திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோயிலில் மூலவர் சன்னதியை ஒட்டி ஒரு குகை உள்ளது. அதில் ஒரு பீடத்தில் அமைந்துள்ள ஐந்து லிங்கங்களை முருகப் பெருமான் பூஜிப்பதாக ஐதிகம். அதனால் மானிட பூஜை கிடையாது. இக்குகையின் மேற்புறத்தில் ஒரு சிறு இடைவெளி உள்ளது. இதன் வழியாக தேவர்கள் சென்று தினமும் 5 லிங்கங்களையும் பூஜித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.