பதிவு செய்த நாள்
18
ஏப்
2014
11:04
திருச்சி: வயலூர் முருகன் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம் கோலாகலமாக நேற்று நடந்தது. திருச்சி அருகே வயலூர் முருகன் கோவில், அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, திருப்புகழ் பாட அருளி ஸ்தலம். கடந்த, 13ம் தேதி முதல் இங்கு பங்குனி உத்திரம் திருவிழா நடக்கிறது. 15ம் தேதி, வள்ளி நாயகி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு, 8 மணிக்கு முருகப்பெருமான், வேலன், வேடன், விருந்தனாக வருதல் நிகழ்ச்சியும், யானை விரட்டல் காட்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக வள்ளி திருக்கல்யாணம், நேற்று காலை, 10 மணிக்கு மேல், 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். திருமணமாகாத இளம் பெண்கள், வாலிபர்கள் ஏராளமானோர் இக்காட்சியை காண வந்திருந்தனர். இத்திருக்கல்யாணத்தை பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். குழந்தைகள் தத்து கொடுத்து, தத்து பெறுதல் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது.