Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குசேலர் பகுதி-9 குசேலர் பகுதி-11 குசேலர் பகுதி-11
முதல் பக்கம் » குசேலர்
குசேலர் பகுதி-10
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மார்
2011
05:03

அந்த பட்டியல் தான் என்ன? பிராமணரே! செல்வந்தர்களே ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க இயலும். அவ்வாறு வருபவர்கள் கைகளில் தங்கக்காப்பு அணிந்திருக்க வேண்டும். காதுகளில் மகர குண்டலங்கள் ஒளி வீச வேண்டும். பத்து விரல்களிலும் நவரத்தினங்களால் ஆன மோதிரங்கள் அணிந்திருக்க வேண்டும். மார்பில் தங்க மாலைகள் ஒளி வீச வேண்டும். முத்தாரம் அணிந்திருக்க வேண்டும். பட்டாடைகளை உடுத்தியிருக்க வேண்டும். பல்லக்கில் வர வேண்டும். குடைபிடிக்க பணியாட்கள் வேண்டும், என்று அவர்கள் சொன்னதை குசேலர் கேட்டும் அமைதியாக நின்றார்.அவருள் இருந்த கிருஷ்ணபக்தி மட்டும், எப்படியேனும், நம் கண்ணன் நம்மைக் காண சம்மதிப்பான் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.மன்னர்கள் அவரது உணர்வைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்தனர்.பிராமணரே! நாங்கள் சொன்னதை நீர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறோம். சரி...ஐயா! உம் கூற்றுப்படி, கிருஷ்ணர் உம்முடன் படித்ததாகவே இருக்கட்டும். என்றோ ஒருநாள் படித்தார் என்பதற்காக, உம்மைக் காண எப்படி வருவார்? நீர் அவர் நினைவில் நிற்க வேண்டுமே! நேற்று சாப்பிட்ட உணவே இன்று மறந்து போகிறவர்களே உலகில் அதிகம். நீர் பால்யத்தில் அவருடன் படித்ததை அவர் நினைவு வைத்திருப்பார் என்பதை எப்படி நம்புகிறீர்? அப்படி அவர் உமக்கு நெருக்கமான நண்பராக இருந்திருந்தால் இதுவரை உமக்கு ஏதாவது கடிதங்கள் அனுப்பியிருக்கிறாரா? உம்மைப் பற்றி விசாரிக்க தூதுவர்களை அனுப்பியிருக்கிறாரா? அன்றைக்கு ஏதோ உம்மோடு கிருஷ்ணர் பழகியிருக்கிறார். ஆனால், இப்போது அவரது தகுதியே வேறு. அந்த தேவேந்திரனே வந்தாலும் கூட எங்களைப் போல் காத்து நின்றாகத்தான் வேண்டும்! என்றனர்.

குசேலர் இப்போதும் பதில் சொல்லாமல் நின்றார்.இதைக் கண்ட மன்னர்கள் மீண்டும் தங்கள் பேச்சில் கடுமையைக் கூட்டினர். பெரியவரே! நீர் அந்தணர்! அந்தணர்க்கு கற்றல், கற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட அறுவகை தொழில்கள் உள்ளன. அந்த தொழிலை ஒழுங்காகச் செய்து நீர் பிழைத்திருக்க வேண்டியது தானே! அதை விடுத்து பெரும் பொருளின் மீது மையல் கொண்டு கண்ணனைக் காண, இவ்வளவு தூரம் நீர் உடம்பை வருத்தி வந்திருக்க வேண்டுமா? என்றனர்.குசேலரின் மனம் இதைக் கேட்டு என்ன பாடு பட்டிருக்கும்? அவரா பேராசைக்காரர். ஒரு விஷயத்தில் மட்டும் தானே அவருக்கு பேராசை. அதுதான் கிருஷ்ண தரிசனம். தன் நண்பனை ஒரே ஒருமுறை எட்ட நின்று பார்த்தால் கூட போதும்! அவர் சந்தோஷமாக ஊர் திரும்பி விடுவாரே!மவுனம் மிகப்பெரிய ஆயுதம். பிறர் நமக்கு கோபமூட்டும் போது, யார் ஒருவன் உணர்ச்சிவசப் படாமல் இருக்கிறானோ அவனே பெரிய வீரன் என்பார் சுவாமி விவேகானந்தர். இந்த பொன்மொழிக்கேற்ப, குசேலர் இந்த அவச்சொற்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு எம்பெருமானுக்காக காத்து நின்றார்.அப்போது வாயிற்காவலர்கள் மன்னர்களை அடக்கினர்.நிறுத்துங்கள்! யாரும் எதுவும் பேசக்கூடாது. பரமாத்மாவின் அரண்மனையில் மன்னர்களுக்கு தான் கட்டுப்பாடு! இவரைப் போன்ற வேதம் கற்ற பிராமணர்கள் எந்த நேரமும் இங்கு வரலாம். அவர்களுக்கு பரமாத்மா நிச்சயம் காட்சி தருவார், என்றனர். மன்னர்கள் வாயடைத்து நின்றார்கள்.அந்த துவாரபாலகர்களுக்கு மகான்களின் அருமை பற்றி மிக நன்றாகத் தெரியும். அவர்களின் முன்அனுபவம் அப்படி! ஜெய விஜயர்களாக அவர்கள் வைகுண்டத்தில் காவல் காத்த போது, சனகாதி முனிவர்களைத் தடுக்கப்போக, சாபமடைந்து, ராட்சஷப் பிறப்பெய்தி, பரமாத்மாவையே எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்ததே! அவர்கள் தானே கம்சனாகவும், இரண்யனாகவும், இரண்யாட்சனாகவும்
பிறந்தார்கள்.

