Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழவந்தான் பள்ளிவாசலில் மழைவேண்டி ... திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு மே 13ல் வசந்தோற்சவம்! திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு மே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த .. இருக்கும் கோயிலுக்கு இல்லாத பூசாரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2014
05:04

உசிலம்பட்டி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு பூசாரி இல்லாத நிலையில் ஒரு கால பூஜை நடப்பதாக கணக்கு காட்டி வருகின்றனர்.  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஐராவதீஸ்வரர் ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கி.பி., 958 ம் ஆண்டிலிருந்து பாண்டியர்கள், சோழர்கள், நாயக்க மன்னர்கள் இந்த கோயிலில் வழிபாடு நடத்த உதவியதற்கான கல்வெட்டுக்கள் உள்ளன. பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு சொந்தமாக 150 ஏக்கருக்கும் மேலாக மானிய நிலங்களும் உள்ளன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்கு கோயில்கள் வந்தபின் இந்த கோயில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அறநிலையத்துறை அலுவலர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. இங்கிருந்த அர்ச்சகர் குடும்பத்தினர்கள் போதிய வருமானம் இல்லாமல் வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தனர். தொடர் பராமரிப்பு இல்லாததால் நிலங்களில் இருந்து குத்தகை தொகை வசூலிக்கப்படவில்லை. பூட்டப்பட்ட நிலையில் உள்ள இந்த கோயில் ஒருகால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக தினசரி பூஜைக்கு 25 ரூபாய் வீதம் மாதம் 625 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கோயில் முன்பாக அறிவிப்பு போர்டும் வைத்துள்ளனர். சுரேஷ் என்பவர் பூசாரியாக தினசரி காலை 10.00 மணிக்கு ஒருகால பூஜை நடப்பதாக அறிவிப்பு பலகையில் எழுதியுள்ளனர்.

பூசாரியே இல்லை: முன்னாள் டிரஸ்டியாக இருந்த கட்டக்கருப்பன்பட்டியைச் சேர்ந்த பம்பையத்தேவரின் மனைவி சீனியம்மாள் 72, இந்த கோயிலை பராமரித்து வருகிறார். எப்போதும் பூட்டப்பட்டு கிடக்கும் கோயிலின் சாவியும் இவரிடம் தான் உள்ளது. வழிபாட்டுக்கு வருபவர்கள் இவர் மூலமாக கோயிலை திறந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.

சீனியம்மாள் கூறியதாவது
: கணவர் இறந்த பிறகு கோயிலை நான்தான் பராமரித்து வருகிறேன். கோயிலுக்கு ஏராளமான நிலங்கள் இருந்தும் அவை ஆக்கிரமிப்பில் உள்ளன. அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் இந்த கோயில் குறித்து கண்டுகொள்வதில்லை. சில நாட்களுக்கு முன்பாக இங்கு சுரேஷ் என்பவர் பூஜை செய்வதாக இந்த போர்டை வைத்துச் சென்றுள்ளனர். பூஜை நடத்துவதற்கென்று யாரும் இங்கு வருவதில்லை. பக்தர்கள் வந்தால் நான்தான் சூடம் காட்டுவேன். இல்லையென்றால் அவர்களாகவே வழிபாடு நடத்திச் செல்வார்கள் என்றார்.

அறநிலையத்துறை அலுவலர்கள் கூறியதாவது : கோயில் நிலங்கள் குறித்து உசிலம்பட்டி கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் இந்த கோயில் உள்ளது. கணக்கு விடுபடக் கூடாது என்பதற்காக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் சுரேஷ் என்பவர் தற்காலிக பூஜை நடத்துவதாக போட்டுள்ளோம். அர்ச்சகர் விரைவில் நியமிப்போம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar