Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாந்தி மந்திரம்!
முதல் பக்கம் » கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
கேன உபநிஷதம் - ஒரு கண்ணோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
04:04

வேதங்கள்!

உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்து கொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊ
டுருவ முடியாத காலத்தின்

1. வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம்
தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா ஸ்திம்ருத்யுமேதி நான்ய: பந்தா
வித்யதேயனாய
    -சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8.

2. ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா:
    -சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5.

அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழைய நூல் இந்தச் சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப்பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்.... அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்), ஆரண்யகம் உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).

1. சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம், 5.260; (சுவாமி விவேகானந்தர் பேசிய மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு; 11 பகுதிகள், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்து வெளியீடு; இனி ஞான தீபம் என்று குறிக்கப்படும்).

2. ஞானதீபம், 3,219.
3. ஞானதீபம், 1.35.

உபநிஷதங்கள்: உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்கள் எழுதியுள்ளார். 15 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.

உபநிஷதம்        வேதம்

ஐதரேய, கௌசீதகி    ரிக்
ஈச, கட, தைத்திரீய,

பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர,  யஜுர்

மைத்ராயணீ, மஹாநாரயண
கேன, சாந்தோக்கிய    சாம

ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய    அதர்வண

கேன உபநிஷதம்:

கேன (யாரால்) என்ற வார்த்தையுடன் ஆரம்பிப்பதால் இது கேன உபநிஷதம் எனப்படுகிறது. இந்த உபநிஷதம் சாமவேதத்தில் உள்ளது. அதன் ஒன்பதாம் பகுதியான தலவகார பகுதியைச் சேர்ந்ததால் தலவகார உபநிஷதம் என்றும் அழைக்கப்படுகிறது. 35 மந்திரங்கள் கொண்ட இந்த உபநிஷதம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மையக்கரு:


உடல் இயங்குகிறது, மனம் இயங்குகிறது- இதனை ஓரளவு புரிந்துகொள்கிறோம். ஆனால் இவை யாரால் இயங்குகின்றன? இந்த உடல்- மனச் சேர்க்கைதான் எல்லாமா அல்லது அதற்குப் பின்னால் யாராவது உள்ளார்களா என்ற கேள்விக்கு விடைகாண முயல்கிறது இந்த உபநிஷதம்.

மொழிபெயர்ப்பு: ஸ்ரீசங்கரரும் ஸ்ரீமத்வரும் கேன உபநிஷத்திற்கு உரை எழுதியுள்ளனர். அவர்களைப் பின்பற்றி ஆச்சாரியர்கள் பலரும் விளக்கங்கள் தந்துள்ளனர்.

இந்த மொழிபெயர்ப்பில் இரண்டு முக்கியமான விஷயங்கள் அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன:

1. தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளாமல் இறைவனிடம் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

2. இலக்கண நியதிகளுக்கு மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

பொருள் விளக்கத்திற்கு எமது மடத்தின் தவமிகு துறவியர் இருவரின் நூல்கள் பேரளவு துணை செய்தன-

1. ஸ்ரீசங்கரரின் உரையைத் தழுவி சுவாமி சர்வானந்தர் எழுதிய ஆங்கில உரை. (சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்து வெளியீடு)

2. சுவாமி பஜானந்தர் எமது ஆங்கிலப் பத்திரிகையான பிரபுத்தா பாரட்டா வில் (1979-1986) எழுதிய  தி இண்டர்கள் விசியன் ஆப் தி வெடிக் சீர்ச் என்ற பகுதியும் அவரது தலையங்கக் கட்டுரைகளும்.

அமைப்பு:

சமஸ்கிருத, மூலம், தமிழ், வடிவம், பதவுரை, பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம், சுருக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வார்த்தை:

உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி எதையும் கூறாமல், எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த உண்மைகள் ஏதோ தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைக்காதவை என்று அவர்கள் கூறுவது போல் உள்ளது இது.

நாம் எத்தகைய மனப்பாங்குடன் உபநிஷதங்களை அணுக வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ, வேத மந்திரங்களின் உண்மையான பொருளை அறிந்துகொள்வது சாத்தியம் அல்ல. பிரார்த்தனைபூர்வமாக, உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனத் தூய்மை பெற்று இறைவனை நோக்கி நாம் முன்னேறமுன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.

1. இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே
    - ஈசாவாஸ்ய உபநிஷதம், 10,13.

 
மேலும் கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?) »
எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் ... மேலும்
 

ஆன்மாவைத் தேடு! ஏப்ரல் 26,2014

நாம் வழிபடுகின்ற பொருள் ஆன்மா அல்ல (1:5-9) என்ற கருத்து இங்கே தொடர்கிறது. ஒரு விக்கிரகத்தை வழிபடுவதுடன் ... மேலும்
 
இந்தக் கதையில் வரும் அக்கினி, வாயு முதலான தேவர்கள் புலன்களுக்கும், தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் ... மேலும்
 

மந்திரங்கள்! ஏப்ரல் 26,2014

சாந்தி மந்திரங்கள்:ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம்கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar