திருவெண்ணெய்நல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2014 12:04
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் லட்ச தீபவிழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் திருக்குளக்கரையிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 10ம் தேதி மகோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார சேவைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6:15 மணிக்கு லட்ச தீப விழா, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. 18ம் தேதி மகோற்சவ விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அகோபிலமட நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.