பத்ரகாளியம்மன் கோவிலில் பூக்குண்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2014 11:04
பொள்ளாச்சி : பொள்ளாச்சி போடிபாளையம் குளத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில், பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பொள்ளாச்சி ஜமீன்ஊத்துக்குளி போடிபாளையம் குளத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து பூவோடு எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் காலை 10:00 மணிக்கு அம்மன் சப்பரம் ஊர்வலமும், மாலை 5:00 மணிக்கு தர்மராஜா கோவிலில், பச்சை போடுதல்; மாலை 6:00 மணிக்கு பூக் குண்டம் திறப்பு விழா, இரவு 9:00 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் ஊர்வலம், பூக்குண்டம் வளர்த்தல், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை அக்னி கும்பம் முத்தரித்து வந்து காலை 8:00 மணிக்கு பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், விரதமிருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். காலை 9:00 மணிக்கு அன்னதானம், மாலை 4:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. வரும் 18ம் தேதி மகா அபிேஷக ஆராதனை, மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும் நடக்கிறது.