கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஜெ.,வின் நெருங்கிய தோழியான சசிகலா இன்று தேவசமுத்திரம் காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் சென்று வழிபட்டார். வழக்கம் போல் பக்தர்கள் இங்கு தேங்காய் கட்டுவது போல் அவரும் நேர்த்திக்கடன் செலுத்தினார். பின்னர் காரில் புறப்பட்டு சென்றார். திடீர் வருகை குறித்து நிருபர்கள் கேட்ட போது, இது சக்தி வாய்ந்த தெய்வம் என்றனர். இதனால் வணங்கிட வந்தேன் என்றார் சசிகலா. அ.தி.மு.க., வெற்றிக்காக அவர் வழிபட வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.