பதிவு செய்த நாள்
17
ஏப்
2014
12:04
போடி : போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா, நேற்று முன்தினம் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. போடி பரமசிவன் கோயில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. பெரியாண்டவர் கோயிலில் இருந்து சிவன் மற்றும் திருஉண்டியலை நகரின் முக்கிய ரோடு வழியாக மலை கோயில் கொண்டு சென்றனர். நேற்று முதல் விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு சிவனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. தக்கார் சுரேஷ், விழா கமிட்டி தலைவர் வடமலை ராஜய பாண்டியன், துணைத் தலைவர்கள் ரவீந்திரநாத், சுப்பிரமணியசுவாமி கோயில் சிறப்பு ஆலோசகர் விஜயபிரதீப் முன்னிலை வகிக்கின்றனர். செயலாளர்கள் கதிரேசன், பேச்சிமுத்து, முத்துராமலிங்கம், பொருளாளர்கள் ஜெயபால், குணசேகரன், முத்துராஜன், துணைச்செயலாளர்கள் பழனிமுருகன், ராஜாராம். நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சங்கர், சிங்கார வேலன் பழனி பாதயாத்திரை குழுவினர், லயன்.சம்பத், வர்த்தகர்கள் சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் தனசேகரன், இணை செயலாளர் வேல்முருகன், அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள் பூ வியாபாரிகள் சங்கம், ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழா ஏப்., 25 வரை நடக்கிறது.