ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கேடய வாகனத்தில் வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2014 11:04
ஸ்ரீபெரும்புதூர்: காங்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்கார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திதர மாத ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆறாம்நாள நேற்று காலை 7:00 மணிக்கு ஆதிகேசவப் பெருமாள் அலங்கரிககப்பட்ட கேடய வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, தேரடி, காந்தி ரோடு, செட்டி தெரு,திருமங்கையாழ்வார் தெரு என நான்கு ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியினை திரளாவோர் கண்டு தரிசித்தனர்.