பதிவு செய்த நாள்
19
ஏப்
2014
11:04
திருத்தணி;வேணுகோபால சுவாமி கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருத்தணி அடுத்த, அகூர் கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள், 15 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து, கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த, 16ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று காலை, 8:30 மணிக்கு, விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.இரவு, 7:30 மணிக்கு, வேணுகோபால சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கும்பாபிஷேக விழாவில், அகூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.