விழுப்புரம் பெருமாள் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழாவில், சுவாமி கருட வாகனத்தில் அருள் பாலித்தார். விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி துவங்கியது. மறுநாள் காலை துவஜாரோகணமும், மாலை அம்ஸ வாகனத்தில் சுவாமி கோவில் வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து, சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று ஆறாம் நாள் உற்சவத்தில் கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.