பதிவு செய்த நாள்
15
பிப்
2014
03:02
நாகப்பட்டினம்: நாகை,கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு நடந்த தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாசி மகத்தை முன்னிட்டு,நாகை சவுந்திரராஜ பெருமாள், நவநீத கிருஷ்ணன், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள், அந்தனப்பேட்டை நித்யகல்யாண பெருமாள்,பாப்பாக்கோவில் கஸ்தூரி ரெங்கநாதர், திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள்,ஆவராணி அனந்தநாராயண பெருமாள், நாகை காயரோகணநாதர், அகஸ்தீஸ்வரர், நடுவதீஸ்வரர்,சட்டையப்பர், தாய் மூகாம்பிகை ஆகிய கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் சுவாமிகள் ஊர்வலமாக நாகை கடற்கரைக்கு வந்தனர். கடற்கரையில் குழுமியிருந்த திரளான பக்தர்கள் சுவாமிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.பின் சுவாமிகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு தீபாரதனை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.