சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

1138. மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
வித்தா ரத்திற்  பலகாலும்
வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே
வித்தா சைச்சொற்  களையோதிக்

கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா
ரைப்போ லக்கற்  பழியாதுன்
கற்பூ டுற்றே நற்றா ளைப்பா
டற்கே நற்சொற்  றருவாயே

பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்
முற்பால் வெற்பிற்  புனமானைப்
பொற்றோ ளிற்சேர் னத்தா ளைப்பால்
தத்தாள் பற்றிப்  புகல்வோனே

முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்
வைத்தார் முத்தச்  சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

1139. அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை  எப்பொருளு மாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு  காலம்

நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்யமெ ரித்த  பெரு மானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினது ணர்த்தியருள்ய வாயே

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு  தீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி  யாவும்

மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த  பெருமாளே.

1140. அரிய வஞ்சக ரறவே கொடியவ
ரவலர் வன்கண ரினியா ரவகுண
ரசட ரன்பில ரவமே திரிபவ  ரதிமோக
அலையில் மண்டிய வழியே யொழுகியர்
வினைநி ரம்பிடு பவமே செறிபவ
ரருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள்  நரகேற

உரிய சஞ்சல மதியா னதுபெறு
மனஇ டும்பர்க ளிடமே தெனஅவ
ருபய அங்கமு நிலையா கிடவொரு  கவியாரே
உலக முண்டவர் மதனா ரிமையவர்
தருவெனும்படி மொழியா வவர்தர
உளது கொண்டுயி ரவமே விடுவது  தவிராதோ

கரிய கொந்தள மலையா ளிருதன
அமுது ணுங்குரு பரனே திரைபடு
கடல டும்படி கணையே வியஅரி  மருகோனே
கருணை கொண்டொரு குறமா மகளிடை
கலவி தங்கிய குமரா மயில்மிசை
கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு  மிளையோனே

திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து
பொதுந டம்புரி யரனா ரிடமுறை
சிவைச வுந்தரி யுமையா ளருளிய  புதல்வோனே
சிகர வெண்கரி அயிரா வதமிசை
வருபு ரந்தர னமரா பதியவர்
சிறைவி டும்படி வடிவேல் விடவல  பெருமாளே.

1141. ஆராத காத லாகி மாதர்த மாபாத சூட மீதி லேவிழி
யாலோல னாய்வி கார மாகியி  லஞ்சியாலே
ஆசாப காசு மூடி மேலிட ஆசார வீன னாகி யேமிக
ஆபாச னாகி யோடி நாளும  ழிந்திடாதே

ஈராறு தோளு மாறு மாமுக மோடாரு நீப வாச மாலையு
மேறான தோகை நீல வாசியு  மன்பினாலே
ஏனோரு மோது மாறு தீதற நானாசுபாடி யாடிநாடொறு
மீடேறு மாறு ஞான போதக  மன்புறாதோ

வாராகி நீள்க பாலி மாலினி மாமாயி யாயி தேவி யாமளை
வாசாம கோச ராப ராபரை யிங்குளாயி
வாதாடி மோடி காடு காளுமை மாஞால லீலி யால போசனி
மாகாளி சூலி வாலை யோகினி  யம்பவானி

சூராரி மாபு ராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி
சோணாச லாதி லோக நாயகி  தந்தவாழ்வே
தோளாலும் வாளி னாலு மாறிடு தோலாத வான நாடு சூறைகொள்
சூராரி யேவி சாக னேசுவரர்  தம்பிரானே.

1142. ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து  மடலாலும்
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமாறெரி தாமிந் தனத்து  மருளாதே

நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த
நீநானற வேறின்றி நிற்க  நியமாக
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி
நேரேபர மாநந்த முத்தி  தரவேணும்

வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாளச மூகம் பிழைக்க  அமராடி
வேதாமுறை யோவென்றரற்ற ஆகாசக பாலம்பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து  வடவாலும்

வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
வாணாசன மேழுந் துணித்த  கதிர்வேலா
வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
வானோர்பரி தாபந் தவிர்த்த  பெருமாளே.

1143. ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு
தாகா ரைத்தொடர் கைக்கெணும்  விழியாலே
ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி
வார்போ கச்செயல் விச்சைகள்  விலைகூறிக்

கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள்
கூறா கப்பெறில் நிற்கவு  மிலதானார்
கூடா நட்டுமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள்
கோமா ளத்துய ருட்பய  முறலாமோ

பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரி
பால்பார் வைக்கள விட்டுமை  யுறுபோதிற்
பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர்
பாலா பத்திரி டத்தியங்  பயில்வோனே

மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை
வேர்மா ளப்பொரு திட்டொளி  விடும்வேலா
மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு
வேதா வைச்சிறை யிட்டருள்  பெருமாளே.

1144. ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்
ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்
ஆதேச வாழ்வி னிற்ப்பர மித்தி ளைத்துயி  ரழியாதே
ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்
வாசாம கோச ரத்தி ருத்தி வித்ததும்
ஆபாதனேன் மிகப்ரசித்திபெற்றினி  துலகேழும்

யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்
தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்
ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும்  இடராழி
ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய
நானாவி கார புற்பு தப்பி றப்பற
ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும்  மறவேனே

மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்
மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு
மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி  லொருமூவர்
மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்
தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்
வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக  வனமேவும்

தேநாய காஎ னத்து தித்த வுத்தம
வானாடர் வாழ் விக்ர மத்தி ருக்கழல்
சேராத சூர னைத்து ணித்த டக்கிய  வரைமோதிச்
சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ
மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி
சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய  பெருமாளே.

1145. இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து
விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து
இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண்  வலையாரே
இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து
முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும்
இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி  விலைபேசி

மடலவிழும் பூக்க ளால்நி றைத்த
சுருளளகந் தூற்றி யேமு டித்து
மறுகிடைநின் றார்க்க வேந கைத்து  நிலையாக
வருபொருள்கண் டேற்க வேப றிக்கும்
அரிவையர் தம் பேச்சி லேமு ழுக்க
மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து  விடலாமோ

படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி
முதுமறையின் பேச்சி நூலி டைச்சி
பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி  யிருநாழி
படிகொடறங் காத்த மாப ரைச்சி
மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி
பலதிசையும் போய்க்கு லாவி ருபபி  நெடுநீலி

அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி
சமரமுகங் காட்டு மால்வி டைச்சி
அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி  பெருவாழ்வே
அரியயனின் றேத்த வேமி குத்த
விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த
அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த  பெருமாளே.

1146. இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட்
டினிமைச்சுற் றமுமற்றைப்  புதல்வோரும்
இனமொப்பித் திசையற்சொற் பலகத்திட் டிழியப்பிற்
கிடையத்துக் கமும்விட்டிட்  டவரேக

விடமெத்தச் சொரிசெக்கட்ட சமன்வெட்டத் தனமுற்றிட்
டுயிர்வித்துத் தனையெற்றிக்  கொடுபோமுன்
வினைபற்றற்றறநித்தப் புதுமைச்சொற்கொடுவெட்சிப்
புறவெற்றிப் புகழ்செப்பப்  பெறுவேனோ

அடர்செக்கர் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்
கறிவொக்கப் பொருள்கற்பித்  திடுவோனே
அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட்
டலறக்குத் துறமுட்டிப்  பொரும்வேலா

கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக்
கிரிகைக்குட் டிகிரிக்கொற்  றவன்மாயன்
கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட்டிசையர்க்குக்
கடவுட்சக் கிரவர்த்திப்  பெருமாளே.

1147. இரவினிடை வேள்தொ டுத்து டன்று
முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி
யிருகுழையு மோதி யப்ப டங்கு  கடலோடே
எதிர்பொருது மானி னைத்து ரந்து
சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி
யினியமுத ஆல முற்ற கண்கள்  வலையாலே

முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து
விசிறிவளை மாத ரைக்க லந்து
மொழியதர கோவை யிக்க ருந்தி  யமுதாகு
முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து
சுழிமிதுன வாவி யிற்பு குந்து
முழுகியழி யாம னற்ப தங்கள்  தரவேணும்

திரையுலவு சாக ரத்தி லங்கை
நகரிலுறை ராவ ணற்கி யைந்த
தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு  திணிதோளும்
சிதையவொரு வாளி யைத்து ரந்த
அரிமருக தீத றக்க டந்து
தெளிமருவு கார ணத்த மர்ந்த  முருகோனே

அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து
கருதுமொரு மூவ ருக்கி ரங்கி
யருளுமொரு நாய கற்ப ணிந்த  குருநாதா
அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து
இரவுபக லாக நெக்க விழ்ந்த
அடியவர்கள் பாட லுக்கி சைந்த  பெருமாளே.

1148. இரவொ டும்பக லேமா றாதே
அநுதி னந்துய ரோயா தேயே
பெரியு முந்தியி னாலே மாலே  பெரிதாகி
இரைகொ ளும்படி யூடே பாடே
மிகுதி கொண்டொழி யாதே வாதே
யிடைக ளின்சில நாளே போயே  வயதாகி

நரைக ளும்பெரி தாயே போயே
கிழவ னென்றொரு பேரே சார்வே
நடைக ளும்பல தாறே மாறே  விழலாகி
நயன முந்தெரி யாதே போனால்
விடிவ öன்றடி யேனே தானே
நடன குஞ்சித வீடே கூடா  தழிவேனோ

திருந டம்புரி தாள தூளீ
மகர குண்டலி மாரீ சூரீ
திரபு ரந்தழ லேவீ சார்வீ  யபிராமி
சிவனி டந்தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி யாயீ மாயீ
சிவைபெ ணம்பிகை வாலா சீலா  அருள்பாலா

அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபு ரந்தொளிர் நாதா பாதா
அழகி ளங்குற மானார் தேனார்  மணவாளா
அரிய ரன்பிர மாவோ டேமூ
வகைய ரிந்திர கோமா னீள்வா
னமரர் கந்தரு வானோ ரேனோர்  பெருமாளே.

1149. இருகுழை மீதோடி மீளவும் கயல்களு மாலால காலமும்
ரதிபதி கோலாடு பூசலு  மெனவேநின்
றிலகிய கூர்வேல் விலோசன ம்ருகமத பாடீர பூஷித
இளமுலை மாமாத ரார்வச  முருகாதே

முருகவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர்பாத தூளியின்
முழுகிவி டாய்போ மனோலயம்  வரவோது
முழுமதி மாயாவி காரமு மொழிவது வாசாம கோசர
முகுளித ஞானோப தேசமு  மருள்வேணும்

அருமறைநூலோதும்வேதிய னிரணியரூபாந மோவென
அரிகரி நாரா ணாவென  ஒருபாலன்
அவனெவனாதாரமேதென இதனுள னோவோதுநீயென
அகிலமும் வாழ்வான நாயக  னெனவேகி

ஒருகணை தூணோடு மோதிட விசைகொடு தோள்போறு வாளரி
யுகிர்கொடு வாரா நிசாசர  னுடல்பீறு
முலகொரு தாளான மாமனு முமையொரு கூறான தாதையு
முரைதரு தேவாசு ராதிபர்  பெருமாளே.

1150. இருமுலை மலையென ஒப்பிட் டேயவர்
இருவிழி யதனில கப்பட் டேமன
மிசைபடு வசனமு ரைத்திட் டேபல  மினிதோடே
இடையது துவளகு லுக்கிக் காலணி
பரிபுர வொலிகள்தொ னிக்கப் பூதர
இளமுலை குழைய அணைத்துக்கேயுர  மணியோடே

மரகத பவள மழுத்திப் பூஷண
மணிபல சிதறி நெறித்துத் தானுக
மருமலர் புனுகு தரித்துப் பூவணை  மதராஜன்
மருவிய கலவி தனக்கொப் பாமென
மகிழ்வொடு ரசிது மிகுத்துக் கோதையை
மருவியு முருகி களைத்துப் பூமியி  லுழல்வேனோ

திரபுர மெரிய நகைத்துக் காலனை
யுதைபட மதனை யழித்துச் சாகர
திரைவரு கடுவை மிடற்றிற் றானணி  சிவனார்தந்
திருவருள் முருக பெருத்துப் பாரினில்
சியொதனன் மடிய மிகுத்துப் பாரத
செயமுறு மரிதன் மனத்துக் காகிய  மருகோனே

நரிகழு வதுகள் களிக்கச் சோரிகள்
ரணகள முழுதுமி குத்துக் கூளிகள்
நடமிட அசுரர் குலத்துக் காலனை  நிகராகி
நனிகடல் கதற பொருப்புத் தூளெழ
நணுகிய இமையவ ருக்குச் சீருற
நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பெறு  பெருமாளே.

1151. இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ
எமன்விடு தூதோ மானோ  விடமீதோ
எனவிழி கூறா வாரா அரிவையர் தோளூ டாடா
இறுதியில் வேறாய் மாறா  நினைவாலே

பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே
படிறுசொ லாகா லோகா  யதனாகிப்
பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே
பணிதியில் மூழ்கா மாயா  விடுவேனோ

அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா
அவுணரை வாடா போடா  எனலாகி
அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே
யவருடல் வாணா ளீரா  எதிராகி

மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா
மகபதி வாழ்வே சேயே  மயில்வீரா
மறைதொழு கோவே தேவே நறைசெறி பூவே நீரே
வளவிய வேளே மேலோர்  பெருமாளே.

1152. உமையெனு மயில்பெற்ற மயில்வா கனனே
வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே
உளமுரு கியபத்த ருறவே மறவே  னெனவோதி
உருகுத லொருசற்று மறியேன் வறியேன்
இருவினை யிடையிட்ட கொடியே னடியேன்
உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய்  மடமாதர்

அமையென வளர்சித்ர இருதோள் தழுவா
அமுதென மதுரித்த கனிவா யணுகா
அமளியி லணைவுற்ற அநுரா கமகோ  ததிமூழ்கி
அநவர தமுமுற்ற மணிமா முலைதோய்
கலவியி னலமற்ப சுகமா கினுமா
அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா  தியலாதே

தமனிய குலசக்ர கிரியோ கடலோ
விடமென முடிவைத்த முதுபே ரிருளோ
தனுவென முனையிட்ட கொலைமூ விலைவேல்  கொடுபார்வை
தழலெழ வருமுக்ர எமபா தகனோ
யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ
தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ  பதியாகி

இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ
அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ
எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ  பொரவாரும்
எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ
வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா
எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர்  பெருமாளே.

1153. உரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட்
டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற்
றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட்  டணைமேல்வீழ்ந்
துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட்
டெடுத்த ணைத்திகழ் பெருகமு தந்துய்த்
துனக்கெனக்கெனவுருகி முயங்கிட்  டுளம்வேறாய்

அருக்கி யத்தனை யெனுமவ சம்பட்
டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத்
தறப்பி தற்றிட அமளிக லங்கித்  தடுமாறி
அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட்
டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக்
கடுத்த கப்படு கலவியில் நொய்தெய்த்  திடலாமோ

தரைக்க டற்புகு நிருதர்த யங்கச்
சளப்ப டத்தட முடிகள்பி டுங்கித்
தகர்த்தொலித்தெழு மலையொடுதுண்டப்  பிறைசூடி
தனுக்கி ரித்திரி தரஎதி ருங்கொக்
கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத்
தருக்க டக்கிய சமர்பொரு துங்கத்  தனிவேலா

பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித்
திருக்கு முத்தம நிருதர்க லங்கப்
படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக்  கிரிசாடிப்
படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக்
குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற்
பதத்தி றுத்துகு பசியசி கண்டிப்  பெருமாளே.

1154. உலகத்தினில் மாதரு மைந்தரும்
உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை
உயர்துக்கமு மோடுற வென்றுற  வருகாலன்
உதிரத்துட னேசல மென்பொடு
உறுதிப்பட வேவள ருங்குடில்
உதிரக்கனல் மீதுற என்றனை  யொழியாமுன்

கலகக்கலை நூல்பல கொண்டெதிர்
கதறிப்பத றாவுரை வென்றுயர்
கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு  களிகூரும்
கவலைப்புல மோடுற என் துயர்
கழிவித்துன தாளிணை யன்பொடு
கருதித்தொழும் வாழ்வது தந்திட  நினைவாயே

இலகப்பதி னாலுல கங்களும்
இருளைக்கடி வானெழு மம்புலி
யெழில்மிக்கிட வேணியில் வந்துற  எருதேறி
இருகைத்தல மான்மழு வும்புனை
யிறையப்பதி யாகிய இன்சொலன்
இசையப்பரி வோடினி தன்றாரு  ளிளையோனே

மலைபட்டிரு கூறெழ வன்கடல்
நிலைகெட்டபி தாவென அஞ்சகர்
வலியற்றசு ரேசரு மங்கிட  வடிவேலால்
மலைவித்தக வானவ ரிந்திரர்
மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ
வடிவுற்றொரு தோகையில் வந்தருள்  பெருமாளே.

1155. உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற
பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற
உலகிலுள பலரரிசி வாய்மீதிலேசொரியு  மந்தநாளில்
உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை
திரள்புயமுமெழில்பணிகொள்வார்காது நீள்விழியு
முபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும்  அந்தமார்பும்

மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய
மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர
மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர்  வந்துகூட
மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது
விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து 
மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன்  வந்திடாயோ

பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ
அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட
பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில்  நின்றநாகம்
பிரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ
பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு
பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய  வென்றதீரா

குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட
கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு
குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர்  குன்றுலாவி
கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய
வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய்
குமரகு ருபர அமரர் வானாடர் பேண அருள்  தம்பிரானே.

1156. உறவு சிங்கிகள் காமா காரிகள்
முறைம சங்கிக ளாசா வேசிகள்
உதடு கன்றிகள் நாணா வீணிகள்  நகரேகை
உடைய கொங்கையின் மீதே தூசிகள்
பிணமெ னும்படி பேய்நீ ராகிய
உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள்  கடல்ஞாலத்

தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள்
வறுமை தந்திடு பாழ்மூ தேவிக
ளணிநெ ருங்கிக ளாசா பாஷண  மடமாதர்
அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள்
கலவி யின்பமெ னாவே சோருதல்
அலம லந்தடு மாறா தோர்கதி  யருள்வாயே

பறவை யென்கிற கூடார் மூவரண்
முறையி டுந்தமர் வானோர் தேரரி
பகழி குன்றவி லாலே நீறெழ  வொருமூவர்
பதநி னைந்துவி டாதே தாள்பெற
அருள்பு ரிந்தபி ரானார் மாபதி
பரவு கந்தசு வாமீ கானக  மதின்மேவுங்

குறவர் தங்கள்பி ரானே மாமரம்
நெறுநெ றென்றடி வேரோ டேநிலை
குலைய வென்றிகொள் வேலே யேவிய  புயவீரா
குயில்க ளன்றில்கள் கூகூ கூவென
மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை
குறவர் சுந்தரி யோடே கூடிய  பெருமாளே.

