பதிவு செய்த நாள்
23
ஏப்
2014
10:04
போடி : போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று திருக்கல்யாணம் நடந்தது. போடி பரமசிவன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சிவனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. நேற்று பரமசிவன், பார்வதி திருக்கல்யாணம் தக்கார் சுரேஷ் தலைமையில் நடந்தது. பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை மற்றும் விழா கமிட்டி தலைவர் வடமலை ராஜய பாண்டியன், செயலாளர்கள் கதிரேசன், பேச்சிமுத்து, முத்துராமலிங்கம், துணைச்செயலாளர் ராஜாராம், பொருளாளர்கள் ஜெயபால், குணசேகரன், முத்துராஜன், மேலமச்சு அரண்மனையை சேர்ந்த விஸ்வநாத பாண்டியன். சந்தியாஸ் மஹால் உரிமையாளர் சம்பத்சந்தியா, நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சங்கர், பழனிமுருகன் ஏஜென்சீஸ் உரிமையாளர் ஜெயராம், நகராட்சி கவுன்சிலர் மகேந்திரன், ராம் புரோட்டா ஸ்டால் உரிமையாளர் அருணாச்சலம், பிச்சங்கரை சொக்கநாதர் கோயில் கமிட்டி பொருளாளர் கணேசன், பாலாஜி பவன் ஹோட்டல் உரிமையாளர்கள் ஜோதிகிரி, பாண்டியராஜ், தேவகுமார், ஆர்.ஏ. ஆயில் ஸ்டோர் உரிமையாளர் ஆறுமுகம்.வர்த்தகர்கள் சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் தனசேகரன், இணை செயலாளர் வேல்முருகன், சிங்கார வேலன் பழனி பாதயாத்திரை குழுவினர், அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள், பூ வியாபாரிகள் சங்கம், ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.