பதிவு செய்த நாள்
16
ஏப்
2014
12:04
சின்னசேலம்: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சின்னசேலத்தில் கன்னிகா பரமேஸ்வரி, செல்வமுருகன், வேத வள்ளி மாரியம்மன், செங்குந்தர் ஆக்கிய விநாயகர், மாரியம்மன், தென்பொன்பரப்பி சொர்ண புரீஸ்வரர், சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. செல்வமுருகன் கோவிலில் 7 அடி உயரத்தில் முருகன், வள்ளி தெய்வானை அலங்காரமும், விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மன் கோவிலில் மீனாட்சி அலங்காரமும், செங்குந்தர் ஆக்கிய விநாயகர் கோவிலில் வினாயகருக்கு தங்கக்கவசம் அணிவித்தனர். கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வெள்ளிக்கவசம் அணிவித்து, ஆயிரம் தீபமேற்றியும், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரருக்கு அண்ணாமலையார் அலங்காரம், மாரியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம் நடந்தது. பெருமாள் கோவிலில் ராம நவமி உற்சவமும், சிவன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாடுகள் நடத்தினர்.