பதிவு செய்த நாள்
12
மே
2014
12:05
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆடம்பர சப்பர பவனி நடந்தது. பெரம்பலூர் மறைவட்டத்தில் மிகவும் பழமையான, பாரம்பரியம் மிக்க, பாளையம் புனித சூசையப்பர் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த, 2ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பங்கு குரு சேவியர் முன்னிலையில், வடக்கலூர் பங்கு குரு யூஜின்டோனி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, 3, 4ம் தேதிகளில், சேலம் சமூக சேவை மைய இயக்குநர் அருள்திரு செல்வம் பிரான்சீஸ் தலைமையிலும், 5ம் தேதி வாளைப்பாடி பங்கு குரு குருசடி சகாயராஜ் தலைமையிலும், 6ம் தேதி துறையூர் பங்கு குரு மைக்கேல் தலைமையிலும், 7ம் தேதி திருவாளந்துறை பங்கு குரு ஆரோக்கியசாமி தலைமையிலும், 8ம் தேதி பாடாலூர் பங்கு குரு ராஜமாணிக்கம் தலைமையிலும், மாலை நேரங்களில் திருப்பலி மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த, 9ம் தேதி கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளர் பிலிப் சந்தியாகு தலைமையில் திருப்பலியும், இரவு ஆடம்பர தேர்பவனியும், கும்பகோணம் மறைமாவட்ட முதன்மைகுரு பாக்கியசாமி தலைமையில் திருப்பலியும், புறத்தாக்குடி விடுதி காப்பாளர் தாமஸ் சைமன் மறையுரையும், இரவு ஆடம்பர தேர் பவனியும் நடந்தது. நேற்று காலை, பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு அடைக்கலசாமி தலைமையில், சிறப்பு திருப்பலியும், மாலை, 5 மணியளவில் தேர் பவனியுடன், கொடியிறக்கமும், நர்கருணை ஆசீரும் நடந்தது. பாளையம், குரும்பலூர், ரெங்கநாதபுரம், அம்மாபாளையம், பெரம்பலூர், சத்திரமனை, வேலூர், கோட்டப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி கத்தோலிக்க க் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.