1157. ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற
வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி
ஓயாத மாமய லுழற்றி னிற்படு  வம்பனேனை
ஊதாரி யாய்விடு சமத்தில் நிற்பது
மாராத காதலை மனத்தில் வைப்பது
மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது  முந்திடாதே

தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு
நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது
சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன  மென்றுநீபச்
சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள்
சீராடி நாண்மல ரெனப்ரி யப்படு
சீர்பாத போதக மநுக்ர கிப்பது  மெந்தநாளோ

மானாக பாயலில் படுக்கை யிட்டவர்
மாமேரு வாரியில் திரித்து விட்டவர்
மாடோடு போய்வரு மிடைக்கு லத்தவ  ரன்றுவாவி
வாய்நாக மோலிட பிடித்த சக்கிர
வாளேவி யேகர வினைத்த றித்தவர்
மாமாய னாயுல களித்த வித்தகர்  தங்கைவாழ்வே

கானாரு மாமலை தினைப்பு னத்தினில்
கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை
காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள்  கந்தவேளே
காரேழு மாமலை யிடித்து ருக்கெட
காராழி யேழவை கலக்கி விட்டுயர்
காவான நாடர்கள் பகைச்ச வட்டிய  தம்பிரானே.

1158. எட்டுட னொருதொளை வாயா யதுபசு
மட்கல மிருவினை தோயா  மிகுபிணி
யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் நிலையாக
எப்படி யுயர்கதி நாமே  றுவதென

எட்பகி ரினுமிது வோரார் தமதம
திச்சையி னிடருறு பேரா சைகொள்கட  லதிலேவீழ்
முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு
முப்பதி னறுபதின் மேலா  மறுவரு

முற்றுத லறிவரு ஞானோ தயவொளி வெளியாக
முக்குண மதுகெட நானா   வெனவரு
முத்திரை யழிதர ஆரா வமுதன
முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ  தொருநாளே

திட்டென எதிர்வரு மாகா ளியினொடு
திக்கிட தரிகிட தீதோ  மெனவொரு
சித்திர வெகுவித வாதா யடிபத மலராளன்
செப்புக வெனமுன மோதா  துணர்வது

சிற்சுக பரவெளி யீதே யெனஅவர்
தெக்ஷண செவிதனி லேபோ தனையருள்  குருநாதா
மட்டற அமர்பொரு சூரா திபனுடல்
பொட்டெழ முடுகிவை வேலா  லெறிதரு

மற்புய மரகத மாதோ கையில்நட மிடுவோனே
வச்சிர கரதல வானோ  ரதிபதி
பொற்புறு கரிபரி தேரோ டழகுற
வைத்திடு மருமக னேவா ழமரர்கள்  பெருமாளே.

1159. எத்தி யிருகுழையை மோதி மீனமதின்
முட்டி யிடறியம தூதர் போலமுகி
லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை  யெதிர்சீறி
எத்தி சையினுமொரு காம ராஜன்மிக
வெற்றி யரசுதனை யாள வீசியட
லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி  மடமாதர்

வித்தை தனிலுருகி யாசை யாகியவர்
கைக்குள மருவுபொரு ளான ஆகும்வரை
மெத்தை தனிலுருகி மோக மாகிவிட  அதன்மேலே
வெட்க மிலைநடவு மேகு மேகுமினி
மற்ற வரையழையு மாத ரேயெனமுன்
விட்டபடி றிகள் தம்நேச ஆசைகெட  அருள்வாயே

ஒத்த வரிகமுகு வாளை  தாவுபுனல்
அத்தி நகரமர சான வாள்நிருபன்
ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல  நிலைகூற
உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன்
வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும்
ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி  லசுரேசன்

பத்து முடிகள்துக ளாக வாகுஇரு
பத்து மொருகணையில் வீழ நேரவுணர்
பட்டு மடிய அமர்மோது காளமுகில்  மருகோனே
பச்சை மயிலில்வரு வீர வேல்முருக
துட்ட நிருதர்குல கால வானவர்கள்
பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதரு  பெருமாளே.

1160. ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட
வெற்பெ னுங்கன கொங்குகு ழைந்திட
உற்ப லங்கள்சி வந்துகு விந்திட  இந்த்ரகோபம்
ஒத்த தொண்டைது வண்டமு தந்தர
மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற
வொக்க மென்தொனி வந்து பிறந்திட  அன்புகூர

மிக்க சந்திர னொன்றுநி லங்களில்
விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட
மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ  ளின்பமாதர்
வித்த கந்தரு விந்துத புங்குழி
பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை
விட்டகன்றுநினம்புயமென்பத  மென்றுசேர்வேன்

மைக்க ருங்கட லன்றெரி மண்டிட
மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட
மற்று நன்பதி குன்றிய ழிந்திட  வும்பர்நாடன்
வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற
மெச்சு குஞ்சரி கொங்கைபு யம்பெற
மத்த வெஞ்ன வஞ்சகர் தங்களை நுங்கும்  வேலா

குக்கு டங்கொடி கொண்ப ரம்பர
சக்ர மண்டல மெண்டிசை யும்புகழ்
கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர  ணங்கிகாரா
கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய
மிக்க வங்கண கங்கண திண்புய
கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய  தம்பிரானே.

1161. ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
மாத வர்க்கதி பாதக மானவர்
ஊச லிற்கன லாயெரி காளையர்  மறையோர்கள்
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
ஆர்த னக்குமு தாசின தாரிகள்
ஓடி யுத்தம ரூதிய நாடின  ரிரவோருக்

கேது மித்தனை தானமி டாதவர்
பூத லத்தினி லோரம தானவர்
ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை  யிகழ்வோர்கள்
ஏக சித்ததி யானமி லாதவர்
மோக முற்றிடு போகித மூறினர்
ஈன ரித்தனை பேர்களு மேழ்நர  குழல்வாரே

தாத தத்தத தாதத தாதத
தூது துத்துது தூதுது தூதுது
சாச சச்சச சாசச சாசச  சசசாச
தாட டட்டட டாடட டாடட
டூடு டுட்டுடு டூடுடு டூடுடு
தாடி டிட்டிடி டீடிடி டீடிடி  டிடிடீடி

தீதி தித்திதி தீதிதி தீதிதி
தோதி குத்திகு தோதிகு தோதிகு
சேகு செக்குகு சேகுகு சேகுகு  செகுசேகு
சேயெ னப்பல ராடிட மாகலை
ஆயு முத்தமர் கூறிடும் வாசக
சேகு சித்திர மாகநி ணாடிய  பெருமாளே.

1162. ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற
மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற
லோதிநி ழற்குள ளிக்கு லத்துட  னொன்றிஞானம்
ஓதிமி குத்தத வத்த வர்க்கிட
ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி
யூடுவி டத்தையி ருத்தி வைத்தக  ணம்பினாலே

மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள்
வாசமு லைக்குள கப்ப டுத்தியில்
வாவென முற்றிந டத்தி யுட்புகு  மந்தமாதர்
மாயம யக்கையொ ழித்து மெத்தென
வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர
வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள்  தந்திடாதோ

வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு
வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்
வேகமொ டப்பும லைக்கு லத்தைந  ளன்கைமேலே
வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை
மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட
வீடண னுக்கருள் வைத்த வற்றமை  யன்கள்மாளக்

காலயி லக்கணை தொட்ட ருட்கன
மாலமை திக்கரை யிற்ற ரித்துல
காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல்  தந்தகாமன்
காயமொ ழிந்தவர் பெற்ற கொற்றவ
நானில வித்ததி னைப்பு னத்தொரு
காதல்மி குத்துமி கப்ர மித்தருள்  தம்பிரானே.

1163. கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு
குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர்
கரிய கண்துறந் தவர்நி றந்தொளை  படவோடக்
கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட
முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர்
கவர இங்கிதங் கெறுவி தம்பெற  விளையாடும்

படைம தன்பெருங் கிளைதி ருந்திய
அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி
பணிநி தம்பஇன் பசுக முந்தர  முதிர்காம
பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு
மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக
பதம டைந்திருந் தருள்பொ ருந்தும  தொருநாளே

வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட
மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட
வருபு ரந்தரன் தனபு ரம்பெற  முதுகோப
மகர வெங்கருங் கடலொ டுங்கிட
நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற
வனச னின்றழும் படிநெ ருங்கிய  வொருசூதம்

அடியொ டும்பிடுங் கியத டங்கர
வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய
அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி  யநுராக
அவச மும்புனைந் தறமு னைந்தெழு
பருவ தஞ்சிறந் தகன தந்தியின்
அமுத மென்குயங்களின்மு யங்கிய  பெருமாளே.

1164. கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்
பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி
கருவற இருவினை கெட்டாற் காண்வரு   மென்றஏகங்
கருகிய வினைமன துட்டாக் காதது
சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது
கசடற முழுதையும் விட்டாற் சேர்வது  ணர்ந்திடாதே

விதமது கரமுரல் மொட்டாற் சாடிய
ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன்
வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு  புண்டரீக
ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக
நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக
விரகுடை விழிவலை பட்டாற் றாதுந  லங்கலாமோ

பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக
சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக
பருகென வனமுலை கிட்டாத் தாரகை  தந்துநாளும்
பரிவுற வெகுமுக நெட்டாற் றூடொரு
படுகையி னிடைபுழு வெட்டாப் பாசாட
படர்வன பரிமள முட்டாட் டாமரை  தங்கிவாழுஞ்

சததள அமளியை விட்டாற் றேறிய
சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு
தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ  வென்ற கோவே
தழைதரு குழைதரு பட்டாட் சாலவு
மழகிய கலவிதெ விட்டாக் காதலி
தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள்  தம்பிரானே.

1165. கலவியி னலமுரை யாமட வார்சந்
தனத் தனங்களில் வசம தாகி யவரவர்
பாதாதி கேச மளவும்  பாடுங்
கவிஞ னாய்த்திரி வேனைக் காமக் ரோதத் தூர்த்தனை யபராதக்
கபடனை வெகுபரி தாபனை நாளும்
ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி  முறைமுறை

ஆசார வீன சமயந் தோறுங்
களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் சாத்திர நெறிபோயைம்
புலன்வழி யொழுகிய மோகனை
தனிற் பிறந்தொரு நொடியின் மீள அழிதரு
மாதேச வாழ்வை நிலையென் றேயம்
புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் பூக்கழ  லிணைசேரப் 

பொறியிலி தனையதி பாவியை நீடுங்
குணத் ரயங்களும் வரும நேக வினைகளு
மாயா விகார முழுதுஞ்   சாடும்
பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் காப்பது மொருநாளே
குலகிரி தருமபி ராம மயூரம்
ப்ரியப் படும்படி குவளை வாச  மலர்கொடு

வாரா வுலாவி யுணரும் யோகங்
குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் பார்த்தரு ளியபார்வைக்
குரிசிலு மொருசுரர் பூசுர  னோமென்
றதற் கனந்தர மிரணி யாய நமவென
நாராய ணாய நமவென் றோதுங்
கதலை வாய்ச் சிறி யோனுக் காகத் தூணிற் றோற்றிய  வசபாணிப்

பலநக நுதியி னிசாசர னாகங்
கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல்
தோண்மாலை யாக அணியுங்  கோவும்
பரவி வாழ்த்திட வேகற் றாரச் சோதிப் பாற்பணி யிறைவாகைப்
படமுக வடலயி ராபத மேறும்
ப்ரபுப் பயங்கெட வடப ராரை   வரைகெட
வேலேவி வாவி மகரஞ் சீறும்
பரவை கூப்பிட மோதிச் சூர் கெட்டோடத் தாக்கிய பெருமாளே.

1166. கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை
சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை
கடக்க வோடிய ஆலால நஞ்சன  வஞ்சநீடு
கயற்க ணார்கனி வாயூற லுண்டணி
கழுத்து மாகமு மேகீப வங்கொடு
கலக்க மார்பக பாடீர குங்கும  கொங்கைமீதே

உறுத்து மாரமு மோகாவ டங்களு
மறுத்து நேரிய கூர்வாள்ந கம்பட
உடுத்த ஆடையும் வேறாயு ழன்றுக  ழன்றுவீழ
உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை
செருக்கு மோகன வாராத ரங்களை
யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை  யொன்றுகாணேன்

நிறுத்த நூபுர பாதார விந்தமு
முடுத்த பீலியும் வாரார்த னங்களும்
நிறத்தி லேபடு வேலான கண்களும்  வண்டுபாட
நெறித்த வோதியு மாயான்ம னம்பர
தவிக்க மால்தர லாமோ கலந்திட
நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட  னண்புகூர்வாய்

மறித்த வாரிதி கோகோவெ னும்படி
வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில்
வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல்  மண்டமேரு
வளைத்த தாதையு மாறான குன்றமு
மனைத்து லோகமும் வேதாக மங்களும்
மதித்த சேவக வானாளு மும்பர்கள்  தம்பிரானே.

 1167. குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு
குழைக்கும்வடு விழிக்குமெழு  குமிழாலுங்
கொடிப்பவள இதழ்க்குமிக சுடர்த்தரள நகைக்குமமு
தினுக்குமிக வுறந்தழுவு  குறியாலும்

அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல
ரிடிக்குமிள நகைக்குமுள  மயராதே
அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரம
ரளப்பரிய பதக்கமல  மருள்வாயே

கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு
கணத்திலவர் நிணத்தகுடல்  கதிர்வேலாற்
கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை
யளித்திடரை யறுத்தருளு  மயில்வீரா

செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி
சினத்தினொடு பறித்தமர்செய்  பெருகானிற்
செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது
சிமிழ்த்தனமு னுறத்தழுவு  பெருமாளே.

1168. குனகியொரு மயில்போல வாராம னோலீலை
விளையவினை நினையாம லேயேகி மீளாத
கொடியமனதநியாய மாபாதகாபோதி  யெனஆசைக்
கொளுவஅதில் மயலாகி வீறோடு போய்நீள
மலரமளி தனிலேறு யாமாறு போமாறு
குலவிநல மொழிகூறி வாரேறு பூணார  முலைமூழ்கி

மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்
விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள
மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி  யநுராக
வகைவகையி லதிமோக வாராழி யூடான
பொருளளவ தளவாக யாரோடு மாலான
வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற  அருள்வாயே

எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி
லெனவிரகு குலையாத மாதாவு நேரோத
இசையுமொழி தவறாம லேயேகி மாமாது  மிளையோனும்
இனிமையொடு வருமாய மாரீச மானாவி
குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள
இறுதிநெடு மரமேழு தூளாக வேலாவி  யுயிர்சீறி

அநுமனொடு கவிகூட வாராக நீராழி
யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி
அவுணர்கிளைகெடநூறி யாலாலமாகோப  நிருதேசன்
அருணமணி திகழ்பாரா வீராக ராமோலி
யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி
அடல்மருக குமரேச மேலாய வானோர்கள்  பெருமாளே.

1169. கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக்
கொடியிடை துவளத் துவளத்  தனபாரக்
குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக்
குயில்மொழி பதறப் பதறப்  ப்ரியமோகக்

கலவியி லொருமித் தொருமித் திலவிகழ் பருகிப் பருகிக்
கரமொடு தழுவித் தழுவிச்  சிலநாளிற்
கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக்
கடியொரு செயலுற் றுலகிற்  றிரிவேனோ

சலநிதி சுவறச் சுவறத் திசைநிலை பெயரப் பெயரத்
தடவரை பிதிரப் பிதிரத்  திடமேருத்
தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச்
சமனுடல் கிழியக் கிழியப்  பொருசூரன்

பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப்
பிறநரி தொடரத் தொடரத்  திரள்கூகை
பெடையொடு குழறத் குழறச் சுரபதி பரவப் பரவப்
ப்ரபையயில் தொடுநற் குமரப்  பெருமாளே.

1170. கோழையா ணவமி குத்த வீரமே புதல்வர் அற்பர்
கோதுசே ரிழிகு லத்தர்  குலமேன்மை
கூறியெ நடுவி ருப்பர் சேறிடார் தரும புத்ர
கோவுநா னென இசைப்பர்  மிடிடபூடே

ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்
ஆசுசேர் கலியு கத்தி  னெறியீதே
ஆயுநூ லறிவு கெட்ட நானும் வேறல அதற்கு
ளாகையா லவையடக்க  வுரையீதே

ஏழைவா னவர னழக்க ஆனைவா சவனு ருத்ர
ஈசன்மேல் வெளியிலெ றிக்க  மதிவேணி
ஈசனார் தமதிடுக்க மாறியே கயிலை வெற்பில்
ஏறியே யினிதி ருக்க  வருவோனே

வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து
வேத னாரையும் விடுத்து   முடிசூடி
வீரசூ ரவன்மு டிக்கு ளேறியே கழுகு கொத்த
வீறுசேர்சிலை யெடுத்த  பெருமாளே.

1171. சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை
சந்திரந் ததும்ப சைந்து  தெருவூடே
சங்கினங் குலுங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு
சந்தனந் துவண்ட சைந்து  வருமாபோல்

கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங்க இன்சு கங்கள்
கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன்  மடவார்தோள்
கொங்கைபைங் கரம்பு ணர்ந்த ழிந்துணங்க லுந்தவிர்ந்து
கொஞ்சுநின் சரண்க ளண்ட  அருள்தாராய்

தந்தனந்த செஞ்சி லம்பு கிண்கிணின்கு லங்கள் கொஞ்ச
தண்டையம்ப தம்பு லம்ப  வருவோனே
சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க
சண்பகம் புனங்கு றம்பொன்  அணைமார்பா

வந்தநஞ் சுகந்த மைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி
மந்தரம் பொதிந்த கொங்கை  யுமையீனும்
மைந்தனென் றுகந்து விஞ்சுமன்பணிந்த சிந்தையன்பர்
மங்கலின் றுளம்பு குந்த  பெருமாளே.

1172. சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
சரியை கிரியைமக யோக மோகிகள்
துரித பரசமய பே தவாதிகள்  என்றுமோடித்
தொடர வுணரஅரி தாய தூரிய
பொருளை யணுகியநு போக மானவை
தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய   நின்ப்ரகாசங்

கருதி யுருகியவி ரோதி யாயருள்
பெருகு பரமசுக மாம கோததி
கருணை யடியரொடு கூடி யாடிம  கிழ்ந்துநீபக்
கனக மணிவயிர நூபு ராரிய
கிரண சரணஅபி ராம கோமள
கமல யுகளமற வாது பாடநி  னைந்திடாதோ

மருது நெறுநெறன மோதி வேரொடு
கருது மலகைமுலை கோதி வீதியில்
மதுகை யொடுதறுக ணாளைவீரிட  வென்றுதாளால்
வலிய சகடிடறி மாய மாய்மடி
படிய நடைபழகி யாயர் பாடியில்
வளரு முகில்மருக வேல்வி நோதசி  கண்டிவீரா

விருதர் நிருதர்குல சேனை சாடிய
விஜய கடதடக போல வாரண
விபுதை புளகதன பார பூஷண  அங்கிராத
விமலை நகிலருண வாகு பூதர
விபுத கடககிரி மேரு பூதர
விகட சமரசத கோடி வானவர்  தம்பிரானே.

1173. சுற்றத் தவர்களு மக்களு மிதமுள
சொற்குற் றரிவையும் விட்டது சலமிது
சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு  மெனமாழ்கித்
துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல்
சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு
தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை  பிணமூடச்

சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல்
சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது
தப்பிற் றுவறுறு மத்திப நடையென  உரையாடிச்
சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை
தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி
தத்தச் சடம்விடு மப்பொழு திருசர  ணருள்வாயே

சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல்
சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில்
செற்கட் சிவகதி யுத்தமி களிதர  முதுபேய்கள்
திக்குச் செககெண தித்தரி திகுதிகு
செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத
டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென  நடமாடும்

கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள்
குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய்
கொச்சைக் கணபதி முக்கண னிளையவ  களமீதே
குப்புற் றுடனெழு சச்சரி முழவியல்
கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர்
கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்  பெருமாளே.

1174. செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள்
தெண்டெ னத்துணை தாள்மேல்விழ  அமராடிச்
சிந்த னைப்படு மோகாதியி லிந்த்ரி யத்ததினி லோடாசில
திண்டி றற்றவ வாள்வீரரொ  டிகலாநின்

றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன
மந்தி பட்டிருள் மூடாவகை  யவிரோத
அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந
லன்பு வைத்தரு ளாமோர்கழ  லருளாதோ

கொங்க டுத்தகு ராமாலிகை தண் கடுக்கைது ழாய்தாதகி
கும்பி டத்தகு பாகீரதி  மதிமீது
கொண்டசித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர
குண்ட லத்தர்பி னாகாயுத  ருடனேயச்

சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர்
தங்க ளைச்சிறை மீளாயென  அசுரேசன்
தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர
சண்ட விக்ரம வேலேவிய  பெருமாளே.

1175. சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித்
தூறுசிவப் பேறுவிழிக்  கணையாலே
தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத்
தேறலெனக் கூறுமொழிச்  செயலாலே

ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத்
தாலுமிதத் தாலும்வளைப்  பிடுவோர்மேல்
ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற்
றாளிணையைச் சேரஎனக்  கருள்வாயே

காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக்
காயஎரித் தேவிதியிற்  றலையூடே
காசினியிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத்
தேறிவகித் தூருதிரைக்  கடல்மீதில்

ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற்
றாடியிடத் தேயுமைபெற்  றருள்வாழ்வே
ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட்
டாதுலருக் காறுமுகப்  பெருமாளே.

1176. சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு
ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு
சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள்  முலைமீதே
சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர்
முற்றிக்குத் தத்தைக் கொப்பென
சொற்பித்துக் கற்பிற் செப்பிய  துயராலே

சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு
வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ்
தித்திப்பிற் கொத்துப் பித்துயர்  கொடுநாயேன்
திக்குக்கெட் டொட்டுச் சிட்டென
பட்டத்துற் புத்திக் கட்டற
செப்பத்துறு பற்றற் கற்புத  மருள்வாயே

தககுத்தக் குக்குக் குக்குட
தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென
தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ  விருதோதை
தத்தித்தித் தித்தித் தித்தென
தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை
சத்திக்கொற் றத்திற் குத்திய  முருகோனே

துக்கித்திட் டத்திக் துக்கக
நெக்குப்பட் டெக்கித் துட்டறு
சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு  ளருள்வேலா
துற்றப்பொற் பச்சைக் கட்கல
பச்சித்ரப் பக்ஷிக் கொற்றவ
சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய  பெருமாளே.

1177. ஞானவி பூஷணி காரணி காரனி
காமாவி மோகினி வாகினி யாமளை
மாமாயி பார்வதி தேவிகு ணாதரி  உமையாள்தன்
நாதாக்கு பாகர தேசிகர் தேசிக
வேதாக மேயருள் தேவர்கள் தேவந
லீசா சடாயர மேசர் சர்வேசுவரி  முருகோனே

தேனார் மொழிவளி நாயகி நாயக
வானாடுனோர் தொழு மாமயில் வாகன
சேணாரை மானின் மனோகர மாகிய  மணவாளா
சீர்பாத சேகர னாகவு நாயினன்
மோகா விகார விடாய் கெட ஓடவெ
சீராக வேகலை யாலுனை ஓதவும்  அருள்வாயே

பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை
சூராடி யேகழு மீதுனி லேறிட
கூனான மீனனி டேறிட கூடலில்  வருவோனே
பேகாண்மை யாள னிசாசரர் கோனிடு
கூறாக வாளி தொடூ ரகு நாயகன்
பூவாய னாரணன் மாயனி ராகவன்  மருகோனே

வாணாள் படாவரு சூரர்கள் மாளவெ
சேணா டுளோரவர் வீடதி டேறிட
கோனாக வேவரு நாதகுரூபர  குமரேசா
வாசாம கோசர மாகிய வாசக
தேசாதி யோரவர் பாதம தேதொழ
பாசா விநாசக னாகவு மேவிய  பெருமாளே.

1178. தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்
துளிபயிறு கழலினிய அண்டமுங் கொண்டதின்
தசையுதிர  நிணநிறைய அங்கமுந் தங்கவொன்  பதுவாயும்
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்
பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன்
தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின்  வசமாகித்

திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்
கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்
சிதறவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும்  அயர்வாகிச்
செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்
சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடும்
செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங்  கழல்தாராய்

செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணும்
கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரம்
திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின்   மகிழ்வாகிச்
சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன்
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந்  தவமோதச்

சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்
சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன்
சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங்  கதிர்வேலா
சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்
தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ்
சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும்  பெருமாளே.

1179. தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற்
சதங்கைக்கற் சிலம்பொத்திக்  கையில்வீணை
ததும்பக்கைக் குழந்தைச் சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற்
சரஞ்சுற்றிட் டிணங்கக்கடங  சரவேலால்

தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத்
தினந்தெட்டிக் கடன்பற்றிக்  கொளுமாதர்
சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச்
சிவம்பெற்றுத் தவம்பற்றக்  கழல்தாராய்

தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்
டடண்டட்டட்  டிமிண்டுட்டுட்  டியல்தாளம்
தகுந்நொத்தித் திமிந்தித்தித் த்வண்டைக்குட் கயர்ந்துக்கத்
தகண்டத்தர்க் குடன்பட்டுற்  றசுராரைச்

சினந்தத்திக் கொளுந்தக்கைக் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச்
சிரந்தத்தப் பிளந்துட்கக்  கிரிதூளாச்
செந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச்
செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப்  பெருமாளே.

1180. நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு
நடுசிகர மாகி வாய்வ  கரமாகி
நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி
நவசிவய மாமை யாகி  எழுதான

அகரவுக ரேதபோம சகர வுணர் வான சூரன்
அறிவி லறிவான பூர  ணழுயாகும்
அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி
மருவு மவ தான போதம்  அருள்வாயே

குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
குறையகல வேலை மீது  தனியூரும்
குழவிவடி வாக வேரும் பரதர்தவ மாக மீறு
குலவுதிரை சேரு மாது  தனைநாடி

அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி
அரியமண மேசெய் தேக  வலைதேடி
அறுமுகவன் மீகரான பிறவி யமராசை வீசும்
அசபை செகர்சோதி நாத  பெருமாளே.

1181. நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
நடையற மெத்த நொந்து காலெய்த்து
நயனமி ருட்டி நின்று கோலுற்று  நடைதோயா
நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து
நமதென மெத்த வந்த வாழ்வுற்று
நடலைப டுத்து மிந்த மாயத்தை  நகையாதே

விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு
மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும்  வினையோடு
மிகுகவி னிட்டு நின் மாதர்க்கு
மிடைபடு சித்த மொன்று வேனுற்றுள்
விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு  வினவாதோ

உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு
மொளிபெற நற்ப தங்கள் போதித்து
மொருபுடை பச்சை நங்கை யோடுற்று  முலகூடே
உறுபலி பிச்சை கொண்டு போயுற்று
முவரிவி டத்தை யுண்டு சாதித்து
முலவிய முப்பு ரங்கள் வேவித்து  முறநாகம்

அரையொடு கட்டி யந்த மாய்வைத்து
மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க
அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து  மரவோடே
அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
அரியய னித்தம் வந்து பூசிக்கும்
அரநிம லர்க்கு நன்றி போதித்த  பெருமாளே.

1182. நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி
நிறைந்த வயிறும் சரிந்து  தடியூணி
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு
நினைந்த மதியுங் கலங்கி  மனையாள்கண்

டுமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து
உறைந்த உயிரும் கழன்று  விடுநாள்முன்
உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து
ஒடுங்கி நினையும் பணிந்து  மகிழ்வேனோ

திமிந்தி யெனவெங் கணங்கள்குணங்கர் பலவுங் குழும்பி
திரண்ட சதியும் புரிந்து  முதுசூரன்
சிரங்கை முழுதும் குடைந்து நிணங்கொள் குடலும் தொளைந்து
சினங்க ழுகொடும் பெருங்கு  ருதிமூழ்கி

அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்றுமகிழ்கொண்டு மண்ட
அடர்ந்த அயில்முன் துரந்து  பொருவேளே
அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி
அணங்கை மணமுன் புணர்ந்த  பெருமாளே.

1183. நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய
நெடிய வேற்படை யானே ஜேஜெய
எனஇ ராப்பகல் தானே நான்மிக
நினது தாட்டொழு மாறே தானினி  யுடனேதான்

தரையி னாழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கட லூடே நானுறு
சவலை தீர்த்துன தாளே சூடீயு  னடியார் வாழ்
சபையி னேற்றியின் ஞானா போதமு
மருளி யாட்கொளு மாறே தானது
தமிய னேற்குமு னேநீ மேவுவ  தொரு நாளே

தருவி னாடர சாள்வான் வேணுவி
னுருவ மாய்ப்பல நானே தானுறு
தவசி னாற்சிவ னீபோய் வானவர்  சிறைதீரச்
சகல லோக்கிய மேதா னாளுறு
மகர பார்த்திப னோடே செயவர்
தமரை வேற்கொடு நீறா யேபட  விழமோதென்

றருள ஏற்றம ரோடே போயவ
ருறையு மாக்கிரி யோடே தானையு
மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ரடலாகி
அமிரில் வீட்டியுமக வானோர் தானுறு
சிறையை மீட்டர னார்பால் மேவிய
அதிப ராக்ரம வீரா வானவர்  பெருமாளே.

1184. ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து
ஆழி வேலை போன்மு ழங்கி  யடர்வார்கள்
ஆகமீதி லேசி வந்து ஊசி தானுமே நுழைந்து
ஆலை மீதி லேக ரும்பு  எனவேதான்

வீர மான சூரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து
வீசு வார்கள் கூகு வென்று  அழுபோது
வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர்வந்து
மோல வீழ்வ ரீது கண்டு  வருவாயே

நாரி வீரு சூரி யம்பை வேத வேத மேகபு கழ்ந்த
நாதர் பாலி லேயி ருந்த  மகமாயி
நாடி யோடி வாற அண்பர் காண வேண தேபு கழ்ந்து
நாளு நாளு மேபு கன்ற  வரைமாது

நீரின் மீதி லோயி ருந்த நீலி சூலி வாழ்வுமைந்த
நீப மாலை யேபு னைந்த  குமரேசா
நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறுகண்ட
நீத னான தோர்கு ழந்தை  பெருமாளே.

1185. நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு
நீளு மங்க மாகி மாய  வுயிரூறி
நேச மொன்று தாதைதாய ராசை கொண்ட போதில் மேவி
நீதி யொன்று பால னாகி  யழிவாய்வந்

தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத
ரோடு சிந்தை வேடை கூர  உறவாகி
ஊழி யைந்த கால மோதி யோனும் வந்து பாசம் வீச
ஊனு டம்பு மாயு மாய  மொழியாதோ

சூரனண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய்வி டாது
தோகை யின்கண் மேவி வேலை  விடும்வீரா
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு
தோகை பங்க ரோடு சூது  மொழிவோனே

பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்
பாடல் கண்டு ஏகு மாலின்  மருகோனே
பாத கங்கள் வேறிநூறி நீதி யின்சொல் வேதவாய்மை
பாடு மன்பர் வாழ்வதான  பெருமாளே.

1186. பகல்மட்கச் செக்கர் ப்ரபைவிடு
நவரத்னப் பத்திக் தொடைநக
நுதிபட்டிட் டற்றுச் சிதறிட  இதழூறல்
பருகித்தித் திக்கப் படுமொழி
பதறக்கைப் பத்மத் தொளிவளை
வதறிச்சத் திக்கப் பளகித  தனபாரம்

அகலத்திற் றைக்கப் பரிமள
அமளிக்குட் சிக்கிச் சிறுகென
இறுக்கைப் பற்றித் தழுவிய  அநுராக
அவசத்திற் சித்தத் தறிவையு
மிகவைத்துப் பொற்றித் தெரிவையர்
வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு  துணர்வேனோ

இகல்வெற்றிச் சத்திக் கிரணமு
முரணிர்த்தப் பச்சைப் புரவியு
மிரவிக்கைக் குக்டத் துவசமு  மறமாதும்
இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு
கவிமெத்தச் செப்பிப் பழுதற
எழுதிக்கற் பித்துத் திரிபவர்  பெருவாழ்வே

புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு
கலகச்செற் றச்சட் சமயிகள்
புகலற்குப் பற்றற் கரியதொ  ருபதேசப்
பொருளைப்புட் பித்துக் குருபர
னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி
புனையப்பர்க் கொப்பித் தருளிய  பெருமாளே.

1187. பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
பட்டப்புள கச்செப் பிளமுலை
பட்டிட்டெதிர் கட்டு பரதவ  ருயர்தாளப்
பத்மத்திய ரற்புக் கடுகடு
கட்சத்தியர் மெத்தத் திரவிய
பட்சத்திய ரிக்குச் சிலையுரு  விலிசேருஞ்

சித்தத்தரு ணர்க்குக் கனியத
ரப்புத்தமு தத்தைத் தருமவர்
சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை  நுதலார்தம்
தெட்டிற்படு கட்டக் கனவிய
பட்சத்தரு ளற்றுற் றுனதடி
சிக்கிட்டிடை புக்கிட் டலைவது  தவிராதோ

மத்தப்பிர மத்தக் கயமுக
னைக்குத்திமி தித்துக் கழுதுகள்
மட்டிட்டஇ ரத்தக் குருதியில்  விளையாட
மற்றைப்பதி னெட்டுக் கணவகை
சத்திக்கந டிக்கப் பலபல
வர்க்கத்தலை தத்தப் பொருபடை  யுடையோனே

முத்திப்பர மரத்தைக் கருதிய
சித்தத்தினில் முற்றத் தவமுனி
முற்பட்டுழை பெற்றுத் தருகுற  மகள்மேல்மால்
முற்றித்திரி வெற்றிக் குருபர
முற்பட்டமு ரட்டுப் புலவனை
முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு  பெருமாளே.

1188. பரதவித புணடரிக பாதத் தாட்டிகள்
அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள்
பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள்  கொடிதாய
பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி
தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள்
பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர்  ஒருகாம

விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில்
ம்ருகமதமி குந்தபனி நீரைச் தேக்கியெ
விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய  தமிழ்நூலின்
விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள்
முலைகளில்வி ழுந்துபரி தாபத் தாற்றினில்
விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது  மொருநாளே

உரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய
சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி
யுடனுருவுபங்குடைய நாகக் காப்பனும்  உறிதாவும்
ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல
மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும்
உரலொடுத வழ்தநவநீதக் கூற்றனு   மதிகோபக்

கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி
கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை
பருமமென வந்துதொழ வேதப் பாற்பதி  பிறியாத
கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர்
கரவடக்ர வுஞ்சகிரி சாயத் தோற்றெழு
கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய  பெருமாளே.

1189. பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து
பலபல யோகத் திருந்து  மதராசன்
பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து
பரிதவி யாமெத்த நொந்து  மயல்கூர

அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி
யவர்விழி பாணத்து நெஞ்ச  மறைபோய்நின்
றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றை யுன்ற
னருள்வச மோஇப்ர மந்தெ  ரிகிலேனே

எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை
யெனவொரு ஞானக் குருந்த  ருளமேவும்
இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து
இரணியன் மார்பைப் பிளந்த  தனியாண்மை

பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த
புளகப டீரக் குரும்பை  யுடன்மேவும்
புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து
புனமிசை யோடிப் புகுந்த  பெருமாளே.

1190. பாணிக்குட் படாது சாதகர் காணச்சற்றொணா துவாதிகள்
பாஷிக்கத் தகாது பாதக  பஞ்சபூத
பாசத்திற் படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
பாவிக்கப் பெறாது வாதனை  நெஞ்சமான

ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்விழி
யேறிப்பற் றொணாது நாடினர்  தங்களாலும்
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோத்தி
யேறச்செச் சைநாறு தாளைவ  ணங்குவேனோ

ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்
ஆபத்தைக் கெடாநி சாசரர்  தம்ப்ரகாசம்
ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர
ஆழிச்சக் ரவாள மாள்தரும்  எம்பிரானே

மாணிக்கப் ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதை நூபுர
வாசப்பத் மபாத சேகர  சம்புவேதா
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்
வாசிப்பித் ததேசி காசுரர்  தம்பிரானே.

1191. பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி
பாயலி லிருத்திக் காட்டி  யநுராகம்
பாகிதழ் கொடுத்துக் காட்டி நூல்களைவிரித்துக் காட்டி
பார்வைகள் புரட்டிக் காட்டி  யுறவாகி

மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி
மேல்விழு நலத்தைக் காட்டு  மடவார்பால்
மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பாத நினைப்பைக் கூட்டு
மேன்மையை யெனக்குக் காட்டி  யருள்வாயே

காலனை யுதைத்துக்காட்டி யாவியை வதைத்துக்காட்டி
காரணம் விளைத்துக்காட்டி  யொருகாலங்
கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி
காமனை யெரித்துக் காட்டி  தருபாலா

மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில்
வாலிப மிளைத்துக் காட்டி  அயர்வாகி
மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு
வாழ்புறு சமத்தைக் காட்டு  பெருமாளே.

