நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்கோட்டு வேலரின் சன்னதிக்கு அருகில் அர்த்த நாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. யோக வல்ல சித்தர்களால் உருவாக்கப்பட்ட அர்த்த நாரீஸ்வரரின் திருவுருவம் வெண்ணிறமாக காட்சி தருவது சிறப்பு. அத்துடன் அர்த்த நாரீஸ்வரரின் திருவடியில் நீர் ஊற்று ஒன்றும் உள்ளது. அதன் மத்தியில் ஒரு பேழையில் மரகதலிங்கமும் இருக்கிறது. பக்கத்திலுள்ள ஒரு மண்டபத்தின் கற்சுவரில் 9 துவாரங்களுடனான பலகணி உள்ளது. ஆண்டில் 3 நாட்கள் சூரியனின் கதிர்கள் இதன் வழியே அர்த்த நாரீஸ்வரர் மீது விழுகிறது.