கோவை: தடாகம் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, கருமாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரமடை மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, திரளான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.