குசேலரைத் தடுக்கப் போக, மீண்டும் ஒருமுறை ராட்சஷப் பிறவி எடுக்கும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா என்ன?அவர்கள் குசேலரின் மனம் சாந்தியடையும் வகையில் பேசினர்.வேதங்களை எல்லாம் கற்றுணர்ந்தவரே! கிருஷ்ண தரிசனத்தின் மூலம் பிறவித்துன்பத்தை கடந்து சென்று விடலாம் என்பதை உணர்ந்தவரே! உமது வருகை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சிறியவர்கள் அறியாமல் பேசிய வார்த்தையை பெரியவர்கள் நினைவில் கொண்டால் துன்பமே மிஞ்சும். நீர் அதனைப் பொருட்படுத்தமாட்டீர் என்பதை நாங்கள் அறிவோம். உம்மைப் போன்ற ஞானிகளின் தரிசனம், பல தீர்த்தங்களில் நீராடிய பலனைத் தரும். மூன்று காலங்களையும் உணர்ந்தவரே! சிறந்த ஞானத்தை உடையவரே! உண்மை என்னும் பரிசுத்த ஆடை அணிந்தவரே! வரங்களைத் தருபவரே! எங்களுக்கு நீர் ஆசியளிக்க வேண்டும். உமக்கு எங்கள் நமஸ்காரம், என்று கூறி வணங்கிய அவர்கள், ஐயனே! சற்றுக் காத்திரும். கிருஷ்ணரிடம் உமது வருகை பற்றி சொல்லி, தங்களை அழைத்துச் செல்கிறோம், என்றனர்.குசேலர் மகிழ்ந்தார். ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.கிருஷ்ணா! பரந்தாமா! புண்டரீகாக்ஷõ (தாமரை மலர் போன்ற முகத்தை உடையவர்), பத்மநாபா... உன் தரிசனம் எனக்கு கிடைத்து விடுமா! பிறந்த பலனை நான் அடைவேனா!.அவர் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, துவார பாலகர்கள் அரண்மனைக்குள் சென்றனர். கண்ணபிரான் இப்போது இருப்பது அந்தப்புரத்தில். அவருக்கு எட்டு தேவியர். ருக்மணி, பாமா, ஜாம்பவதி உள்ளிட்டோர். அங்கே செல்ல வேண்டுமானால், இவர்கள் 72 வாயில்களைக் கடந்தாக வேண்டும். அந்த வாசல்களின் நிலைகள் தங்கத்தால் ஆனவை. அவர்கள் அழகான வேலைப்பாடுகள் கொண்ட அந்தப்புர அறைவாசலை அடைந்தனர்.

 
மேலும் குசேலர் »
temple news

குசேலர் பகுதி-1 மார்ச் 28,2011

குழந்தை தன் முன்னால் நின்ற ஒவ்வொருவரையும் விழித்து விழித்துப் பார்த்தது. அதன் பார்வை தீர்க்கமாக ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-2 மார்ச் 28,2011

அவந்தி நகரத்தில் இருந்த மலையில் கோயிலில் மட்டுமே நாம் காணும் யாளி என்னும் மிருகம் கூட உண்டு. சிங்கம், ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-3 மார்ச் 28,2011

குருகுலத்தில் கல்வி கற்கும் நேரம் தவிர, அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுவார் கள். அப்படி பேசும் ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-4 மார்ச் 28,2011

சாந்தீப முனிவரின் வாக்கிற்கு ஏற்பவே கண்ணனுக்கு அருமையான வாழ்வு அமைந்தது. அவன் துவாரகாபுரியின் ... மேலும்
 
temple news

குசேலர் பகுதி-5 மார்ச் 28,2011

குசேலர் வீட்டுக் குழந்தைகளுக்கு, அவரது பக்கத்து வீட்டு குழந்தைகள் அணிந்திருப்பது போல் அழகிய தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar