Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதன் முறையாக ஓட்டளித்த ... திரவுபதியம்மன் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! திரவுபதியம்மன் தீமிதி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கவனிக்க ஐவர் குழு: சுப்ரீம் கோர்ட்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஏப்
2014
11:04

புதுடில்லி: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கவனிக்க, ஐந்து உறுப்பினர் குழுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று அமைத்துள்ளது. மேலும், கோவிலின் நகை இருப்பு விவரங்களை, முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தணிக்கை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருடப்பட்டிருக்கலாம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் என்ற பெருமாள் கோவில் உள்ளது. அப்பகுதியை முன் ஆண்ட, திருவாங்கூர் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலின் பாதுகாப்பு அறைகளில், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், பொக்கிஷங்கள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் அந்த கோவில் நகைகள் மற்றும் பொருட்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. இதில், ஏராளமான நகைகள் மற்றும் பொருட்கள், மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களால், பல காலங்களாக திருடப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதனால் சுப்ரீம் கோர்ட் கவலை அடைந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தை கவனிக்க, ஐந்து உறுப்பினர் குழுவை நேற்று நியமித்தது. மாவட்ட நீதிபதி தலைமையில், கோவிலின் தந்திரி என்றழைக்கப்படும் பூசாரி, கோவிலின் தலைமை காவலர் மற்றும் மாநில அரசின் பரிந்துரையில் நியமிக்கப்படும் இருவர் என, ஐந்து பேர் பொறுப்பில் கோவில் நிர்வாகம் ஒப்படைக்கப் பட்டது.

அம்பலப்படுத்தியவர்: மேலும், கோவிலின் கணக்குகள் மற்றும் நகைகளை தணிக்கை செய்ய, முன்னாள் சி.ஏ.ஜி., வினோத் ராய்க்கு, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியாக பணியாற்றிய இவர், மத்திய அரசின் பல முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர். சமீபத்தில் ஓய்வுபெற்றுள்ள ராய், பத்மநாப சுவாமி கோவில் நகைகளை தணிக்கை செய்ய உள்ளது, பக்தர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
கடையநல்லுார்; கடையநல்லுார் பூமிநீளா சமேத நீலமணிநாதர் (கரியமாணிக்கப்பெருமாள்) கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar