பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
துலாம் (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)
சூரியன் இந்த மாதம் நன்மை தரக் காத்திருக்கிறார். புதன் மார்ச் 28ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். செவ்வாய், சுக்கிரன், குரு ஆகியோர் மாதம்முழுவதும் நற்பலன் வழங்குவர். சூரியனால்பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். மதிப்பு மரியாதை கூடும்.ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் சுக்கிரனால் மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும்.உறவினர்களால் உதவி கிடைக்கும். மார்ச் 30க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் மார்ச் 27 வரை அலைச்சல் இருக்கும். தொழில் ரீதியாக, வெளியூர் பயணமும், அதன்மூலம் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பொருளாதார வளம் சிறப்படையும். கூட்டாளிகளிடையேஒற்றுமை ஏற்படும். மார்ச் 30,31ல் திடீர் பணவரவுக்கு இடமுண்டு.பணியாளர்கள், பணிச்சுமையைச் சந்தித்தாலும்மதிப்புடன் நடத்தப்படுவர். கடின உழைப்பின் மூலம் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மார்ச் 27க்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்கள் புகழ் பாராட்டு கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதி கள் மக்கள் நலப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்பது நன்மை தரும். மார்ச் 28-ந் தேதிக்கு பிறகு கல்வி வளர்ச்சி உண்டாகும். விவசாயிகள் போதிய வருமானத்தை காண்பீர்கள். நெல், கோதுமை, சோளம் போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.பெண்கள் இந்த மாதம் சிறப்பான பலனைக் காணலாம். உங்களால் குடும்பம் சிறக்கும்.கணவரின் அன்பு கிடைக்கும்.
நல்ல நாள்: மார்ச் 15,16,19,20,24,25,30,31 ஏப். 1,2,8,9,10,11,12
கவன நாள்: ஏப்.3,4,5
அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: செந்தூரம், மஞ்சள்
வழிபாடு: ராமர், சனிபகவானை வழிபட்டு வாருங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். முருகன் கோவிலுக்கும் சென்று வாருங்கள்.