1192. புகரில் சேவல தந்துர சங்க்ரம
நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
பொருத சேவக குன்றவர் பெண்கொடி  மணவாள
புனித பூகர ருஞ்சுர ரும்பணி
புயச பூதர என்றிரு கண்புனல்
பொழிய மீமிசை யன்புது ளும்பிய  மனனாகி

அகில பூதவு டம்புமு டம்பினில்
மருவு மாருயி ருங்கர ணங்களு
மவிழ யானுமி ழந்தஇ டந்தனி  லுணர்வாலே
அகில வாதிக ளுஞ்சம யங்களும்
அடைய ஆமென அன்றென நின்றதை
யறிவி லேனறி யும்படி யின்றருள்  புரிவாயே

மகர கேதன முந்திகழ் செந்தமிழ்
மலய மாருத மும்பல வெம்பரி
மளசி லீமுக மும்பல மஞ்சரி  வெறியாடும்
மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர
மதுர கார்முக மும்பொர வந்தெழு
மதன ராஜனை வெந்துவி ழும்படி  முனிபால

முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு
முதுப கீரதி யும்புனை யுஞ்சடை
முடியர் வேதமு நின்றும் ணங்கமழ்  அபிராமி
முகர நூபுர பங்கய சங்கரி
கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்
முருக னேசுர குஞ்சரி ரஞ்சித  பெருமாளே.

1193. புருவத்தை நெறித்து விழிக்கயல்
பயிலிட்டு வெருட்டி மதித்திரு
புதுவட்டை மினுக்கி யளிக்குல  மிசைபாடும்
புயல்சற்று விரித்து நிரைத்தொளி
வளையிட்ட கரத்தை யசைத்தகில்
புனைமெத்தை படுத்த பளிக்கறை  தனிலேறிச்

சரசத்தை விளைத்து முலைக்கிரி
புளகிக்க அணைத்து நகக்குறி
தனைவைத்து முகத்தை முகத்துட  னுறமேவித்
தணிவித்தி ரதத்த தரத்துமி
ழமுதத்தை யளித்து வுருக்கிகள்
தருபித்தை யகற்றி யுனைத்தொழ  முயல்வேனோ

பரதத்தை யடக்கி நடிப்பவர்
த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர்
பரவைக்குள் விடத்தை மிடற்றிடு  பவர்தேர்கப்
பரையுற்ற கரத்தர் மிகப்பகி
ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர்
பரவத்தர் பொருப்பி லிருப்பவ  ருமையாளர்

சுரர்சுத்தர் மனத்துறை வித்தகர்
பணிபத்தர் பவத்தை யறுப்பவர்
சுடலைப்பொடி யைப்பரி சிப்பவர்  விடையேறுந்
துணையொத்த பதத்த ரெதிர்த்திடு
மதனைக்கடி முத்தர் கருத்தமர்
தொலைவற்ற க்ருபைக்கு ளுதித்தருள்  பெருமாளே.

1194. புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை
புலக்கண் கூடு மதுதனை  அறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கணி பூது படிறரை
புழுக்கண் பாவ மதுகொளல்  பிழையாதே

கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி
களைக்கும் பாவ கழல்படு  மடிநாயேன்
கலக்குண்டாகு புவிதனி லெனக்குண்டாகு பணிவிடை
கணக்குண் டாதல் திருவுள  மறியாதோ

சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ
சிறைக்குஞ் சாமி சொருபமி  தொளிகாணச்
செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ்சாமி பவமதை
தெறிக்குஞ் சாமி முனிவர்க  ளிடமேவும்

தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை
தரிக்குஞ் சாமி யசுரர்கள்  பொடியாகச்
சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமிசரவண
தகப்பன் சாமி யெனவரு  பெருமாளே.

1195. பூசல்த ருங்ஙகய லும்பொ ருந்திய
வாசந றுங்குழ லுந்து லங்கிய
பூரண கும்பமெ னுந்த னங்களு  மடமாதர்
போகம டங்கலை யும்பு ணர்ந்தது
ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை
போயக லும்படி பொன்றை யன்புற  நினையாதே

ஆசையெ னும்படி யுந்த னங்களு
மோசைந டந்திட வுந்தி னங்களும்
ஆருட னும்பகை கொண்டு நின்றுற  நடமாடி
ஆடிய பம்பர முன்சு ழன்றெதி
ரோடிவி ழும்படி கண்ட தொன்றுற
ஆவிய கன்றுவி டும்ப யங்கெட  அருள்வாயே

வாசவ னன்புவி ளங்க நின்றசு
ரேசர்கு லங்கள் டங்க லுங்கெட
வானவர்நின்றுதி யங்கு கின்றதொர்  குறைதீர
வாரிய திர்ந்துப யந்து நின்றிட
மேருஅ டங்கஇ டிந்து சென்றிட
வாகைபு னைந்தொரு வென்றி கொண்டரு  ளிளையோனே

வீசிய தென் றலொ டந்தி யும்பகை
யாகமு யங்கஅ நங்க னும்பொர
வேடையெ னும்படி சிந்தை நொந்திட  அடைவாக
வேடர்செ ழும்புன வஞ்சி யஞ்சன
வேலினு ளங்கள்க லங்கி பின்புற
வேளையெனும்படி சென்றிறைஞ்சிய  பெருமாளே.

1196. பூசல் வந்திரு தோடா காதொடு
மோதி டுங்கயல் மானால் மானமில்
போக மங்கையர் கோடா கோடிய  மனதானார்
பூர குங்கும் தூளார் மோதப
டீர சண்பக மாலா லாளித
பூத ரங்களின் மீதே மூழ்கிய  அநுராக

ஆசை யென்கிற பாரா வாரமு
மேறு கின்றில னானா பேதஅ
நேக தந்த்ரக்ரி யாவே தாகம  கலையாய
ஆழி யுங்கரை காணே னூபுர
பாத பங்கய மோதே னேசில
னாயி னுங்குரு நாதா நீயருள்  புரிவாயே

வாச வன்பதி பாழா காமல்நி
சாச ரன்குலம் வாழா தேயடி
மாள வன்கிரி கூறாய் நீயெற  நெடுநேமி
மாத வன்தரு வேதா வோடலை
மோது தெண்கடல் கோகோ கோவென
மாமு றிந்திட நீள்வே லவிய  இளையோனே

வீசு தென்றலும் வேள்பூ வாளியு
மீறு கின்றமை யாமோ காமவி
டாய்கெ டும்படி காவா யாவியை  யெனஏனல்
மீது சென்றுற வாடா வேடுவர்
பேதை கொங்கையின் மீதே மால்கொடு
வேடை கொண்டபி ரானே வானவர்  பெருமாளே.

1197. பொங்குங்கொடியகூற்றனு நஞ்சும்பொதுவில் நோக்கிய
பொங்கும் புதிய நேத்திர  வலைவீசிப்
பொன்கண் டிளகுகூத்திகள் புன்கண்கலவிவேட்டுயிர்
புண்கொண் டுருகி யாட்படு  மயல்தீரக்

கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையு மாய்க்குடி
கொங்கின் குவளை பூக்கிற  கிரிசோண
குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய
குன்றம் பிறவும் வாழ்த்துவ  தொருநாளே

எங்கும் பகர மாய்க்குடி விஞ்சும் பகழி வீக்கிய
வெஞ்சண் டதனு வேட்டுவர்  சரணார
விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை
மென்குங் குமகு யாத்திரி  பிரியாதே

எங்குங் கலுழி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட
எங்குங் குருவி யோச்சிய  திருமானை
என்றென் றவசமாய்த்தொழுதென்றும் புதிய கூட்டமொ
டென்றும் பொழுது போக்கிய  பெருமாளே.

1198. பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர்
புளக தனவட மசைத்துக் காட்டுவர்
புயலி னளகமும் விரித்துக் காட்டுவர்  பொதுமாதர்
புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர்
பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர்
புதிய பரிபுர நடித்துக் காட்டுவ  ரிளைஞோரை

உருக அணைதனி லனைத்துக் காட்டுவர்
உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ
உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர்  பொடிமாயம்
உதர மெரிதர மருத்திட் டாட்டிகள்
உயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவர்
உறுவுகலவியைவிடுத்திட்டாட்கொள  நினையாதோ

மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி
மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர்
மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற  அழுதூறும்
வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென
வசட னிரணிய நுரத்தைப் பேர்த்தவன் 
மழையினிரைமலை யெடுத்துக் காத்தவன்  மருகோனே

விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை
விகட தடமுடி பறித்துத் தோட்களை
விழவு முறியவு மடித்துத் தாக்கிய  அயில்வீரா
வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட
வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய
விபுத மலரடி விரித்துப் போற்றினர்  பெருமாளே.

1199. மங்காதிங் காக்குஞ் சிறுவரு
முண்டேயிங் காற்றுந் துணைவியும்
வம்பாருந் தேக்குண் டிடவறி  தெணும்வாதை
வந்தேபொன் தேட்டங் கொடுமன
நொந்தேயிங் காட்டம் பெரிதெழ
வண்போதன் தீட்டுந் தொடரது  படியேமன்

சங்காரம் போர்ச்சங் கையிலுடல்
வெங்கானம் போய்த்தங் குயிர்கொள
சந்தேந் தீர்க்குந் தனுவுட  னணுகாமுன்
சந்தாரஞ் சாத்தும் புயவியல்
கந்தாஎன் றேத்தும் படியென
சந்தாபந் தீர்த்தென் றடியிணை  தருவாயே

கங்காளன் பார்த்தன் கையிலடி
யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு
கன்சாபஞ் சார்த்துங் கரதல  னெருதேறி
கந்தாவஞ் சேர்த்தண் புதுமல
ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி
கண்டான்வெங் காட்டங் கனலுற  நடமாடி

அங்காலங் கோத்தெண் டிசைபுவி
மங்கா துண் டாற்கொன் றதிபதி
அந்தாபந் தீர்த்தம் பொருளினை  யருள்வோனே
அன்பாலந் தாட்கும் பிடுமவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல  பெருமாளே.

1200. மதன தனுநிக ரிடைக்கே மன
முருக வருபிடி நடைக்கே யிரு
வனச பரிபுர மலர்க்கே மது  கரம்வாழும்
வகுள ம்ருகமத மழைக்கே மணி
மகர மணிவன குழைக்கே மட
மகளிர் முகுளித முலைக்கே கடல்  அமுதூறும்

அதர மதுரித மொழிக்கே குழை
அளவு மளவிய விழிக்கே தள
வனைய தொருசிறு நகைககே பனி  மதிபோலும்
அழகு திகழ்தரு நுதற்கே யந
வரத மவயவ மனைத்தூ டினு
மவச முறுமயல் தவிர்த்தாள்வது  மொருநாளே

உததி புதைபட அடைத்தா தவன்
நிகரி லிரதமும் விடுக்கா நகர்
ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி  துயர்தீர
உபய ஒருபது வரைத்தோள் களு
நிசிச ரர்கள்பதி தசக்ரீ வமு
முருள ஒருகணை தெரித்தா னும  வுனஞானம்

இதமி லவுணர்த மிருப்பா கிய
புரமு மெரியெழு முதற்பூ தர
திலத குலகிரி வளைத்தா னும்ஓர்  மகிழ்வான
திருவ நகர்குடி புகச்சூ கர
மகர சலமுறை யிடச்சூ ரொடு
சிகர கிரிபொடி படச்சா டிய  பெருமாளே.

1201. மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
வடிவாயுடல் நடமாடுக  முடியாதேன்
மனமாயையொடிகாழ்வினையறமூதுடைமலம்வேரற
மகிழ்ஞானக அநுபூதியி  னருள்மேவிப்

பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன் முனெ
பரிபூரண கிருபாகரம்  உடன்ஞான
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட
பலகோடிவெண் மதிபோலவெ  வருவாயே

சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு
சசிசூரியர் சுடராமென  ஒருகோடிச்
சடைமாமுடி முனிவோர் சர ணென வேதியர் மறையோதுக
சதிநாடக மருள்வேணியன்  அருள்பாலா

விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி
வெகுமாலுற தனமேலணை  முருகோனே
வெளியாசையொ டடைபூவணர்மருகாமணிமுதிராடக
வெயில்வீசிய அழகாதமிழ்  பெருமாளே.

1202. மாடமதிள் சுற்று மொக்க வைத்திட
வீடுகனக் கத்த னத்தி லச்சுற்று
மாலிபமொத் துப்ர புத்த னத்தினில்  அடைவாக
மாதர்பெருக் கத்த ருக்க மற்றவர்
சூழவிருக் கத்த ரிக்க இப்படி
வாழ்க்கையில்மத் தப்ர மத்த சித்திகொள்  கடைநாளிற்

பாடையினிற் கட்டி விட்டு நட்டவர்
கூடஅரற் றிப்பு டைத்து றுப்புள
பாவையெடுத் துத்த ழற்கி ரைப்பட  விடலாய
பாடுதொலைத் துக்க ழிக்க அக்ருபை
தேடுமெனைத் தற்பு ரக்க வுற்றிரு
பாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனை  அருளாயோ

ஆடகவெற் பைப்பெருத்த மத்தென
நாகவடத் தைப்பிணித்து ரத்தம
ரார்கள்பிடித் துத்தி ரித்தி டப்புகை  அனலாக
ஆழிகொதித் துக்க தற்றி விட்டிமை
யோர்களொளிக் கக்க ளித்த உக்கிர
ஆலவிடத் தைத்த ரித்த அற்புதர்  குமரேசா

வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழு
பாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடு
வேளையெனப் புக்கு நிற்கும் வித்தக  இளையோனே
வேகமிகுத் துக்க திக்கும் விக்ரம
சூரர்சிரத் தைத்து ணித்த டக்குதல்
வீரமெனத் தத்து வத்து மெச்சிய  பெருமாளே.

1203. மாண்டாரெ லும்பணி யுஞ்சடை
ஆண்டாரி றைஞ்ச மொழிந்ததை
வான்பூத லம்பவ னங்கனல்  புனலான
வான்பூத முங்கர ணங்களு
நான்போயொ டுங்கஅ டங்கலு
மாய்ந்தால்வடி ளங்கும தொன்றினை  யருளாயேல்

வேண்டாமை யொன்றைய டைந்துள
மீண்டாறி நின்சர ணங்களில்
வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை  உடையேனாய்
வேந்தாக டம்புபு னைந்தருள்
சேந்தாச ரண்சர ணென்பது
வீண்போம தொன்றல எனபதை  உணராயோ

ஆண்டார்த லங்கள ளந்திட
நீண்டார்மு குந்தர்த் டந்தனில்
ஆண்டாவி துஞ்சிய தென்றுமு  தலைவாயுற்
றாங்கோர் சிலம்புபுலம்பிட
ஞான்றூது துங்கச லஞ்சலம்
ஆம்பூமு ழங்கிய டங்கும  ளவில்நேசம்

பூண்டாழி கொண்டுவ னங்களி
லேய்ந்தாள வென்று வெறுந்தனி
போந்தோல மென்றுத வும்புயல்  மருகோனே
பூம்பாளை யெங்கும ணங்கமழ்
தேங்காவில் நின்றதொர் குன்றவர்
பூந்தோகை கொங்கைவி ரும்பிய  பெருமாளே.

1204. மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்
வாரிதுயி லாவ தற்கும்  வசையேசொல்
மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும்
வாயுமிள வாடை யிற்கு  மதனாலே

வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து
வேறுபடு மேனி சற்றும்  அழியாதே
வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து
மேவுமிரு பாத முற்று  வரவேணும்

ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த
ஆறுமுக னேகு றத்தி  மணவாளா
ஆழியுள கேழ டக்கி வாசுகியை வாய டக்கி
ஆலுமயி லேறி நிற்கு  மிளையோனே

சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த
சேவலவ நீப மொய்த்த  திரள்தோளா
சேருமட வால்மி குத்த சூரர்கொடு யோய டைத்த
தேவர்சிறை மீள விட்ட  பெருமாளே.

1205. மின்னினில் நடுக்க முற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த
வெண்ணகையில் வட்ட மொத்து  அழகார
விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த
வின்னுதலி லிட்ட பொட்டில்  விலைமாதர்

கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த
கண்ணினிணை யிற்சி வத்த  கனிவாயிற்
கண்ணழிவு வைத்த புத்தி சண்முகநினைக்க வைத்த
கன்மவச மெப்ப டிக்கு  மறவேனே

அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி
யம்மையட விப்பு னத்தில்  விளையாடும்
அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ரப்பு யத்தி
லன்னியஅ ரக்க ரத்த  னையுமாளப்

பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட
புன்மையர் ரத்ர யத்தர்  பொடியாகப்
பொன்மலைவ ளத்தெ ரித்த கண்ணுதலி டத்திலுற்ற
புண்ணிய வொருத்தி பெற்ற  பெருமாளே.

1206. முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணைசெ லுத்திகள்
முத்தமி டாம னுருக்கிகள்  இளைஞோர்பால்
முட்டவுலாவிமருட்டிகள் நெட்டிலைவேலின்விழிச்சியர்
முப்பது கோடி மனத்தியர்  அநுராகத்

தத்தைகளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
தப்புறு மாறக மெத்திகள்  அளவேநான்
தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோதவு முத்தமிழ்
தத்துவ ஞான மெனக்கருள்  புரிவாயே

மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி
மைத்துன னாகிய விக்ரமன்  மருகோனே
வற்றிடவாரிதி முற்றிய வெற்றிகொள் சூரர்பதைப்புற
வற்புறு வேலைவி டுத்தரு  ளிளையோனே

சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை
சிக்கென வேதழு விப்புணர்  மணவாளா
செச்சையுலாவுபதத்தவ மெய்த்தவர்வாழ்வுபெறத்தரு
சித்தவி சாக வியற்சுரர்  பெருமாளே.

1207. முருகு லாவிய மைப்பாவு வார்குழல்
முளரி வாய்நெகிழ் வித்தார வேல்விழி
முடுகு வோர்குலை வித்தான கோடெனு  மலையாலே
முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல்
முடுகு வோரென எய்த்தோடி யாகமு
மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு  முயல்வேகொண்

டுருகு வார்சில சிற்றாம னோலய
முயிரு மாகமு மொத்தாசை யோடுள
முருகி தீமெழு கிட்டான தோவென  உரையாநண்
புலக வாவொழி வித்தார் மனோலய
முணர்வு நீடிய பொற்பாத சேவடி
யுலவு நீயெனை வைத்தாள் வேயருள்  தருவாயே

குருகு லாவிய நற்றாழி சூழ்நகர்
குமர னேமுனை வெற்பார் பராபரை
குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம்  வடிவேலா
குறவர் சீர்மக ளைத்தேடி வாடிய
குழையு நீள்கர வைத்தோடி யேயவர்
குடியி லேமயி லைக்கோடு சோதிய  வுரவோனே

மருகு மாமது ரைக்கூடல் மால்வரை
வளைவு ளாகிய நக்கீர ரோதிய
வளகை சேர்தமி ழுக்காக நீடிய  கரவோனே
மதிய மேவிய சுற்றாத வேணியர்
மகிழ நீநொடி யற்றான போதினில்
மயிலை நீடுல கைக்சூழ வேவிய  பெருமாளே.

