Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பிகையை வேண்டி ராமபிரான் ... தமிழ் வருடங்களுக்கு சரியான ஆங்கில ஆண்டுகள்! தமிழ் வருடங்களுக்கு சரியான ஆங்கில ...
முதல் பக்கம் » துளிகள்
தரணியாள வந்த தர்மத்தின் தலைவன்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஏப்
2011
10:04

மனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி : "ராமன் என்பதற்கு ஆனந்தமாக இருப்பவன், ஆனந்தம் தருபவன் என்று இருவிதமான பொருள்கள் உண்டு. மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது, புறச்சூழ்நிலைகள் ஒருவனை பாதிப்பதில்லை. கைகேயி பெற்ற வரத்தால் பட்டு உடுத்தி பட்டாபிஷேகத்திற்கு தயாரான ராமன், மரவுரி கட்டி காட்டுக்கு கிளம்பிச் சென்றார். முகத்தில் எந்த வருத்தமும் இல்லை. மலர்ந்த தாமரை மலரைப் போல புன்னகையுடன் கிளம்பினார். கவிச்சக்கரவர்த்தி கம்பர் இதனை "சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை முகத்தினன் என்று குறிப்பிடுகிறார். கடவுளாகிய மகாவிஷ்ணு, தர்மத்தை மனிதனால் கடைபிடிக்க முடியும் என்று வாழ்ந்து காட்டுவதற்காக ராமனாக அவதரித்தார். எந்த இடத்திலும் ராமன் "இது என் அபிப்ராயம் என்று சொன்னதே இல்லை. "தர்மம் இப்படி சொல்கிறது "மகான்கள் இவ்விதம் சொல்கிறார்கள் என்று தான் சொல்வார். தந்தை தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ராமன் காட்டுக்குச் சென்று தர்மத்தை நிலைநாட்டினார். எந்தநிலையிலும் அவர் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில் மலர்ச்சியையும் இழந்ததே இல்லை.

மகிழ்ச்சி தந்த ராமாயணம் : மூதறிஞர் ராஜாஜி "சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதினார். அவர் ராமாயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ""சீதை, ராமன், அனுமன், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு செல்வமோ நிம்மதியோ இல்லை. இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. கங்கையும், காவிரியும் ஓடும்வரையில் சீதாராம சரிதம் பாரத நாட்டில் இருந்து அனைவரையும் தாய் போல் பக்கத்தில் இருந்து காக்கும். நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றைவிட "சக்கரவர்த்தி திருமகன் எழுதி முடித்தது தான் மேலானபணி என்பது என் கருத்து. அதுவே என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தது. சீதாபிராட்டியைத் தியானிப்போமாக. நம்முடைய பிழைகள் அதிகம். அவளுடைய கருணையன்றி நமக்கு கதியில்லை. "குற்றம் செய்யாதார் எவர் தாம் என்று கேட்ட அவள் நம்மையும் காப்பாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த சீதை :கம்பர் பாடிய கம்பராமாயணம் புகழ்பெற்றது. அவர் தன் நூலில், சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கிச் சென்ற நிகழ்ச்சியை விவரிக்கும்போது, வால்மீகியிடம் இருந்து வேறுபடுகிறார். ராவணன் சீதையைக் கையால் தீண்டாமல், பர்ணசாலையோடு (சீதை தங்கியிருந்த இடம்) பெயர்த்துக் கொண்டு போனதாக குறிப்பிடுகிறார். ஒரு கொடியவன் ஒரு பெண்ணிடம் அதர்மமாக நடந்து கொண்டான் என்று சொல்லக்கூட, கம்பரின் அன்பு நெஞ்சம் இடம் தரவில்லை. துளசிதாசர் தன்னுடைய இந்தி ராமாயணத்தில் ராவணன் தூக்கிச் சென்றது உண்மையான சீதை அல்ல என்று கூறுகிறார். ராவணன் வந்த போது பிராட்டியார், மாயா சீதையை உருவாக்கி விட்டு மறைந்து விட்டதாகவும், ராமன் அக்னி பரீட்சை நடத்தும்போது உண்மையான சீதை தீயில் இருந்து வந்தததாகவும் குறிப்பிடுகிறார். இந்த ராமாயணம் வடநாட்டு மக்களிடம் பெரிதும் பரவியுள்ளது.

காட்டுக்குச்சென்ற கட்டுச்சோறு : ராமபிரான் காட்டுக்குச் செல்லும்போது கட்டுச்சோறு கொண்டு சென்ற விபரம் உங்களுக்கு தெரியுமா? கோசலையின் மணிவயிறு, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றது. அவள் தன் பிள்ளையைக் கண்ணின் மணிபோல காத்து வந்தாள். எந்தப் பிள்ளை வெளியூருக்குக் கிளம்பினால் அப்பா தன் பங்குக்கு பணமும், அம்மா பசிக்கு கட்டுச்சோறும் கொடுத்து அனுப்புவது அக்கால வழக்கம். ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது தசரதர் பிள்ளைக்கு "சத்தியம் என்னும் பணத்தை தந்தார். கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள். "ஒருநாள் இருநாள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப்போகாதது இது என்று ராமனிடம் சொன்னாள். ""என் கண்ணே! ராகவா! நீ எந்த தர்மத்தை பக்தியோடு அனுசரித்து வந்தாயோ அந்த தர்மத்தையே கட்டுச்சோறாக தருகிறேன். அதை என்றென்றும் பின்பற்று. அது உன் உடனிருந்து காக்கும், என்று ஆசியளித்தாள்.

ராமராஜ்ய மன்னர்கள் : ராவணவதம் முடிந்து ராமர்,சீதை, லட்சுமணர் அயோத்தி திரும்பினர். ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தேறியது. மங்களஇசை முழங்கியது. அந்தணர்கள் வேதம் ஓதினர். சங்குகள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தவஞானிகள் மந்திரம் சொல்லி புனிதநீரால் ராமனுக்கு அபிஷேகம் செய்தனர். தம்பியர் சூழ்ந்து நின்று வெண்சாமரம் வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான். அனுமன் ராமபிரானின் திருவடிகளைத் தாங்கி நின்றார். அப்போது குலகுரு வசிஷ்டர் கிரீடத்தை ராமனின் தலையில் சூட்டி மகிழ்ந்தார். அக்காட்சியைக் கண்ட அனைவரும் தங்களையே மன்னர் போல உணர்ந்து மகிழ்ந்தனர். தங்கள் தலையிலேயே கிரீடம் வைத்தது போல எண்ணினர். ஏனென்றால், ராமராஜ்யத்தில் ஏற்றத்தாழ்வு என்பதே கிடையாது. அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர். கடைநிலையில் உள்ள பிரஜையாக இருந்தாலும், ராமபிரான் அவருடைய எண்ணத்திற்கும் மதிப்பளித்து அரசாட்சி நடத்தினார்.

பத்துதலை ராணனை ஒற்றைத்தலை ராமன் வென்றான் : தர்மத்தை ஒருவன் பின்பற்ற வேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற மனநிலை வேண்டும். தர்மவாதிகளை உலகம் பரிகாசம் செய்தாலும், விடாமல் பின்பற்றும் தைரியம் வேண்டும். ராமபிரான் வாழ்வில் எத்தனையோ துன்பத்தைச் சந்தித்தாலும் தர்மத்தைக் கைவிடவில்லை. எவன் ஒருவன் தர்மத்தைக் காக்கிறானோ அவனைத் தர்மம் காக்கும். ராமபிரானும், ராவணனும் தர்மத்தைப் பின்பற்றும் விஷயத்தில் எதிர் துருவங்கள். ராமனுக்கு ஒரு தலை. ராவணனுக்கு பத்துத்தலை. ஒருதலையிடம் பணிவும், தர்மமும் இருந்தது. பத்துதலையிடம் ஆணவமும், அதர்மமும் இருந்தது. அதர்மம் ஆயிரம் வழிகளில் தர்மத்தைச் சுற்றி வளைத்தாலும், தர்மமே இறுதியில் வெற்றி பெறும் என்பதை ராமகாவியம் வலியுறுத்துகிறது. இதையே "தர்மம் தலை காக்கும் என்று இன்றும் போற்றுகின்றனர்.

அருள் கொடு அயோத்தி ராமா! ராமநவமி பிரார்த்தனை : ராமநவமியன்று மட்டுமல்ல! யாரொருவர் தினமும் காலையில் இந்தபாராயணத்தைப் பக்தியுடன் படிக்கிறாரோ, அவர் பக்தர்களில் சிறந்த ரத்தினமாவார். ரகுகுல திலகமான ராமச்சந்திரமூர்த்தியின் திருவருளால் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு அடைவார்.

* புன்சிரிப்பும், இனிய பேச்சும்
கொண்டவரே! செந்தாமரைக்
கண்களால் அருள்பவரே! அகன்ற நெற்றியை உடையவரே! நீண்ட
குண்டலங்களை அணிந்தவரே!
ரகுவம்ச திலகமே! ராமபிரானே! உமது மலர்முகத்தைத்
தியானிக்கிறோம்.
* பகைவர்களுக்கு பயத்தைக்
கொடுப்பவரே! வேண்டியவர்
விரும்பும் வரங்களைத்
தருபவரே! சிவதனுசை முறித்து
சீதாதேவியை திருமணம்
செய்தவரே!, ராமபிரானே! உமது மலர்முகத்தை வணங்குகிறோம்.
* பத்மம், அங்குச ரேகைகளைக் கொண்ட கைகளால்
பக்தர்களுக்கு மங்களத்தை
அருள்பவரே! ஞானியர்களின் மனம் என்னும் வண்டால்
சேவிக்கப்படுபவரே! கவுதம
மகரிஷியின் மனைவியான
அகல்யாவின் சாபத்தைப்
போக்கியவரே! ராமபிரானே! உமது மலர்முகத்தைப் போற்றுகிறோம்.
* வேதங்களால் துதிக்கப்படுபவரே! நீலவண்ணம் கொண்டவரே!
ரகுவம்ச நாயகரே! நீலரத்தினம் பதித்த ஆபரணங்களை
அணிந்தவரே! பக்தியில்சிறந்தவர்களால்
பூஜிக்கப்படுபவரே! முத்துக்கள் இழைத்த சிம்மாசனத்தில்
வீற்றிருப்பவரே! பட்டாபிஷேக
ராமபிரானே! உமது மலர்முகத்தைச் சிந்திக்கிறோம்.
* எல்லாவித பாவங்களையும்
போக்குபவரே! கிரகதோஷத்தை
நீக்குபவரே! பார்வதிதேவியும்,
பரமேஸ்வரனும் பக்தியுடன் பூஜிக்கும் திருநாமத்தைக் கொண்டவரே!
விஷ்ணுசகஸ்ர நாமத்தால்
ஆராதிக்கப்படுபவரே! ராமபிரானே! உமது மலர்முகத்தை எண்ணி
மகிழ்கிறோம்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar