கோவை: தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழாவை ஒட்டி நேற்று பூச்சாட்டுதலுடன் கொடியேற்றப்பட்டது. கோவை - அவிநாசி ரோட்டிலுள்ள தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா, நேற்று முன் தினம் காலை 5.30 மணிக்கு மகா கணபதி வேள்வியுடன் துவங்கியது. நேற்று காலை சித்திரை திருவிழாவையொட்டி, சிங்கம் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் கொடி, மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் கொடிமரத்தில், சிவாச்சாரியர்களால் ஏற்றப்பட்டது. ஏப்., 17 அன்று மாலை 6.30 மணிக்கு அக்கினிச்சாட்டும், ஏப்., 18 அன்று மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. ஏப்., 21 முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், அம்மன் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஏப்., 23ம் தேதி காலை 7 மணிக்கு சக்தி கரகம், அக்னிசட்டி ஊர்வலம் நடக்கிறது.