1208. முலைமேலிற் கலிங்க மொன்றிட
முதல்வானிற் பிறந்த மின்பிறை
நுதல்மேல்முத் தரும்ப புந்தியில்  இதமார
முகநேசித் திலங்க வும்பல
வினைமூசிப் புரண்ட வண்கடல்
முரணோசைக் கமைந்த வன்சரம்  எனமூவா

மலர்போலச் சிவந்த செங்கணில்
மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம்
வழுவாமற் புனைந்து திண்கயம்  எனநாடி
வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு
மயலாகிப் பரந்து நின்செயல்
மருவாமற் கலங்கும் வஞ்சகம்  ஒழியாதோ

தொலையாநற் றவங்க ணின்றுனை
நிலையாகப் புகழ்ந்து கொண்டுள
அடியாருட் டுலங்கி நின்றருள்  துணைவேளே
துடிநேரொத் திலங்கு மென்கோடி
யிடைதோகைக் கிடைந்த வொண்டொடி
சுரர்வாழப் பிறந்த சுந்தரி  மணவாளா

மலைமாளப் பிறந்த செங்கையில்
வடிவேலைக் கொடந்த வஞ்சக
வடிவாகக் கரந்து வந்தமர்  பொருசூரன்
வலிமாளத் துரந்த வன்திறல்
முருகாமற் பொருந்து திண்புய
வடிவாமற் றநந்த மிந்திரர்  பெருமாளே.

1209. முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது
வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது
முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது  ப்ரபையான
முகமி ழந்தது நோக்குமி ருண்டது
இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது
மொழி தளர்ந்தது நாக்குவிழுந்தது  அறிவேபோய்

நினைவ யர்ந்தது நீட்டல்மு டங்கலும்
அவச மும்பல ஏக்கமு முந்தின
நெறிம றந்தது மூப்புமு திர்ந்தது  பலநோயும்
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
சலம லங்களின் நாற்றமெ ழுந்தது
நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி  தருள்வாயே

இனைய இந்திர னேற்றமு  மண்டர்கள்
தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை
யிடுமி டும்புள ராக்கதர் தங்களில்  வெகுகோடி
எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்நதவர்
தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட
இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை  யெறிவோனே

தினைவ னங்கிளி காத்தச வுந்தரி
அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து
செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு  மிளையோனே
திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர்
குமர கந்தப ராக்ரம செந்தமிழ்
தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய  பெருமாளே.

1210. மைக்குக்கைப் புக்கக் கயல்விழி
எற்றிக்கொட் டிட்டிச் சிலைமதன்
வர்க்கத்தைக் கற்பித் திடுதிற  மொழியாலே
மட்டிட்டுத் துட்டக் கெருவித
மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள
மச்சப்பொற் கட்டிற் செறிமல  ரணைமீதே

புக்குக்கைக் கொக்கப் புகுமொரு
அற்பச்சிற் றின்பத் தெரிவையர்
பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற  புலையேனைப்
பொற்பித்துக் கற்பித் துனதடி
அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய
புத்திக்குச் சித்தித் தருளுவ  தொருநாளே

திக்குக்குத் திக்குத் திகுதிகு
டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு
தித்தித்தித் தித்தித் திதியென  நடமாடும்
சித்தர்க்குச் சுத்தப் பரமநல்
முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள
சித்தர்க்குப் பத்தர்க் கருளிய  குருநாதா

ஒக்கத்தக் கிட்டுத் திரியசுரர்
முட்டக்கொட் டற்றுத் திரிபுர
மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு  எனவேக
உற்பித்துக் கற்பித் தமரரை
முற்பட்டக் கட்டச் சிறைவிடும்
ஒட்குக்டக் கொற்றக் கொடியுள  பெருமாளே.

1211. மோது மறலியொரு கோடி வேற்படை
கூடி முடுகியெம தாவி பாழ்த்திட
மோக முடையவெகு மாதர் கூட்டமும்  அயலாரும்
மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு
மோக வினையில்நெடு நாளின் மூத்தவர்  இளையோர்கள்

ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்
கூடி நடவுமிடு காடெ னாக்கடி
தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி   அறுபாவி
ஏழு புவனமிகு வான நாட்டவர்
சூழு முனிவர்கிளை தாமு மேத்திட
ஈச னருள்குமர வேத மார்த்தெழ  வருவாயே

சூது பொருதரும னாடு தோற்றிரு
ஆறு வருஷம்வன வாச மேற்றியல்
தோகை யுடனுமெவி ராட ராச்சியம்  உறைநாளிற்
சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி
ராளு முரிமைதரு மாறு கேட்டொரு
தூது செலஅடுவ லாண்மை தாக்குவன்  எனமீள

வாது சமர்திரு தரான ராட்டிர
ராஜ குமரர்துரி யோத னனாற்பிறர்
மாள நிருபரொடு சேனை தூட்பட  வரிசாப
வாகை விஜயனடல் வாசி பூட்டிய
தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம
மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப  பெருமாளே.

1212. வடிகட்டிய தேனென வாயினி
லுறுதுப்பன வூறலை யார்தர
வரைவிற்றிக ழூடலி லேதரு  மடவார்பால்
அடிபட்டலை பாவநிர் மூடனை
முகடித்தொழி லாமுன நீயுன
தடிமைத்தொழி லாகஎ நாளினில்  அருள்வாயோ

பொடிபட்டிட ராவணன் மாமுடி
சிதறச்சிலை வாளிக ளேகொடு
பொருளைக்கள மேவிய மாயவன்  மருகோனே
கொடுமைத்தொழி லாகிய கானவர்
மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு
குடிலிற்குற மானொடு மேவிய  பெருமாளே.

1213. வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள
முத்து வடத்தைக் கழுத்தி லிட்டுரு
மைக்கு வளைக்கட் குறிப்ப ழுத்திய  பொதுமாதர்
மட்டம ளிக்குட் டிருத்தி முத்தணி
மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை
வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி  இதழ்கோதிக்

கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு
பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு
கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுளம்  முயல்போதுங்
கைக்கு ளிசைத்துப் பிடித்த கட்கமும்
வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை
கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு  மறவேனே

கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம்
இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை
கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை  ஒருகோடிப்
குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும்
வெட்டி யழித்துக் கனக்க ளிப்பொடு
கொக்கரி யிட்டுத் தெரித்தடுப்பன  வொருகோடிப்

பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன
சச்சரி கொட்டிட் டடுக்கெ டுப்பன
பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன  வெகுபூதம்
பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம்
வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில்
பட்டற விட்டுத் துரத்தி வெட்டிய  பெருமாளே.

1214. வளைகர மாட்டி வேட்டி னிடை துயில் வாட்டி யீட்டி
வரிவிழி தீட்டி ஏட்டின்  மணம்வீசும்
மழைகுழல்காட்டிவேட்கை வளர்முலை காட்டிநோக்கின்
மயில்நடை காட்டி மூட்டி  மயலாகப்

புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து
புணர்முலை சேர்த்து வீக்கி  விளையாடும்
பொதுமட வார்க்குஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை
புலைகுண மோட்டி மாற்றி  யருள்வாயே

தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து
சுடரடி நீத்த லேத்து  மடியார்கள்
துணைவன்மை நோக்கி நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச்சொல்
சொலியமு தூட்டி யாட்டு  முருகோனே

இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை
யிமையவர் பாட்டை மீட்ட  குருநாதா
இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்கம்
இருவினை காட்டி மீட்ட  பெருமாளே.

1215. வாடையில் மதனைய ழைத்துற்று
வால்வளை கலகலெ னக்கற்றை
வார்குழல் சரியமு டித்திட்டு  துகிலாரும்
மால்கொள நெகிழவு டுத்திட்டு
நூபுர மிணையடி யைப்பற்றி
வாய்விட நுதல்மிசை பொட்டிட்டு  வருமாய

நாடக மகளிர்ந டிப்புற்ற
தோதக வலையில் கப்பட்டு
ஞாலமு முழுதுமி கப்பித்தன்  எனுமாறு
நாணமு மரபுமொ ழுக்கற்று
நீதியு மறிவும றக்கெட்டு
நாயடி மையுமடி மைப்பட்டு  விடலாமோ

ஆடிய மயிலினை யொப்புற்று
பீலியு மிலையுமு டுத்திட்டு
ஆரினு மழகுமி கப்பெற்று  யவனாளும்
ஆகிய இதண்மிசை யுற்றிட்டு
மானின மருளவி ழித்திட்டு
ஆயுத கவணொரு கைச்சுற்றி  விளையாடும்

வேடுவர் சிறுமியொ ருத்திக்கு
யான்வழி யடிமையெ னச்செப்பி
வீறுள அடியிணை யைப்பற்றி  பலகாலும்
வேதமு மமரரு மெய்ச்சக்ர
வாளமு மறியவி லைப்பட்டு
மேருவில் மிகவுமெ ழுத்திட்ட  பெருமாளே.

1216. விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு
விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை
மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி  வகையராம்
விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர
விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை
விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய  அலர்மேவும்

இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவச
மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள
மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய  அநுராகத்
திடைமுழுகி யென துமன தழியு நாட்களினு
மிருசரண இயலும்வினை எறியும் வேற்கரமும்
எழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை  தரவேணும்

அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற
அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட
அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமும்  அகலாது
அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு
மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ
அருணரண முகவயிர வர்களு மார்ப் பரவம்  இடநாளும்

பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய
பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய
பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு  மயில்வீரா
படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய
பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு
பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல  பெருமாளே.

1217. வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்கள்
ஆமிக்க கண்க ளென்றும்  இருதோளை
வேயொக்கு மென்று கொங்கை மேல்வெற்ப தென்று கொண்டை
மேகத்தை வென்ற தென்றும்  எழில்மாதர்

கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்
கூடத்தில் நின்று நின்று  குறியாதே
கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு
கூர்கைக்கு வந்து சிந்தை  குறுகாதோ

ஞாலத்தை அன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று
நாடத்தி முன்பு வந்த  திருமாலும்
நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து
நாகத்த லம்கு லுங்க  விடும்வேலா

ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட
ராகத்தில் மங்கை பங்கர்  நடமாடும்
ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர்
ஆபத்தி லஞ்ச லென்ற  பெருமாளே.

1218. அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்பழிக்க
அபராதம் வந்துகெட்ட  பிணிமூடி
அனைவோரும் வந்துசிச்சி யெனநால்வ ருஞ்சிரிக்க
அனலோட ழன்றுசெத்து  விடுமாபோற்

கடையேன்ம லங்கள்முற்று மிருநோயு டன்பிடித்த
கலியோடி றந்துசுத்த  வெளியாகிக்
களிகூர என்றனுக்கு மயிலேறி வந்துமுத்தி
கதியேற அன்புவைத்துன்  அருள்தாராய்

சடைமீது கங்கைவைத்து விடையேறு மெந்தைசுத்த
தழல்மேனி யன்சிரித்தொர்  புரமூணும்
தவிடாக வந்தெதிர்த்த மதனாக முஞ்சிதைத்த
தழல்பார்வை அன்றளித்த  குருநாதா

மிடிதீர அண்டருக்கு மயிலேறி வஞ்சர்கொட்டம்
வெளியாக வந்துநிர்த்தம்  அருள்வோனே
மின்னூல்ம ருங்குல்பொற்பு முலைமாதி ளங்குறத்தி
மிகுமாலொ டன்புவைத்த  பெருமாளே.

1219. அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறிது
அழியுமுன் வீட்டுமு  னுயர்பாடை
அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
யழுகையை மாற்றுமி  னொதியாமுன்

எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
இடைகொடு போய்த்தமர்  சுடுநாளில்
எயினர்கு லோத்தமி யுடன்மயில் மேற்கடி
தெனதுயிர் காத்திட  வரவேணும்

மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
மதகரி கூப்பிட  வளையூதி
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
மகிபதி போற்றிடு  மருகோனே

படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
பரவையி லார்ப்பெழ  விடும்வேலால்
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
பதிகுடி யேற்றிய  பெருமாளே.

1220. அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகை  மிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிஅ
னைத்துரு வாய காயம  தடைவேகொண்டு

இப்படியோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரி  தருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழிஇ
னிப்பிற வாது நீயருள்  புரிவாயே

கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
கற்புடை மாது தோய்தரும்  அபிராம
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
கற்பக லோக தாரண  கிரிசால

விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு நீப மாலையும்  அணிவோனே
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
அக்ரம வேலை யேவிய  பெருமாளே.

1221. அயில்வி லோசனங் குவிய வாசகம்
பதற ஆனனங்  குறுவேர்வுற்று
அளக பாரமுங் குலைய மேல்விழுந்
ததர பானமுண்டு  இயல்மாதர்

சயில பாரகுங் குமப யோதரம்
தழுவு மாதரம்  தமியேனால்
தவிரொ ணாதுநின் கருணை கூர்தரும்
தருண பாதமும்  தரவேணும்

கயிலை யாளியுங் குலிச பாணியுங்
கமல யோனியும்  புயகேசன்
கணப ணாமுகங் கிழிய மோதுவெங்
கருட வாகனம்  தனிலேறும்

புயலி லேகரும் பரவ வானிலும்
புணரி மீதினுங்  கிரிமீதும்
பொருநி சாசரன் தனது மார்பினும்
புதைய வேல்விடும்  பெருமாளே.

1222. அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார்
பசைத்து உவக்குமா  லிளைஞோரை
அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ
தணைத்து மெத்தமால்  அதுகூர

உருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா
வுலற்றி யுட்குநா  ணுடன்மேவி
உழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா
லுறக்கு ணத்ததாள்  அருள்வாயே

சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா
தொருத்தர் மிக்கமா  நடமாடுஞ்
சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர்
சுரக்க வித்தைதா  னருள்வோனே

பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல்
பிடித்து குற்றமார்  ஒருசூரன்
பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர்
பிழைக்க விட்டவோர்  பெருமாளே.

1223. அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத்
தடர்ந்து மேற்றெறித்  தமராடும்
அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத்
தரம்பை மார்க்கடைக்  கலமாகிக்

குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித்
தெழுந்து கூற்றெனக்  கொலைசூழுங்
குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக்
குணங்க ளாக்கிநற்  கழல்சேராய்

பொருந்தி டார்ப்புரத் திலங்கை தீப்படக்
குரங்கி னாற்படைத்  தொருதேரிற்
புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக்
கிரங்கி ஆற்புறத்  தலைமேவிப்

பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப்
பிறங்க வேத்தியக்  குறுமாசூர்
பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப்
பிளந்த வேற்கரப்  பெருமாளே.

1224. அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற்கு
அறுமுக நித்தர்போற்  றியநாதா
அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த்
தணிதரு முத்திவீட்  டணுகாதே

பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப்
பரிவொடு தத்தைமார்க்  கிதமாடும்
பகடிது டுக்கன்வாய்க் கறையென னத்தராப்
படியில்ம னித்தர் தூற்  றிடலாமோ

குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க்
கொடியஅ ரக்கரார்ப்  பெழவேதக்
குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற்
குடுமியை நெட்டைபோக்  கியவீரா

கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க்
கழுநிரை முட்டஏற்  றியதாளக்
கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக்
கருணையு மொப்பிலாப்  பெருமாளே.

1225. அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து
அணுகி யாக மும்மு யங்கி  யமுதூறல்
அதர பான மும்நு கர்ந்து அறிவுசோர வும்மொழிந்து
அவச மாக வும்பு ணர்ந்து  மடவாரைப்

பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து
பகலி ராவை யம்ம றந்து  திரியாமற்
பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து
பகரு மாறு செம்ப தங்கள்  தரவேணும்

துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து
தொழுது தேட ரும்ப்ர சண்டன்  அருள்பாலா
சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாமணம் புணர்ந்து
சுடரு மோக னம்மி குந்த  மயில்பாகா

களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து
கலவி நாட கம்பொ ருந்தி  மகிழ்வோனே
கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்து
கருது வார்ம னம்பு குந்த  பெருமாளே. 

1226. ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுணன்
ஆகாத நீச னநுசிதன்  விபரீதன்
ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
னாகாச நீர்ம ணனல்வளி  உருமாறி

மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி யிவனென  நினையாமல்
மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
மாஞான போத மருள்செய  நினைவாயே

வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசிகெட  அறைகூறி
மேகார வார மெனஅதிர் போர்மோது தான ரெமபுர
மீதேற வேல்கொ டமர்செயும்  இளையோனே

கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
கூறாம னீய அவனுகர்  தருசேடங்
கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
கோலாக நாத குறமகள்  பெருமாளே.

1227. ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து  நடுவேஅன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி  யொருஞான

வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி  அளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தில்  அணிவேனோ

மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி  தனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின்  மயில்வாழ்வா

வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து  வருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட  பெருமாளே.

1228. ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரும்
ஆடைப் பணத்தையெடெ  னுறவாடி
ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி
யாடக் குலத்துமயில்  கிளிபோலப்

பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி
பேதைப் படுத்திமயல்  இடுமாதர்
பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை
பீடைப் படுத்துமயல்  ஒழியாதோ

தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி
சேடற் பிடித்துதறு  மயில்வீரா
தேடித் துதித்தஅடி யார்சித்த முற்றருளு
சீர்பொற் பதத்தஅரி  மருகோனே

நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு
நீசற் கனத்தமுற  விடுவேலா
நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி
நீர்பொற் புவிக்குள்மகிழ்  பெருமாளே

1229. ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்
ஆவி சோர உருக்கிகள்  தெருமீதே
யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர்
ஆல கால விழிச்சிகள்  மலைபோலு

மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர்
வாரி யோதி முடிப்பவர் ஒழியாமல்
வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள்
வாசல் தேடி நடப்பது  தவிர்வேனோ

ஓசை யான திரைக்கடல் ஏழு ஞாலமு முற்றருள்
ஈச ரோடுற வுற்றவள்  உமையாயி
யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி யுத்தமி
ஓல மான மறைச்சிசொல்  அபிராமி

ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோன்மணி சற்குணி
ஈறி லாதம லைக்கொடி  அருள்பாலா
ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும்
ஈச னோடு ப்ரியப்படு  பெருமாளே.

1230. ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு
தாக மாய்க்க முறைமுறை  பறைமோதி
ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம
யான மேற்றி யுறவினை  ரயலாகக்

கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்
காவ லாக்கி யுயிரது  கொடுபோமுன்
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை
காத லாற்க ருதுமுணர்   தருவாயே

வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
வியாழ கோத்ர மருவிய  முருகோனே
வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை
வேட மாற்றி வழிபடு  மிளையோனே

ஞால மேத்தி வழிபடும் ஆறு பேர்க்கு மகவென
நாணல் பூத்த படுகையில்  வருவோனே
நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ
ஞான வார்த்தை யருளிய  பெருமாளே.

1231. ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த
ஆரவட மேலிட்ட  முலைமீதே
ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க
ஆமவரை யேசற்று  முரையாதே

வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று
வீறுமுன தார்பத்ம  முகமாறு
மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க
மேதகவு நானித்தம்  உரையோனே

நாலுமுக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு
நாடவரி யார்பெற்ற  வொருபாலா
நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க
நாடுகுயில் பார்மிக்க  எழில்மாது

வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த
வேழமுக வோனுக்கு  மிளையோனே
வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து
வேலைமிக வேவிட்ட  பெருமாளே.

