பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
10:04
அத்திமாஞ்சேரிபேட்டை: அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று, 18ம் நாள் போர் நடந்தது. இதில், துரியோதணன் கொல்லப்பட்டான். சபதம் நிறைவேறியதால், விரித்த கூந்தலை பாஞ்சாலி நேற்று முடிந்தாள். அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் உள்ளது திரவுபதியம்மன் கோவில். கடந்த 10ம் தேதி, கொடியேற்றத்துடன், அக்னி வசந்த உற்சவம் துவங்கியது. தினசரி மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நடந்தது. 16ம் தேதி அர்ச்சுணன் தபசு நடந்தது. நேற்று காலை மகாபாரத 18ம் நாள் போர் நடந்தது. இதில், துரியோதணன் மற்றும் துச்சாதணன் பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். துரியோதண னின் குருதியை கூந்தலில் தடவி, பாஞ்சாலி தன் சபதத்தை நிறைவேற்றினாள். துரியோதணன் சபையில் விரித்த கூந்தலை நேற்று போர்க்களத்தில் அள்ளி முடிந்தாள். இந்த நிகழ்வு, தெருக்கூத்து கலைஞர்களால் நேற்று நிகழ்த்தப்பட்டது. இதை காண ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர்.மாலை, 6.00 மணியளவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதம் இருந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று காலை தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.