விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மகா சிரவண தீபம் ஏற்றப்பட்டது. திருவோண நட்சத்திரத்தையொட்டி ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கடந்த 22ம் தேதி மதியம் 1:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கனகவல்லி தாயாரோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் 5:30க்கு ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் பெருமாள் கருடகம்பத்தில் எழுந்தருளிய நேரத்தில் மகா சிரவணதீபம் ஏற்றப்பட்டது.விழா ஏற்பாடுகளை பத்திரி பட்டாச்சாரியார் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.