1232. இடையித்தனை உளதத்தைய
ரிதழ்துய்த்தவர்  அநுபோகம்
இளகிக்கரை புரளப்புள
கிதகற்புர  தனபாரம்

உடன்மற்கடை படுதுற்குண
மறநிற்குண  உணர்வாலே
ஒருநிஷ்கள வடிவிற்புக
ஒருசற்றருள்  புரிவாயே

திடமற்றொளிர் நளினப்ரம
சிறைபுக்கனன்  எனவேகுந்
தெதிபட்சண க்ருதபட்சண
செகபட்சணன்  எனவோதும்

விடபட்சணர் திருமைத்துனன்
வெருவச்சுரர் பகைமேல்வேல்
விடுவிக்ரம கிரியெட்டையும்
விழவெட்டிய  பெருமாளே.

1233. இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி
னிடமது லாவி மீள்வன  நுதல்தாவி
இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென
எறிவன காள கூடமும்  அமுதாகக்

கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு
கலவியில் மூழ்கி வாடிய  தமியேனும்
கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை
கசடற வேறு வேறுசெய்  தருள்வாயே

ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு
முததியில் வீழ வானரம்  உடனேசென்
றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர்
உணருப தேச தேசிக  வரையேனல்

பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி
பரிபுர பாத சேகர  சுரராஜன்
பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன
பரவச ஞான யோகிகள்  பெருமாளே.

1234. இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
யினிதாவ ழைத்தெனது  முடிமேலே
இணைதாள ளித்துனது மயல்மேலி ருத்தியொளிர்
இயல்வேல ளித்துமகி  ழிருவோரும்

ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு
மொளிர்வேத கற்பகநல்  இளையோனே
ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள
உபதேசி கப்பதமு  மருள்வாயே

கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு
கரிமாமு கக்கடவுள்  அடியார்கள்
கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்
கருணாக டப்பமலர்  அணிவோனே

திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை
திகழ்மார்பு றத்தழுவும்  அயில்வேலா
சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்
சிறைமீள விட்டபுகழ்  பெருமாளே.

1235. இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்
கிணியிலகு தண்டையம்  புண்டரீகம்
எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந்
திரவுபகல் சந்ததஞ்  சிந்தியாதோ

உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின்று
உளையுமொரு வஞ்சகன்  பஞ்சபூத
உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந்து
உழலுமது துன்புகண்  டன்புறாதோ

கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங்
கடவிகட குஞ்சரம்  தங்கும்யானை
கடகசயி லம்பெறும் படிஅவுணர் துஞ்சமுன்
கனககிரி சம்பெழுந்து  அம்புராசி

அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென்
றரனுமுமை யும்புகழ்ந்  தன்புகூர
அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின்
றரிபிரமர் கும்பிடுந்  தம்பிரானே.

1236. ஊனே றெலும்பு சீசீ மலங்க
ளோடே நரம்பு  கசுமாலம்
ஊழ்நோ யடைந்து மாசான மண்டு
மூனே டுழன்ற  கடைநாயேன்

நானா ரொடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து  உனையோத
நானார் இரங்க நானார் உணங்க
நானார் நடந்து  விழநானர்

தானே புணர்ந்து தானே யறிந்து
தானே மகிழ்ந்து  அருளூறித்
தாய்போல் பரிந்த தேனோ டுகந்து
தானே தழைந்து  சிவமாகித்

தானே வளர்ந்து தானே யிருந்த
தார்வேணி யெந்தை  யருள்பாலா
சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
சாரூப தொண்டர்  பெருமாளே.

1237. எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு
திட்டுக்ரி யைக்கேயே  ழுந்துபாரின்
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை
யெட்டெட்டு மெட்டாத  மந்த்ரவாளால்

விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை
வெட்டித் துணித்தாண்மை  கொண்டுநீபம்
விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற
வெட்சித் திருத்தாள்வ  ணங்குவேனோ

திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்
செக்கச் செவத்தேறு   செங்கைவேலா
சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப
சித்ரக் ககத்தேறு  மெம்பிரானே

முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன
முட்டச் செலுத்தாறி  ரண்டுதேரர்
மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு
முப்பத்து முத்தேவர்  தம்பிரானே.

1238. எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்
திரண்டுகண் பட்டிட்  டிளையோர்நெஞ்
சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்
டிணங்குபொன் செப்புத்  தனமாதர்

அழுங்கல்அங் கத்துக் குழைந்துமன் பற்றுற்
றணைந்துபின் பற்றற்  றகல்மாயத்
தழுங்குநெஞ் சுற்றப் புழுங்குபுண் பட்டிட்
டலைந்தலைந் தெய்த்திட்  டுழல்வேனோ

பழம்பெருங் தித்திப் புறும் கரும்பு அப்பத்
துடன்பெருங் கைக்குட்  படவாரிப்
பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க்
கிதஞ்செய்தொன் றத்திக்  கிளையோனே

தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச்
சலம்பிளந் தெற்றிப்  பொருசூரத்
தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்
தடிந்திடுஞ் சொக்கப்  பெருமாளே.

1239. ஏட்டி லேவரை பாட்டி லேசில
நீட்டி லேயினி  தென்றதேடி
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
லேற்ற மானகு  லங்கள்பேசிக்

காட்டி லேவியல் நாட்டி லேபயில்
வீட்டி லேஉல  கங்களேசக்
காக்கை நாய்நரி பேய்க்கு ழாம்உண
யாக்கை மாய்வதொ  ழிந்திடாதோ

கோட்டு மாயிர நாட்ட னாடுறை
கோட்டு வாலிப  மங்கைகோவே
கோத்த வேலையி லார்த்த சூர்பொரு
வேல்சி காவள  கொங்கில்வேளே

பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர்குற  மங்கைபாகா
பூத்த மாமலர் சாத்தி யேகழல்
போற்று தேவர்கள்  தம்பிரானே.

1240. கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட
கத்திற் கோட்டு  கிரியாலங்
கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க
யற்கட் கூற்றில்  மயலாகி

அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட
வர்க்குத் தூர்த்தன்  எனநாளும்
அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க
றப்பித் தாய்த்தி  ரியலாமோ

பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த
பத்மக் கூட்டில்  உறைவோரி
பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்
பத்தக் கூட்டர்  இயல்வானம்

மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று
வெட்கக் கோத்த  கடல்மீதே
மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
வெட்டிச் சாய்த்த  பெருமாளே.

1241. கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை
கவரினுந் துவரதரம்  இருதோள்பைங்
கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல
களவுகொண் டொருவர்மிசை  கவிபாடி

அடல்அசஞ் சலன்அதுல னநுபமன் குணதரன்மெய்
அருள்பரங் குரனபய  னெஆசித்
தலமரும் பிறிவியினி அலமலம் பிறவியற
அருணபங் பயசரணம்  அருள்வாயே

வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி
மகிதலம் புகவழியு  மதுபோல
மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி
வழிவிடும் படிபெருகு  முதுபாகை

உடையசங் க்ரமகவள தவளசிந் துரதிலகன்
உலகுமிந் திரனுநிலை  பெறவேல்கொண்டு
உததிவெங் தபயமிட மலையொடுங் கொலையவுண
ருடனுடன் றமர்பொருத  பெருமாளே.

1242. கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்
கட்டிப் புறத்தில்  அணைமீதே
கக்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்திஎரி
கத்திக் கொளுத்தி  அனைவோரும்

சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது
கத்திக் கொளுத்தி  யனைவோரும்
துக்கப் பிறப்பபகல மிக்கச் சிவத்ததொரு
சொர்க்கப் பதத்தை  அருள்வாயே

எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர்
எய்ப்புத் தணித்த  கதிர்வேலா
எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை
எற்பொற் புயத்தில்  அணைவோனே

வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர்
வைத்துப் பணைத்த  மணிமார்பா
வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை
வெட்டித் துணித்த  பெருமாளே.

1243. கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்
கண்கள் சேல்மதி  முகம்வேய்தோள்
கண்டு பாவனை கொண்டு தோள்களி
லொண்டு காதலில்  இருகோடு

மண்டி மார்பினில் விண்ட தாமென
வந்த கூர்முலை  மடவார்தம்
வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி
கின்ற மாயமது  ஒழியாதோ

கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி
கொண்டு கோகில   மொழிகூறும்
கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு
குன்றில் மால்கொடு  செலும்வேலா

வெண்டி மாமன மண்டு சூர்கடல்
வெம்ப மேதினி  தனில்மீளா
வென்று யாவையு மன்றி வேளையும்
வென்று மேவிய  பெருமாளே.

1244. கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
கட்பயி லிட்டிள  வளவோரைக்
கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு
கத்தைமி னுக்கிவ  ருமுபாயப்

பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்
பற்றென உற்றவொர்  தமியேனைப்
பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை
பட்டதெ னக்கினி  யமையாதோ

குப்பர வப்படு பட்சமி குத்துள
முத்தரை யர்க்கொரு  மகவாகிக்
குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்
குற்றம றுத்திடு  முதல்வோனே

விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி
சித்ரத னக்கிரி  மிசைதோயும்
விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு
வெற்பைநெ ருக்கிய  பெருமாளே.

1245. கலைகோட்டு வல்லி விலைகாட்டு வல்ல
ரிவைமார்க்கு மெய்யி  லவநூலின்
கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல
கடுகாட்டி வெய்ய  அதிபாரக்

கொலைகோட்டு கள்ளிட றிவோர்க்கு முள்ள
முகையாக்கை நையும்  உயிர்வாழக்
கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை
மறைவாழ்த்து செய்ய  கழல்தாராய்

சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை
முலைவேட்ட பிள்ளை  முருகோனே
திணிகோட்டு வெள்ளி டவனாட்டி லுள்ள
சிறைமீட்ட தில்ல மயில்வீரா

அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள
மலைவீழ்த்த வல்ல  அயில்மோகா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல  பெருமாளே.

1246. களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர
களப துங்க வித்தார  முலைமீதே
கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு
கவிதெ ரிந்து கற்பார்கள்  சிலர்தாமே

உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான
உனையு ணர்ந்து கத்தூரி  மணநாறும்
உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி
யுருகி நெஞ்சு சற்றோதி  லிழிவாமோ

அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ரீவ
அரசு டன்க டற்றூளி  யெழவேபோய்
அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ரீவ
மறவொ ரம்பு தொட்டார்த  மருகோனே

வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை
வனசர் கொம்பி னைத்தேடி  யொருவேட
வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்
மறவர் குன்றி னிற்போன  பெருமாளே.

1247. கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய
கல்விவீ றற்ககரிய  மணமாகும்
கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய
மெய்கள்தோ ணிப்பிறவி  அலைவேலை

மெள்ளஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண
முல்லைவே ருற்பலமு  ளரிநீபம்
வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது
சொல்லையோ திப்பணிவ  தொருநாளே

துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு
வள்ளிமா னுக்குமயல்  மொழிவோனே
தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன்
எல்லைகா ணற்கரியர்  குருநாதா

தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள்
செல்வனே முத்தமிழர்  பெருவாழ்வே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய  பெருமாளே.

1248. கன்னியர் கடுவிட மன்னிய கயலன
கண்ணிலு மிருகன  தனமீதுங்
கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி
மென்மைகொ ளுருவிலும்  மயலாகி

இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி
லிந்நிலை பெறவிவண்  உதியாதே
எண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை
யென்னையும் வழிபட  விடவேணும்

பொன்னவ மணிபயில் மன்னவ புனமற
மின்முலை தழுவிய  புயவீரா
புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்
எண்மலை யொடுபொரு  கதிர்வேலா

தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
இன்னிசை யுறுதமிழ்  தெரிவோனே
தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
சண்முக அழகிய  பெருமாளே.

1249. கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த
கொண்டையள்பு னக்கொ டிச்சி  யதிபாரக்
கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி
கிங்கரனெ னப்படைத்த  பெயர்பேசா

நெஞ்சுருகி நெக்குநெக்கு நின்றுதொழு நிர்குணத்தர்
நிந்தனையில் பத்தர்வெட்சி  மலர்தூவும்
நின்பதயு கப்ரசித்தி யென்பனவ குத்துரைக்க
நின்பணித மிழ்த்ரயத்தை  அருள்வாயே

கஞ்சன்வர விட்டதுட்ட குஞ்சரம ருப்பொசித்த
கங்கனும தித்திகைக்க  மதம்வீசும்
கந்தெறிக ளிற்றுரித்து வென்றுதிரு நட்டமிட்ட
கம்பனும திக்கவுக்ர  வடிவேல்கொண்

டஞ்சியஜ கத்ரயத்தை யஞ்சலென விக்ரமித்து
அன்பர்புக ழப்பொருப்பொ  டமராடி
அன்றவுண ரைக்களத்தில் வென்றுததி யைக்கலக்கி
அண்டர்சிறை வெட்டிவிட்ட  பெருமாளே.

1250. குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும்
குலமுமிறு மாப்புமி  குதியான
கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ
குருடுபடு மோட்டென  உடல்வீழில்

அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ
அரிடசுடு காட்டிடை  யிடுகாயம்
அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத
அருணசர ணாஸ்பதம்  அருள்வாயே

அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்செனு
அலறிவிழ வேர்க்குல  மொடுசாய
அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ
அயிலலகு சேப்பெழ  மறைநாலும்

உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட
உயரமரர் மேற்பட  வடியாத
உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன்
உலகுகுடி யேற்றிய  பெருமாளே.

1251. குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற
குடிலி லொன்றி நிற்கும்  உயிர்மாயம்
குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப
கொடிய கொண்ட லொத்த  உருவாகி

மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து
மரண மென்ற துக்கம்  அணுகாமுன்
மனமி டைஞ்ச லற்று னடிநினைந்து நிற்க
மயிலில் வந்து முத்தி  தரவேணும்

அறுகு மிந்து மத்த மலையெ றிந்த அப்பு
மளிசி றந்த புட்ப  மதுசூடி
அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு
அரிய இன்சொல் செப்பு  முருகோனே

சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த
சிறுமி தன்த னத்தை  அணைமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட  பெருமாளே.

1252. கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த
கோடு தலைகு லைத்த  முலையாலே
கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த
நீடி யகுவ ளைக்கண்  மடமானார்

ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து
மீள விதழ்க டிப்பது  அறியாதே
ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த
சேலில் பரித விப்பது  இனியேனோ

மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு
சாவி யதுவொ ரர்த்த  மொழிவோனே
வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில்
வாழ்வு பெறுகு றத்தி  மணவாளா

வேக வுரக ரத்ந நாக சயன சக்ர
மேவி மரக தத்தின்  மருகோனே
வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி
வேலை உருவ விட்ட  பெருமாளே.

1253. சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
தண்கொங்கை வஞ்சி  மனையாளும்
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
தங்கும் பதங்க  ளிளைஞோரும்

எந்தம் தனங்க னென்றென்று நெஞ்சி
லென்றும் புகழ்ந்து  மிகவாழும்
இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
இன்றுன் பதங்கள்  தரவேணும்

கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
கொண்டங்கு இலறிஞ்சி  யுறைவோனே
கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த
குன்றம் பிளந்த  கதிர்வேலா

ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்ப
ரங்கம் பொருந்து  மழகோனே
அண்டந் தலங்க ளெங்குங் கலங்க
அன்றஞ்ச லென்ற  பெருமாளே.

1254. சலமல மசுத்த மிக்க தசைகுருதி யத்தி மொய்த்த
தடியுடல் தனக்கு ளுற்று  மிகுமாயம்
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
தனிலுரு மிகுத்து மக்க  ளொடுதாரம்

கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
கருவழி அவத்தி லுற்று  மகிழ்வாகிக்
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்ற
கடுவினை தனக்குள் நிற்ப  தொழியாதோ

மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
மழுவனல் கரத்துள் வைத்து  மருவார்கள்
மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
மறைதொழ நகைத்த அத்தர்  பெருவாழ்வே

பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
படையது பொருப்பில் விட்ட  முருகோனே
பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
பலருய அருட்கண் வைத்த  பெருமாளே.

1255. சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
தாண்டவ மாடியவர்  வடிவான
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
தாங்களு ஞானமுற  அடியேனும்

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடு  சிவயோகம்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
சோம்பினில் வாழும்வகை  அருளாயோ

வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்
வான்பொழில் சூழும்வய  லயலேறி
மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்
மாந்திய வாரணிய  மலைமீதில்

பூங்கொடி மாதினுட னாங்குற வாடியிருள்
பூண்பன பாரியன  தனபாரப்
பூங்குற மாதினுட னாங்குற வாடியிருள்
பூம்பொழில் மேவிவளர்  பெருமாளே.

1256. சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
சிவபோக மன்பருக  அறியாமல்
செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது
திகழ்மாதர் பின்செருமி  அழிவேனோ

தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
தயவாய்ம கிழ்ந்துதினம்  விளையாடத்
தமியேன்ம லங்களிரு வினைதோயி டிந்தலற
ததிநாளும் வந்ததென்முன்  வரவேணும்

உவகாரி யன்பர்பணி கலியாணி எந்தையிட
முறைநாய கங்கவுரி  சிவகாமி
ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை
யொருநாள்ப கிர்ந்தஉமை  அருள்பாலா

அவமேபி றந்தஎனை இறவாம லன்பர்புகும்
அமுதால யம்பதவி   அருள்வோனே
அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்
அயிலாபு கழ்ந்தவர்கள்  பெருமாளே.

1257. சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு
சேவித்து மாசை கொண்டும்  உழல்வேனைச்
சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு
சீரற்று வாழு மின்பம்  நலியாதே

ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று
மாருக்கு மேவி ளம்ப  அறியாதே
ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம்
ஆவிக்கு ளேது லங்கி  அருள்வாயே

மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம்
வாய்விட்டு மாதி ரங்கள்  பிளவாக
வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும்
வான்முட்ட வீறு செம்பொன்  வரையோடு

கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த
கோதற்ற வேடர் தங்கள்  புனம்வாழுங்
கோலப்பெண் வாகுகண்டு மாலுற்று வேளை கொண்டு
கூடிக்கு லாவு மண்டர்  பெருமாளே.

1258. சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
தூசுவழ கானவடி  வதனாலே
சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு
ளாசைதமி லேசுழல  வருகாலன்

ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென
தாவிதனை யேகுறுகி  வருபோது
ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு
மாதிமுரு காநினைவு  தருவாயே

ஓதமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர்
ஓலமிட வேயயில்கொ  டமராடீ
ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்
யோகமயி லாவமலை  மகிழ்பாலா

நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன
நாடிமடி யார்கள்மன  துறைவோனே
ஞானசுர வானைகண வாமுருக னேயமரர்
நாடுபெற வாழவருள்  பெருமாளே.

