ரெட்டியார்சத்திரம் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கொத்தபுள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, பாலபிஷேகத்துடன், ஏகாந்த சேவை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அஷ்டமி பூஜை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், மல்லீஸ்வரர் கோயிலில், அஷ்டமியை முன்னிட்டு, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.