பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
11:06
விழுப்புரம்: கோலியனூர் ஸ்ரீ ஆதி நாத சுவாமி ஜிநாலய ஜினபிம்ப கோவிலில் பஞ்ச கல்யாண மகோத்சவ நல்லறை பெருவிழா வையொட்டி நேற்று யானை ஊர்வல கலசாபிஷேகம், மகாவீர் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த கோலியனூர் கிராமத்தில் 1008 ஆதிநாத சுவாமி ஜிநாலய ஜினபிம்ப கோவில் அமைந்துள்ளது. இங்கு 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பஞ்ச கல்யாண பிரதிஷ்டா மகோத்சவ நல்லறை பெருவிழா நடக்கிறது. நேற்று காலை 9:00 மணிக்கு ஜின பாலகன் யானை மீது ஊர்வலம், 10:00 மணிக்கு யானையில் ஜலம் கொண்டு வருதல், கர்ப்ப கல்யாண விதானம், ஜென்ம கல்யாண விதானம் நடந்தது. தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மூல கோபுரத்தில் கலசங்கள் வைக்கபட்டு புனித நீர் ஊற்றப்பட்டது.
மதியம் 1:00 மணிக்கு ஜென்மாபிஷேகம், பெயர் சூட்டுதல், தாலாட்டு, பாலகிரீடை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடலில் துணிகள் ஏதுமின்றி துறவரமாக வந்த சுவாமிஜி விஷ்வேஷ்சாகர்ஜி மகராஜ் மற்றும் சிந்தன்ஸ்ரீ மாதாஜி, விசுத்தப்ரபா மாதாஜி ஆகியோர் அருளாசி வழங்கினர். நாளை தீட்சா கல்யாணம், 4ம் தேதி கேவலக் ஞானக் கல்யாணம், 5ம் தேதி மோட்ச கல்யாணங்கள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆதிநாதர் திகம்பர ஜெயின் நிர்வாக அறக்கட்டளை தலைவர் வாஞ்சி அப்பாண்டைராஜ், செயலாளர் மோகன், பொருளாளர் அனந்த குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.