1259. செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
சிறந்தியாதி லூமாசை  ஒழியாத
திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி
செயுங்காய நோயாளன்  நரகேழில்

விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி
விடுங்கால மேநாயென்  வினைபாவம்
விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான
விளம்போசை யேபேசி  வரவேணும்

அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி
அழன்றேகி மாசீத  நெடுவேலை
அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர
அலங்கார வேலேவு  முருகோனே

கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு
குருந்தேறு மால்மாயன்  மருகோனே
குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு
குணங்கூடி யேவாழு  பெருமாளே.

1260. தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
தக்க மனையினமு  மனைவாழ்வுந்
தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு
தைக்கு மயல்நினைவு  குறுகாமுன்

பத்தி யுடனுருகி நித்த முனதடிகள்
பற்று மருள்நினைவு  தருவாயே
பத்து முடியுருளு வித்த பகழியினர்
பச்சை நிறமுகிலின்  மருகோனே

அத்தி முகவனழ குற்ற பெழைவயிர
னப்ப மவரைபொரி  அவல்தேனும்
அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட
விக்குள் மறமகளை  யணைவோனே

முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு
முற்று மறைமொழியை  மொழிவோனே
முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல்
வெட்டி யமர்பொருத  பெருமாளே.

1261. தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்
தவறுதரு காமமுங்  கனல்போலுந்
தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமும்
சமயவெகு ரூபமும்  பிறிதேதும் 

அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண்
டறியுமொரு காரணம்  தனைநாடா
ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்
றபரிமித மாய்விளம்  புவதோதான்

கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமும்
களபமொழி யாதகொங்  கையுமாகிக்
கவருமவ தாரமுங் கொடியபரி தாபமும்
கருதியிது வேளையென்  றுகிராத

குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங்
குலிசகர வாசவன்  திருநாடு
குடிபுகநி சாசரன் பொடிபட மகீதரன்
குலையநெடு வேல்விடும்  பெருமாளே.

1262. தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத்
தருமிகள் கருமிகள் பெகுவித சமயிக ளவரொடு சருவாநின்
றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது எனுமாறற்
றருஉரு வொழி தரு வுருவுடை யதுபதி தமியனு முணர்வேனோ

குவலய முழுவது மதிர்பட வடகுவ டிடிபட உரகேசன்
கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் வறிதாகத்
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி சரர்சேனை
துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.

1263. திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்
த்ரிவிதக டாக்களிற் றுரகோடு
சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற்
சுரர்குடி யேற்றிவிட் டிளநீரை

மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப்
பிணைமுலை மாத்தவக் கொடிபோலவார்
வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற்
றெனையுனை வாழ்த்தவைத் தருள்வாயே

சததள பார்த்திபற் கரிபுரு ÷ஷாத்தமற்
கெரிகன லேற்றவற் குணராதோர்
சகலச மார்த்தசத் தியவன சூட்சமுக்
கியபர மார்த்தமுற் புகல்ரோனே

கதிர்மமணி நீர்க்கடற் சுõழுகு ராக்ஷதக்
கலகப ராக்ரமக் கதிர்வேலா
கருதிய பாட்டினிற் றலைதெரி மாக்ஷணக்
கவிஞரு சாத்துணைப் பெருமாளே

1264. திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய
சிவகங்கை தனில்முழுகி விளையாடிச்
சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென
திகழண்டர் முனிவர்கணம் அயன்மாலும்

அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ
அடியென்க ணளிபரவ மயிலேறி
அயில்கொண்டு திருநடன மெனதந்தை யடன்மருவி
அருமந்த பொருளையினி அருள்வாயே

பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி
பரிதுஞ்ச வருமதுரை நடராஜன்
பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ
பவளஞ்சொ லுமைகொழுநன் அருள்பாலா

இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு
மெரியுண்டு பொடிய அயில் விடுவோனே
எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ
டெணுபஞ்ச ணையின்மருவு பெருமாளே.

1265. தீயூதை தாத்ரி பானீய மேற்ற
வானீதி யாற்றி கழுமாசைச்
சேறூறு தோற்பை யானாக நோக்கு
மாமாயை தீர்க்க அறியாதே

பேய்பூத மூத்த பாறோரி காக்கை
பீறாஇ ழாத்தின் உடல்பேணிப்
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
போமாறு பேர்த்துன் அடிதாராய்

வேயூரு சீர்க்கை வேல்வேடர் காட்டி
லேய்வாளை வேட்க உருமாறி
மீளாது வேட்கை மீதூர வாய்த்த
வேலோடு வேய்த்த இளையோனே

மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
மாமேரு வேர்ப்ப றியமோதி
மாறான மாக்கள் நீறாக ஓட்டி
வானாடு காத்த பெருமாளே.

1266. துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர்
சுழற்கொரு கொடிக்கொடி எதிர்கூறித்
துகைப்பன கிதத்தலை யறுப்பான யில்விட்டுடல்
துணிப்பன கணித்தலை மிசைபார

முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்பட
முறைப்படு மறைத்திரள் அறியாத
முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொரு
மொழிப்பொருள் பழிப்பற அருள்வாயே

குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன
கொழுத்தகு ருதிக்கடல் இடையூடே
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
குவட்டினை யிடிப்பன சிலபாடல்

படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பன
பயிற்றிய லகைக்குலம் விளையாடப்
பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு தினிற்பொடி
படப்பொரு துழக்கிய பெருமாளே.

1267. துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளம்
சுக்கி லக்க லாமிர்தப் பிறைசூதம்
சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை ஏடலஞ்
சுத்த சொற்ப கீரதித் திரைநீலம்

புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும்
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
புற்பு தப்பி ராணனுக் கருள்வாயே

பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்
பக்க மிட்டு லாவியச்  சுரர்மாளப்
பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்
பத்ம சிட்ட னோடமுத் தெறிமீனக்

கைத்த லைப்ர வாகையும் தத்த ளிக்க மாமுறிந்
துட்க முத்து வாரணச் சதகோடி
கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்
கைப்பி டித்த சேவகப் பெருமாளே.

1268. தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை
தெரிவ தற்கு உள்ளம் உணராமுன்
சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய
சிலுகு தைத்து வன்மை சிதையாமுன்

பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு
பரம னுக்கு நல்ல மருகோனே
பழுதில் நிற்சொல் சொல்லி எழுதி நித்த முண்மை
பகர்வ தற்கு நன்மை தருவாயே

இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னும்
இடியு மொய்த்த தென்ன எழுசூரை
எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணுள்
இமைய வர்க்கு வன்மை தருவோனே

அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய
ரறிய மிக்க வுண்மை யருள்வோனே
அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல
அடிய வர்க்கு நல்ல பெருமாளே.

1269. தென்றலு மன்றி யின்றலை பொங்கு
திண்கட லொன்று மிகமோதச்
செந்தழ லென்று வெந்தழல் சிந்து
திங்களும் வந்து துணைஏய

அன்றிலு மன்றி துன்றுச ரங்க
ளைந்துமெ னெஞ்சம் அழியாதே
அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச
அன்பொட லங்கல் தரவேணும்

வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி
விஞ்சிய கொங்கை புணர்மார்பா
வெண்டர ளங்கள் தண்டைச தங்கை
மின்கொடி லங்கு கழலோனே

கொன்றைய ணிந்த சங்கர ரன்று
கும்பிட வந்த குமரேசா
குன்றிய அண்ட ரன்றுய வென்று
குன்றமெ றிந்த பெருமாளே.

1270. தோரண கனக வாசலில் முழவு
தோல்முர சதிர முதிராத
தோகையர் கவரி வீசவ யிரியர்
தோள்வலி புகழ மதகோப

வாரண ரதப தாகினி துரக
மாதிர நிறைய அரசாகி
வாழினும் வறுமை கூரினு நினது
வார்கழ லொழிய மொழியேனே

பூரண புவன காரண சவரி
பூதர புளக தனபார
பூஷண நிருதர் தூஷண விபுதர்
பூபதி நகரி குடியேற

ஆரண வனச ஈரிரு குடுமி
ஆரியன் வெருவ மயிலேறும்
ஆரிய பரம ஞானமு மழகும்
ஆண்மையு முடைய பெருமாளே.

1271. நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை
நத்துவார் சுகத்தில் நலமாக
நட்டமா மனத்தை இட்டமே கொடுத்து
நத்துவாழ் கடற்குள் அணைபோலே

கச்சமே செலுத்தி யச்சமே படுத்து
கட்டஏழ் பிறப்பு விடவேதான்
கற்றுநூ லுகக்க வெட்கமே செறித்த
கட்டனே னினைப்ப தொருநாளே

இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு
இட்டமா லவற்கு மருகோனே
எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை
எக்கிநேர் மடித்த இளையோனே

மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி
மிக்காவாள் படைத்த விழியாலே
வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க
வெற்றிவே லெடுத்த பெருமாளே.

1272. நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க
நற்பரிம ளாதி துற்ற மலர்சூடி
நச்சுவிழி யால்ம யக்கி இச்சைபல பேசி யுற்று
நற்பொருள வாம னத்தர் வசமாகி

வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாஅ ணைத்து
மெத்தமய லாகி நித்தம் மெலியாதே
வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம
மெய்க்கிருபை நீஅ ளிப்ப தொருநாளே

ரத்தினப ணாநி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க
லக்ஷணகு மார சுப்ர மணியோனே
நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்து
நற்றிருநி றேப ரப்பி விளையாடும்

சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர்
சற்குருவி நோத சித்ர  மயில்வீரா
சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த
சத்தியடை யாள மிட்ட பெருமாளே.

1273. நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி
நாமேந்து பாலங் காட்டி அபிராம
நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி
நாயேன்ப்ர காசங் காட்டி மடலூர

மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி
மீதூர்ந்த போகங் காட்டி யுயிரீர்வார்
மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்தகாரந்தீர்க்க
வேதாந்த தீபங் காட்டி அருள்வாயே

ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி
யேடார்ந்த நீபம் போற்றி முகில்தாவி
ஏறோங்கலேழுஞ்சாய்த்தநான் மூன்றுதோளும்போற்றி
யார்வேண்டி னாலுங் கேட்ட பொருளீயும்

த்யாகாங்க சீலம் போற்றி வாயோய்ந்தி டாதன் றார்த்து
தேசாங்க சூரன் தோற்க மயிலேறிச்
சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த
தேவேந்த்ர லோகங் காத்த பெருமாளே.

1274. பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப்
பரவிய ம்ருகமதக் குழல்மானார்
பருமணி வயிரமுத் திலகிய குழையினில்
படைபொரு வனவிழிக் கயலாலே

எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக்
கினிமையொ டுருகவிட் டவமேயான்
இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட்
டிடர்படு வதுகெடுத் தருள்வாயே

சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத்
தொளைபடு கரமலைக் கிளையோனே
துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத்
துணைமுலை தழுவுபொற் புயவீரா

அறியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக்
கையுமொகு மொகுவெனச் சதகோடி
அலகையு முடனடித் திடவடி யயிலெடுத்
தமர்செயு மறுமுகப் பெருமாளே.

1275. பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப்
பத்தைமுட் டிப்படுத்து அயில்மாதர்
பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப்
பற்றுகெட் டுப்பயிர்க் களைபோலும்

கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத்
திட்டுகத் தத்தினுற் றகமாயும்
கட்டமற் றுக்கழல் பற்றிமுத் திக்கருத்
தொக்கநொக் குக்கணித் தருள்வாயே

வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத்
திட்டுமட் டுப்படப் பொருமாயன்
மற்றுமொப் புத்தரித் தெட்டஎட் டப்புறத்
துற்றுஅத் தர்க்கருள் பெருவாழ்வே

செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப்
பெட்டைமுட்டிச்செருச் செயும்வேலா
சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச்
செப்புமுத் தித்தமிழ்ப் பெருமாளே.

1276. பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த
பாணமும் வாளு மேற்ற  இருபார்வை
பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த
பாயலின் மீத ணாப்பி  இதமாடும்

தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு
தூய்மையில் நாயி னேற்கும்  வினைதீரச்
சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு
கோதய ஞான வார்த்தை  அருள்வாயே

சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர
ஜாபதி யாண்மை தோற்க  வரைசாடிச்
சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர
தாபம கீப போற்றி  எனநேமி

மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட
வாசவ னோதி மீட்க  மறைநீப
மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி
வானவர் சேனை காத்த  பெருமாளே.

1277. பாரந றுங்குழல் சோரநெ கிழ்ந்துப
டீரத னம்புள  கிதமாகப்
பாவைய ருந்தியில் மூழ்கிநெ டும்பரி
தாபமு டன்பரி  மளவாயின்

ஆரமு துண்டணை மீதிலிருந்தநு
ராகம்வி ளைந்திட  விளையாடி
ஆகந கம்பட ஆரமு யங்கிய
ஆசைம றந்துனை  யுணர்வேனோ

நாரத னன்றுச காயமொ ழிந்திட
நாயகி பைம்புன  மதுதேடி
நாணம ழிந்துரு மாறிய வஞ்சக
நாடியெ பங்கய  பதநோவ

மாரச ரம்பட மோகமு டன்குற
வாணர்கு றிஞ்சியின்  மிசையேபோய்
மாமுநி வன்புணர் மானுத வுந்தனி
மானைம ணஞ்செய்த  பெருமாளே.

1278. பிரமனும் விரகொடு பிணிவினை இடர்கொடு
பேணிக் கரங்கொண்  டிருகாலும்
பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி
பேதித் தளந்தம்  புவியூடே

வரவிட வருமுட லெரியிடை புகுதரு
வாதைத் தரங்கம்  பிறவாமுன்
மரகத மயில்மிசை வருமுரு கனுமென
வாழ்கைக் கொரன்பும்   தருவாயே

அருவரை தொளைபட அலைகடல் சுவறிட
ஆலிப் புடன்சென்  றசுரேசர்
அனைவரு மடிவுற அமர்பொரு தழுகுட
னாண்மைத் தனங்கொண்  டெழும்வேலா

இருவினை யகலிட எழிலுமை யிடமுடை
யீசர்க் கிடுஞ்செந்  தமிழ்வாயா
இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும்
ஏழைக் கிரங்கும்  பெருமாளே.

1279. பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
பூசைகள் யாதுநி கழ்ந்து  பிழைகோடி
போம்வழி ஏதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
பூரணி காரணி விந்து  வெளியான

நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
ஞானசு வாசமு ணர்ந்து  ஒளிகாண
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
நாயகர் பாதமி ரண்டு  மடைவேனோ

மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
வாணிவ ராகிம டந்தை  அபிராமி
வாழ்சிவ காமச வுந்த்ரி யாலமெ லாமுக பஞ்ச
வலைபு ராரிஇ டந்த  குமையாயி

வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
மேலொடு கீழுல கங்கள்  தருபேதை
வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
வேணியர் நாயகி தந்த  பெருமாளே.

1280. பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
ப்ரியங்கூர வந்து  கருவூறிப்
பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து  பிணமானார்

அருங்கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார நன்றி  தெனமூழ்கி
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்
அலந்தேனை அஞ்சல்  எனவேணும்

இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ
கவெங்கே மடந்தை  யெனவேகி
எழுந்தே குரங்கா லிலிங்கா புரந்தீ
இடுங்கா வலன்றன்  மருகோனே

பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார்
புறஞ்சாய அம்பு  தொடும்வேடர்
புனங்கா வலங்கோ தைபங்கா அபங்கா
புகழ்ந்தோதும் அண்டர்  பெருமாளே.

1281. மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற
மட்டுற்ற சுற்றத்தர்  மனையாளும்
மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு
வைத்துப் பொருட்பற்று  மிகநாட

நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்ப்பற்ற
நெட்டைக் கயிற்றிட்டு  வளையாமுன்
நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப
நிற்றத் துவச்சொற்கள்  அருள்வாயே

திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த
சித்ரத் தமிழ்க்கொற்றம்  உடையோனே
சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல்
தித்திப்பை யிச்சிக்கு  மணவாளா

முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு
முத்தித் துவக்குற்று  மொழிவோனே
முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை
முட்டித் தொளைத்திட்ட  பெருமாளே.

1282. மக்கள்தா யார்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
விக்கும்வாழ் நர்க்குமிக  மனதூடே
மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்
வைத்துவா டச்சமனும்  உறமேவித்

திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி
திக்கஆ விக்களவு  தெரியாமுன்
சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது
சித்ரபா தக்கமலம்  அருள்வாயே

இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை
இட்டுயோ கத்தமரும்  இறையோர்முன்
எச்சரா திக்குமற நிற்குமா யற்குமுதல்
எட்டொணா வித்தைததனை  இனிதீவாய்

பக்கஆர் வத்துடனுள் நெக்குமா டிப்பரவு
பத்தர்பா டற்குருகு  முருகோனே
பக்கம்யா னைத்திருவொ டொக்கவா ழக்குறவர்
பச்சைமா னுக்கினியே  பெருமாளே.

1283. மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்
மலையப் படவிடு  வலியாலே
வனமுற் றினவளை இனநித் திலமலை
வலையத் துகள்வளை  கடலாலே

விதனப் படுமதி வதனக் கொடியற
வெருவிப் பரிமள  அணைமீதே
மெலியக் கலைதலை குலையத் தகுமினி
விரையக் குரவலர்  தரவேணும்

புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர்
புனைவித் தவர்தொழு  கழல்வீரா
பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு
புனமெய்க் குறமகள்  மணவாளா

முதுநற் சரவண மதனிற் சததள
முளரிப் பதிதனில்  உறைவோனே
முதுமைக் கடலட ரசுரப் படைகெட
முடுகிப் பொரவல  பெருமாளே.

1284. மதிதனை யிலாத பாவி குருநெறி நிலாத கோபி
மனநிலை நிலாத பேயன்  அவமாயை
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
வரும்வகை இதேது காயம்  எனநாடும்

விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத கூளன்  எனைநீயும்
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
மிகுமன துரூப தானம்  அருள்வாயே

எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை
இயலொடு கடாவு தீர  குமரேசா
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
இளமையது தானு மாக  நினைவோனே

நதியுடனராவு பூணு பரமர்குரு நாத னான
நடைபெறு கடூர மான  மயில்வீரா
நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு
நவமணி உலாவு மார்ப  பெருமாளே.

1285. மலந்தோற் சலந்போர்த் தெலும்பாற் கலந்தீட்
டிடுங்கூட் டினில்தங்  கிடுமாய
மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற்
றுடன்போக் குறத்தந்  தையுமாதும்

குலந்தாய்க் குடம்பால் பிறந்தேற் றிடுங்கோத்
தடங்கூப் பிடத்தம்  புவியாவும்
குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பால்
குணங்காத் துனைக்கும்  பிடஆளாய்

தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத்
தடந்தாட் புடைத்தன்  பினர்வாழத்
தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத்
திரஞ்சாற் றிநிற்கும்  பெருவாழ்வே

அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட்
டரம்போச் செனக்கன்  றிடும்வேலா
அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க்
கயர்ந்தோர்க் களிக்கும்  பெருமாளே.

1286. மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து
மதனூட லேமு யங்கி  அதிரூப
மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி
மதிசீரெ லாம ழிந்து  கொடிதான

வினைமூடி யேதி ரிந்து புவிமீதி லேஉ ழன்று
விரகால்மெ யேத ளர்ந்து  விடுநாளில்
விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து
வெளிஞான வீடு தந்து  அருள்வாயே

தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று
சிறுபேதை கால்ப ணிந்த  குமரேசா
திரையாழி சேது கண்டு பொருராவ ணாதி வென்ற
திருமால்மு ராரி தங்கை  அருள்பாலா

முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த
முதுசூர் தானை தங்கள்  கிளையோடு
முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்த
முனைவேலி னாலெ றிந்த  பெருமாளே.

1287. மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து
மாடவிய லெனச்சுழன்று  கருவூறி
மாறிபல எனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு
மாதமிது வெனத்தளர்ந்து  வெளியாகி

வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து
வீறுமணி களைப்புனைந்து  நடைமேலாய்
வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து
வேசிவலை தனிற்கலந்து  மடிவேனோ

ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கில்
ஆரவுடல் தனைப்பிளந்த  அரிநேமி
ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை
யானஅர வணைச்சயந்தன்  மருகோனே

சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த
சோமனணி குடிற்சிலம்பன்  அருள்பாலா
தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி
தோள்களிறு கிடப்புணர்ந்த  பெருமாளே.

1288. முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற்
பட்டகரி போலுமத்  தனமாதர்
முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப்
பட்டுமுகில் போல்மனத்  திருள்மூடித்

சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத்
துக்கமுற வேகமிகச்  சுழலாதே
சொற்கள்பல நாவினில் தொட்டுனிரு தாடொழச்
சொற்கமல வாழ்வுசற்  றருள்வாயே

கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப்
புற்றஅதி கோபன்அச்  சுதன்மாயன்
கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக்
கிச்சைமொழி கூறுநற்  குமரேசா

பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப்
பற்றுவிடு மாமறைப்  பொருளானாய்
பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற்
பக்ஷபத தேவர்மெய்ப்  பெருமாளே.

1289. முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
முகுளப டீரக் கோமள  முலைமீதே
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
முதியபு ராரிக் கோதிய  குருவேஎன்று

உருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியும்
உணர்வினொ டூடிக் கூடியும்  வழிபாடுற்
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
யுனதடி யாரைச் சேர்வதும்  ஒருநாளே

மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
வரவிடு மாயப் பேய்முலை  பருகாமேல்
வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி
மதுகையில் வீழச் சாடிய  சதமாபுட்

பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
சகடுதை யாமற் போர்செய்து  விளையாடிப்
பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத
புரமதில் மாபுத் தேளிர்கள்  பெருமாளே.

1290. மூலா நிலமதின் மேலே மனதுறு
மோகா டவிசுடர்  தனைநாடி
மோனா நிலைதனை நானா வகையிலும்
ஓதா நெறிமுறை  முதல்கூறும்

லீலா விதமுன தாலே கதிபெற
நேமா ரகசிய  உபதேசம்
நீடூ ழிதனிலை வாடா மணியொளி
நீதா பலமது  தருவாயே

நாலா ருசியமு தாலே திருமறை
நாலா யதுசெப  மணிமாலை
நாடாய் தவரிடர் கேடா வரிகரி
நாரா யணர்திரு  மருகோனே

சூலா திபர்சிவ ஞானார் யமனுதை
காலார் தரவரு  குருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக
சோதீ நடமிடு  பெருமாளே.

1291. வரிபரந் திரண்டு நயனமும் சிவந்து
வதனமண் டலங்கள்  குறுவேர்வாய்
மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து
வசமழிந் திழிந்து  மயல்கூர

இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க
இனியதொண் டையுண்டு  மடவார்தோள்
இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ
னிலகுநின் பதங்கள்  மறவேனே

விரிபரந் தியங்கு முததியுங் கலங்க
விடமினும் பிறந்த  தெனவானோர்
வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி
விரைபதம் பணிந்து  முறையோஎன்

றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட
உயர்தலங் குலுங்க  வருதோகை
ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி
உலகமும் புரந்த  பெருமாளே.

1292. வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட
வளர்முலை தானு மாட  வளையாட
மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட
மதுரமு தூறி வீழ  அநுராகம்

இருவரு மேக போக மொருவர்த மாக மாக
இதமொடு கூடி மாயை  படுபோதும்
இருகர மாறு மாறும் அறுமுக நீப மார்பும்ட
இருகழல் தானு நானு  மறவேனே

திருநட மாடு காளி பயிரவி மோடி சூலி
திரிபுர நீற தாக  அனல்மோதுஞ்
சிவைகயி லாச வாசி மலைமகள் நாரி பாரி
திருமுலை யாயி தாயி  யருள்பாலா

குருபர நாத னாகி யரனொரு காதி லோது
குணநிதி யாசை நேச  முருகோனே
குறமக ளார பார முகிழ்முலை மீது தாது
குலவிய மாலை மேவு  பெருமாளே.

1293. விழையுமனி தரையுமுனி வரையுமவ ருயிர்துணிய
வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ்  செங்கண்வேலும்
விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி
சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும்  புண்டரீகச்

சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி
சுட்டித் திரிந்திங்ன் தட்டுப் படுங்கொடும்  பங்கவாழ்வும்
தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக
சுத்தப் பெரும்பதம் சித்திக்க அன்புடன்  சிந்தியாதோ

எழுதரிய அறுமுகமும் அணிநுதலும் வயிரமிடை
இட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களும்  துங்கநீள்பன்
இருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்
ரத்னக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ்  செம்பொனூலும்

மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு
முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ்  செங்கைவேலும்
முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு
முக்கட் சிவன்பெறுஞ் சற்புத்ர உம்பர்தந்  தம்பிரானே.

1294. வீணையிசை கோட்டி ஆலமிட றூட்டு
வீரமுனை யீட்டி  விழியார்தம்
வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்
வீழுமயல் தீட்டி  யழலாத

ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை
யாவலுடனீட்டி  யழியாதே
ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி
யானநிலை காட்டி  யருள்வாயே

கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்
கேள்சுருதி நாட்டில்  உறைவோனே
கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு
கீரரியல் கேட்ட  க்ருபைவேளே

சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி
சீதவிரு கோட்டில்  அணைவோனே
சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி
தேவர்சிறை மீட்ட  பெருமாளே.

1295. வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்
வீசுபா ணத்தைநிகர்  எனலாகும்
வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை
யாடிமோ கித்திரியும்  வெகுரூப

கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி
காரமோ டத்தெளிய  அரிதான
கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி
கூடலா கப்பெருமை  தருவாயே

வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ
வாளிபோ டக்கருது  மநுராமன்
வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை
ஊதிமோ கித்துவிழ  அருள்கூரும்

நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு
நீசர்வாழ் வைக்களையும்  இளையோனே
நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரும்
நீபதோ ளொப்பரிய  பெருமாளே.

1296. இத்தரணி மீதிற்  பிறவாதே
எத்தரொடு கூடிக்  கலவாதே
முத்தமிழை யோதித்  தளராதே
முத்தியடி யேனுக்  கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக்  குருநாதா
சத்தசொரு பாபுத்  தமுதோனே
நித்தியக்ரு பாநற்  பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப்  பெருமாளே.

1297. என்பந்தவி னைத்தொடர் போக்கிவி  சையமாகி
இன்பந்தனை யுற்றும காப்ரிய  மதுவாகி
அன்புந்திய பொற்கிணி பாற்கடல்  அமுதான
அந்தந்தனி லிச்சைகொ ளாம்பதஸ்  அருள்வாயே
முன்புந்திநி னைத்துரு வாற்சிறு  வடிவாகி
முன்திந்தியெ னப்பர தாத்துட  னடமாடித்
தம்பந்தம றத்தவ நோற்பவர்  குறைதீரச்
சம்பந்தனெ னத்தமிழ் தேக்கிய  பெருமாளே.

1298. கருப்பத் தூறிப்  பிறவாதே
கனக்கப் பாடுற்  றுழலாதே
திருப்பொற் பாதத்  தநுபூதி
சிறக்கப் பாலித்  தருள்வாயே
பரப்பற் றாருக்  குரியோனே
பரத்தப் பாலுக்  கணியோனே
திருக்கைச் சேவற்  கொடியோனே
செகத்திற் சோதிப்  பெருமாளே.

1299. கருப்பை யிற்சுக் கிலத்து லைத்துற் பவித்து  மறுகாதே
கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க  ளுரையாதே
விருப்ப முற்றுத்துதித்தெ னைப்பற் றெனக்க  ருதுநீயே
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி  மகிழ்வோனே
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச  மரவேளே
பணிக்குலத்தைக்கவர்ப்பதத்துக்களித்த  மயிலோனே
செருப்பு றத்துச் சினத்தை முற்றப்பரப்பு  மிசையோனே
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த  பெருமாளே.

1300. கொடியமத வேள்கைக்  கணையாலே
குரைகணெடு நீலக்  கடலாலே
நெடியபுகழ் சோலைக்  குயிலாலே
நிலைமைகெடு மானைத்  தழுவாயே
கடியரவு பூணர்க்  கினியோனே
கலைகள்தெரி மாமெய்ப்  புலவோனே
அடியவர்கள் நேசத்  துறைவேலா
அறுமுகவி நோதப்  பெருமாளே.

1301. கோடான மேருமலைத்  தனமானார்
கோமாள மானவலைக்  குழலாதே
நாடோறு மேன்மைபடைத்  திடவேதான்
நாயேனை யாளநினைத்  திடொணாதோ
ஈடேற ஞானமுரைத்  தருள்வோனே
ஈராறு தோள்கள்படைத்  திடுவோனே
மாடேறு மீசர்தமக்  கினியோனே
மாதானை யாறுமுகப்  பெருமாளே.

1302. சமய பத்தி வ்ருதாத்தனை  நினையாதே
சரண பத்ம சிவார்ச்சனை  தனைநாடி
அமைய சற்குரு சாத்திர  மொழிநூலால்
அருளெ னக்கினி மேற்றுணை  தருவாயே
உமைமு லைத்தரு பாற்கொடு  அருள்கூறி
உரிய மெய்த்தவ மாக்கிந  லுபதேசத்
தமிழ்த னைக்கரை காட்டிய  திறலோனே
சமண ரைக்கழு வேற்றி  பெருமாளே.

1303. சருவிய சாத்திரத்  திரளான
சடுதிக ழாஸ்பதத்  தமையாத
அருமறை யாற்பெறற்  கரிதாய
அனிதய வார்த்தையைப்  பெறுவேனோ
நிருதரை மூக்கறுத்  தெழுபார
நெடுதிரை யார்ப்பெழப்  பொருதோனே
பொருளடி யாற்பெறக்  கவிபாடும்
புலவரு சாத்துணைப்  பெருமாளே.

1304. சினத்துச் சீரிய  வழிகாணச்
சிரித்துப் பேசியு  மயல்பூண
கனத்துப் போர்செயு  முலைதோணக்
கலைக்குட் பாதியு  மறைவாக
மனத்துக் காறுதல்  வருமாறு
மலைப்பப் பேணியு  மிகவாய
தனத்தைச் சூறைகொள்  மடவார்தம்
சதிக்குப் போம்வழி  தவிர்வேனோ
தெனத்தத் தாதென  எனவேபண்
திருத்தத் தோடளி  இசைபாடும்
புனத்துக் காவல்கொள்  குறமாதின்
புணர்ச்சிக் கேயொரு  வழிதேடி
இனத்துக் காவலர்  அறியாமல்
இணக்கித் தோகையை  மகிழ்வோயென்
றெனக்குத் தாளிணை  அருள்வாய்சூர்
இறக்கப் போர்செய்த  பெருமாளே.

1305. தீதுற் றேயெழு  திங்களாலே
தீயைத் தூவிய  தென்றலாலே
போதுற் றாடும  நங்கனாலே
போதப் பேதைந  லங்கலாமோ
வேதத் தோனைமு  னிந்தகோவே
வேடப் பாவைவி  ரும்புமார்பா
ஓதச் சூதமெ  றிந்தவேலா
ஊமைத் தேவர்கள்  தம்பிரானே.

1306. துள்ளுமத வேள்கைக்  கணையாலே
தொல்லைநெடு நீலக்  கடலாலே
மெள்ளவரு சோலைக்  குயிலாலே
மெய்யுருகு மானைத்  தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத்  தெளிவோனே
செய்யகும ரேசத்  திறலோனே
வள்ளல்தொழு ஞானக்  கழலோனே
வள்ளிமண வாளப்  பெருமாளே.

1307. தேனியல்சொற்  கணிமாதர்
சேவைதனைக்  கருதாதே
யானெனதற்  றிடுபோதம்
யானறிதற்  கருள்வாயே
வானவருக்  கரசான
வாசவனுக்  கினியோனே
ஆனைமுகற்  கிளையோனே
ஆறுமுகப்  பெருமாளே.

1308. நாரியர்க ளாசையைக்  கருதாதே
நானுனிரு பாதபத்  மமுநாட
ஆரமுத மானசர்க்  கரைதேனே
ஆனஅநு பூதியைத்  தருவாயே
காரணம தானவுத்  தமசீலா
கானகுற மாதினைப்  புணர்வோனே
சூரர்கிளை தூளெழப்  பொரும்வேலா
தோகைமயில் வாகனப்  பெருமாளே.

1309. நாளு மிகுத்த  கசிவாகி
ஞான நிருத்த  மதைநாடும்
ஏழை தனக்கு  மநுபூதி
ராசி தழைக்க  அருள்வாயே
பூளை எருக்குமதிநாக 
பூண ரளித்த  சிறியோனே
வேளை தனக்குஉ  சிதமாக
வேழ மழைத்த  பெருமாளே.

1310. நித்தமுற் றுனைநினைத்து  மிகநாடி
நிட்டைபெற் றியல்கருத்தர்  துணையாக
நத்தியுத் தமதவத்தின்  நெறியாலே
லக்யலக் கணநிருத்தம்  அருள்வாயே
வெற்றிவிக் ரமவரக்கர்  கிளைமாள
விட்டநத் துகரனுக்கு  மருகோனே
குற்றமற் றவருளத்தில்  உறைவோனே
குக்குடக் கொடிதரித்த  பெருமாளே.

1311. நீலங்கொள் மேகத்தின்  மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண்  டதனாலே
மால்கொண்ட பேதைக்குன்  மணநாறும்
மார்தங்கு தாரைத்தந்  தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண்  டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங்  குலகாலா
நாலந்த வேதத்தின்  பொருளோனே
நானென்று மார்தட்டும்  பெருமாளே.

1312. பட்டுப் படாத மதனாலும்
பக்கத்து மாதர்  வசையாலும்
சுட்டுச் சுடாத  நிலவாலும்
துக்கத்தி லாழ்வ தியல்போதான்
தட்டுப் படாத திறல்வீரா 
தர்க்கித்த சூரர்  குலகாலா
மட்டுப் படாத மயிலோனே
மற்றொப்பி லாத  பெருமாளே.

1313. பரவைக் கெத்தனை  விசைதூது
பகரற் குற்றவர்  எனமாணுன்
மரபுக் குச்சித  ப்ரபுவாக
வரமெத் தத்தர  வருவாயே
கரடக் கற்பகன்  இளையோனே
கலைவிற் கட்குற  மகள்கேள்வா
அரனுக் குற்றது  புகல்வோனே
அயனைக் குட்டிய  பெருமாளே.

1314. பிறவியலை ஆற்றினிற்  புகுதாதே
பிரகிருதி மார்க்கமுற்  றலையாதே
உறுதிகுரு வாக்கியப்  பொருளாலே
உனதுபத காக்ஷியைத்  தருவாயே
அறுசமய சாத்திரப்  பொருளோனே
அறிவுளறி வார்க்குணக்  கடலோனே
குறுமுனிவ னேத்துமுத்  தமிழோனே
குமரகுரு கார்த்திகைப்  பெருமாளே.

1315. புத்தகத் தேட்டிற் றீட்டி  முடியாது
பொற்புறக் கூட்டிக் காட்டி  அருள்ஞான
வித்தகப் பேற்றைத் தேற்றி  அருளாலே
மெத்தெனக் கூட்டிக் காக்க  நினைவாயே
தத்தைபுக் கோட்டிக் காட்டி  லுறைவாளைச்
சற்கரித் தேத்திக் கீர்த்தி  பெறுவோனே
கைத்தலத் தீக்குப் பார்தது  நுழையாத
கற்பகத் தோப்புக் காத்த  பெருமாளே.

1316. பொன்னை விரும்பிய  பொதுமாதர்
புன்மை விரும்பியெ  தடுமாறும்
என்னை விரும்பிநி  ஒருகால்நின்
எண்ணி விரும்பவு  மருள்வாயே
மின்னை விரும்பிய  சடையாளர்
மெய்யின் விரும்பிய  குருநாதா
அன்ஜை விரும்பிய  குறமானை
அண்மி விரும்பிய  பெருமாளே.

1317. மனைமக்கள் சுற்ற  மெனுமாயா
வலையைக்க டக்க  அறியாதே
வினையிற்செ ருக்கி  அடிநாயேன்
விழலுக்கி றைத்து  விடலாமோ
சுனையைக்க லக்கி  விளையாடு
சொருபக்கு றத்தி  மணவாளா
தினநற்ச ரித்ர  முளதேவர்
சிறைவெட்டி விட்ட  பெருமாளே.

1318. வாரிமீ தேயெழு  திங்களாலே
மாரவே ளேவிய  அம்பினாலே
பாரெலா மேசிய  பண்பினாலே
பாவியே னாவிம  யங்கலாமோ
சூரனீள் மார்புதொ  ளைந்தவேலா
சோதியே தோகைய  மர்ந்தகோவே
மூரிமால் யானைம  ணந்தமார்பா
மூவர்தே வாதிகள்  தம்பிரானே.

1319. வானப் புக்குப் பற்றும ருத்துக்  கனல்மேவு
மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப்  பிறவாதே
ஞானச் சித்திச் சித்திர நித்தத்  தமிழாலுன்
நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப்  புரிவாயே
கானக் கொச்சைச் சொற்குற விக்குக்  கடவோனே
காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப்  பொரும்வேலா
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத்  தொடையோனே
தேவச் சொர்க்கச் சக்கர வர்த்திப்  பெருமாளே.

÷க்ஷத்திரக்கோவை

1320. கும்ப கோணமொ டாரூர்சி தம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு  சிவகாசி
கொந்து லாவிய ராமேசு ரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர்ப ரங்கிரி  தனில்வாழ்வே

செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ  செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவாவி னன்குடி
குன்று தோறுடன் மூதூர்வி ரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில்  வருதேவே

கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர  வயலூர
கந்த மேவிய போரூர்ந டம்புரி
தென்சி வாயமு மேயாய கம்படு
கண்டு யூர்வரு சாமீக டம்பணி  மணிமார்பா

எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால்ச வுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு  துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துலகு
எங்கு மேவிய தேவால யந்தொறு பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar