Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: சக்கை போடு போடுங்க! இனிமே ... விருச்சிகம்: வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் விருச்சிகம்: வெற்றியை நாளை ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
துலாம்: சிகரம் தொடலாம் விதையாய் எழலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2013
02:12

பணிகளை சுதந்திரமாக செய்யும் விரும்பும்  துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசியின் சின்னம் தராசு. உங்கள்  மனமும் நியாயத்தின் பக்கமே நிற்கும். உங்கள் ராசி நாயகன் சுக்கிரன், தனது நட்பு வீடான மகரத்தில் இருக்க புத்தாண்டு மலர்கிறது. இதனால், கடந்த ஆண்டை விட அவர் மூலம் இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. செல்வாக்கு மிகுதியும். உறவினர்கள் வகையில் அனுகூலங்களும் நிறைந்திருக்கும்.ஏழரைச் சனியால் விழுந்தாலும் விதை போல் முளைத்தெழுந்து சிகரம் தொடுவீர்கள்.  கடந்த ஆண்டு பிற்பகுதியில் குருபகவான்  உங்கள் ராசிக்கு 9-ம் இடமான மிதுனத்திற்கு வந்தார். அங்கு அவர் மகிழ்ச்சியை தந்திருப்பார். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க உறுதுணையாக இருப்பார். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். அதே வேளையில் குருபகவான் தற்போது வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் அவரால்  நற்பலன்கள் முழுமையாக கிடைக்காது. அவர் மார்ச் 12ல், வக்கிர நிவர்த்தி அடைந்து முன்னேற்றத்தை தருவார். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. ஜூன் மாதம் 12-ந் தேதி குருபகவான் இடம் பெயர்ந்து 10-ம் இடமான  கடகத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல  முடியாது. அங்கு அவர் பொருள் விரயத்தையும், இழப்பையும் தரலாம். மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமையும். அதன் மூலம் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மறைந்து சுறுசுறுப்பு ஏற்படும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். அவரால் உடல் உபாதைகள் வரலாம். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு உருவாகலாம். வெளியூர் வாசம் ஏற்படும். இந்த ஆண்டும், அவர் அதே இடத்தில்தான் இருப்பார். அதைக்கண்டு அஞ்ச வேண்டாம். மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும். சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் பொருளாதார வளத்தைக் காணலாம். எடுத்த காரியம் சிறப்படையும். தொழில் நல்ல முன்னேற்றம்  காணலாம். மேலும் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை சனிபகவான் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே. மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.நிழல் கிரகமான ராகு, தற்போது சனிபகவானோடு இணைந்து உங்கள் ராசியில் இருக்கிறார். அவர் உடல் உபாதையையும், உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பையும் தரலாம். ஆனால், அவர்கள் மீது குருபகவானின் பார்வை விழுவதால் அவர்கள் கெடு பலனைத் தரமாட்டார்கள். ஜூன்20 அன்று ராகு 12-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு அவர் வெளியூர் பயணத்தையும். எதிரிகளால் இடையூறையும் ஏற்படுத்தலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 7-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். அவரால்  அலைச்சல், மனவேதனையும் வரலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம். ஜூன்20 அன்று, கேது மீனத்திற்கு சென்று நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் பொதுவாக, இந்த ஆண்டு நாம் ஏற்கனவே சொன்னபடி நன்மைகள் அதிகரிக்கும். பொருளாதார வளம் பெருகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். உங்கள் செல்வாக்கு சிறப்பாகவே இருக்கும். ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு வீண்  விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  வீட்டுக்குத் தேவையான அனைத்து வசதி களும் கிடைக்கும். தம்பதியினர் இடையே  ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவி கரமாக இருப்பர். மனைவி வகையில் சிற்சில ஊடல்கள் வரலாம். ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு அந்த மனக்கசப்பும் மறையும். அன்யோன்யம் பெருகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் ஜூன் மாதத்திற்குள் கைகூடும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்களும், வியாபாரிகளும் சிறப்பான நிலையை அடைவர். அதிக  வருமானத்தை காணலாம். இது ஏழரை சனி காலம் என்பதால், எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு  வகையில் எதிர்பார்த்த அனுகூலம் ஜூன்  மாதத்திற்குள் கிடைக்கும். கடுமையான போட்டி இருக்கத்தான் செய்யும். சற்று கவனமும்,  பொறுமையும், போட்டியாளர்களுக்கு தெரியாமல் அவர்களை எதிர்கொள்ளும் வேலைகளைச் சரிவரச் செய்தால், பாதிப்பு இல்லாமல் செய்யலாம்.

பணியாளர்கள்: பணியாளர்கள் தற்போது வளர்முகமாகவே உள்ளனர். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். வேண்டிய பதவி,  சலுகைகளை ஜூன் மாதத்திற்குள் கேட்டுப்  பெறுங்கள். அதே போல் வேலை இன்றி இருப்பவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் பளு அதிகாரிக்கலாம். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். பாதுகாப்பு மற்றும் காவல் துறையில் இருப்பவர்கள் இந்த ஆண்டு  இறுதியில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பர்.

கலைஞர்கள்: வசதியுடன் வாழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும்.

பெண்கள்: வீட்டுச்செலவுக்குரிய பணம் ஜூன் வரை தடையின்றி கிடைக்கும். அதையடுத்த காலத்தில் ஆரம்ப காலத்தின் அளவுக்கு இராது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்களே! அதுபோல், இப்போது சேமிக்கும் பணம் பின்னால் பயன்படும். திருமணமாகாத பெண்களுக்கு வருட ஆரம்பத்தில் நிச்சயமாக வாய்ப்புண்டு.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிறப்பை காணலாம். ஆனால், அடுத்த ஆண்டு சற்று சிரத்தையுடன் படிக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலனை குருவின் பார்வை மூலம் பெறலாம்.

விவசாயிகள்:விவசாயம்சிறப்படையும். அக்டோபருக்கு பிறகு நிலம், வீட்டு மனை வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

பரிகாரம்:சனிக்கிழமைகளில், சனிபகவானுக்கு பரிகாரம்  செய்வதுடன் பெருமாள் கோயிலுக்குச் சென்று  வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில், லட்சுமி தாயாரை வழிபடுங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வியாழக்கிழமைகளில், தட்சிணா மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். காக்கைக்கு  அன்னமிட்டு சாப்பிடுங்கள்.

பரிகாரப் பாடல்:
திருமகளே திருப்பாற்கடல்
ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகு எல்லாமும்
என்றென்றும் வாழ வைக்கும்
ஒருமகளே! நெடுமால் உரத்தே
உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது
நின்தாளை வையே.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar