பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
12:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருக்கல்யாணத்திற்கு, இணையத்தில் டிக்கெட் விற்பனை வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. திருக்கல்யாணம், மே 10ம் தேதி, காலை நடக்கிறது. இதை காண, 6,000 பேர், தெற்கு கோபுரம் வழியாக இலவசமாக அனுமதிக்கப்படுவர். தவிர, 500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வாங்கும், 1,500 பேர், மேற்கு கோபுரம் வழியாகவும், 200 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வாங்கும் 4,000 பேர், வடக்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர். இணையம் மூலம் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறலாம். www.maduraimeenakshi.org/TicketBooking.php என்ற இணைய முகவரியில், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவு செய்தவர்களுக்கு, கட்டண சீட்டு உறுதி செய்யப்பட்டு, அதற்கான செய்தி, மொபைலில் குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் அனுப்பப்படும்.