மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் திருவிழா நடக்கும் கோவில்களில் திருக்கம்பம் நடப்பட்டு பக்தர்கள் வழிபட தொடங்கினர். இதில் கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் மற்றும் மைவாடி மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். இந்த திருவிழாக்கள் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதற்கு அடையாளமாக நேற்று முன்தினம் இரவு 1:00 மணிக்கு கோவில்களுக்கு முன் திருக்கம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.