Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாவை உணர்த்தும் தத்துவம்! தினமும் ஒரு புது கிளி!
முதல் பக்கம் » தகவல்கள்
மார்கழியின் சிறப்பம்சம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2013
03:12

மார்கழித் திங்கள் தேவர்களுக்கு வைகறைப் பொழுது. இந்த மாதம் முழுவதும் நாம் செய்யும் தெய்வ வழிபாடுகள். பண்மடங்கு பலனைப் பெற்றுத் தரும். அதிகாலை எழுந்து நீராடுவதும், வாசல் தெளித்து தினம் ஒரு கோலம் போட்டு, சாணப் பிள்ளையார் படித்து வைத்து, பூசணிப் பூ வைத்து வழிபடுவதும் மார்கழியின் ஸ்பெஷல். முற்காலத்தில் எல்லோரு வீட்டிலும் பூசணிப் பூ வைப்பது இல்லை. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை கல்யாணத்துக்காக காத்திருக்கிறார்களோ, அவர்கள் வீட்டின் முன் மட்டும் பூசணிப்பூ வைப்பார்களாம். அவர்களைப் போன்றே பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் வீட்டார் இதைப் புரிந்து கொள்வர். தைமாதம் பேசி முடிப்பார்களாம்.  மார்கழியின் மற்றொரு சிறப்பம்சம் திருப்பாவை. திருவெம்பாவை பாடல்கள் பாடி வழிபடுவது. திருப்பாவையை அருளியது ஆண்டாள். திருவெம்பாவை மாணிக்கவாசகரால் அருளப்பட்டது. இவை இரண்டுமே பாவை நூல்கள். இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. இந்த நூல்களின் முதல் பாடல்களில், ஆண்டாள் தனது திருப்பாவையில் மா என்ற எழுத்தைக் கொண்டு மார்கழித் திங்கள்.... எனத் துவங்குகிறாள். இது மாணிக்க வாசகரை நினைவுப்படுத்துகிறது. அவரோ ஆ என்ற எழுத்தை முன்வைத்து ஆதியும் அந்தமும்... என்று தொடங்குகிறார். இது ஆண்டாளைச் சிறப்பிக்கிறது எனச் சிலாகிப்பார்கள் ஆராய்ச்சி அறிஞர்கள்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar